Thursday, April 24, 2014


நிறைய சொத்துக்கள் சேர்க்கை யாருக்கு..?
நிலத்திற்கு அதிபதி செவ்வாய். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்கள், நாலாம் இடம் வலுவடைந்தவர்களுக்கு நிறைய சொத்துக்கள் சேரும். ஜாதகத்தில் பத்தாமிடம், நான்காமிடம், செவ்வாய் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றவர்கள் ரியல் எஸ்டேட் எனப்படும் நிலம் வாங்கி விற்றல் தொழில் செய்கின்றனர். இதற்கு செவ்வாய் பலம் பெறுவதும் அவசியம். ஜாதகத்தில் சில குறைபாடுகள் இருந்து, ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருப்பவர்கள் பவழம், கோமேதகம் அணியலாம். பவழம் அணிவதால் செவ்வாய் கிரகத்தின் சக்தி இவர்களுக்கு கிடைக்கும். நிலம் சம்பந்தமான காரிய அனுகூலங்கள் கிடைக்கும். கோமேதகம், ராகுவிற்கு உண்டானது. ராகுவை போல கொடுப்பவனும் இல்லை. கேதுவைப்போல் கெடுப்பவனும் இல்லை என்பார்கள். பவழத்தை விட கோமேதகமே ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்கள் சேர்க்கைக்கு சிறப்பானது..இது பணம் தங்காமை,கடன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஏற்றது..

அந்தளவு ராகு நினைத்தால் ஒரேபொழுதில் ஒருவனை கோடீஸ்வர நிலைக்கு உயர்த்தி விடுவார்கள். தந்திரம், முரட்டுத்தனம், குறுக்குவழி அனைத்து சட்ட ஓட்டைகளும் அறிந்தவர் ராகு பகவான். பல மிகப்பெரிய அரசியல் ஊழல்களுக்கு காரணமாக இருந்தவர்கள் பலர் ஜாதகத்தில் ராகுவே கொடுப்பவராக இருந்திருக்கிறார். ராகு புதையல் போல செல்வத்தை தரக்கூடியவர். அக்காலத்தில் பலர் புதையல் எடுக்க கோமேதகத்தை பயன்படுத்தினார்கள். தீயசக்திகளை அடக்கவும், சாபம் உள்ள நிலங்களின் கெட்ட சக்திகளை கட்டுப்படுத்தவும் கோமேதகம் பயன்படுகிறது.

No comments:

Blogger Gadgets