Thursday, June 26, 2014

வாழ்வை வளமாக்கும் - பித்ரு தோஷம் நிவர்த்தி பூஜை ( முன்னோர்கள் வழிபாடு )


இந்த முன்னோர்கள் வழிபாட்டு ( பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை ) முறையானது  சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே  தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன , ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் ஆத்மா தான் ( தர்மம் – கர்மம் – காமம் – தோஷம் ) என்கிற கால புருஷர்களை இயக்குவதும் நம் முன்னோர்களின் ஆத்மா தான் அத்தகைய புண்ணிய ஆத்மாக்களை  வழிபடும் முறைக்கு முன்னோர் வழிபாடு , பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர்.
இப்படிப்பட்ட இந்த கொடிய தோஷம் எப்படி வருகிறது  என்றால்


நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும்.

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. லக்னம்பஞ்சமம்சப்தமம்பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது. பிதுர் தோஷம் தன்னையும்தன் குடும்பத்தையும்,  குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும். 
இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள்மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டுபெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. எதிர் பாராத இழப்புகள், திடீர் தீ விபத்து, எதிர் பாராத கால்நடைகள் இழப்பு போன்றவைகளும்.  இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.பரம்பரை பூர்விக சொத்துக்களை அடைவதில் தாமதம், போதிய பயிர் விளைச்சல் இன்மை போன்றவை ஏற்படுகின்றன.
இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்:


 கருச்சிதைவு செய்துகொண்டால் இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல்,  திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பாபெரியப்பா,அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும்பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.
பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.


சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் சிரார்த்தம் என்று சொல்லப்படும் முன்னோர்கள் வழிபாடு போன்ற பித்ருக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருத்தல் அல்லது சிரத்தை குறைவுடன் செய்தல் காரணமாகும்.
ஜாதகத்தையும்நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
முறையாக பித்ரு பூஜை செய்தால்ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல்நீங்கள் என்னதான்  வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு.


நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதிபட்சம்தமிழ் மாதம் அறிந்துஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். நமது முன்னோர்களும்,பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. 


 
. இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும்அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம்விசாகம்சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானதுபித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.


பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்


1. பிதா - தகப்பனார்
2. 
பிதாமஹர் - பாட்டனார்
3. 
ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
4. 
மாதா - தாயார்
5. 
பிதாமஹி - பாட்டி
6. 
ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
7. 
மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்
8. 
மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
9. 
மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
10. 
மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
11. 
மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
12. 
மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி


மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம்   (கடன் ).  கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம். 

காராகத்துவங்கள் – பத்தாம் பாவம்-ஜோதிட விளக்கம் 

பத்ததின் பலன்வி யாரம்
சீவனம் பகரும் கீர்த்தி
வித்தைஆக் கிளையே வாண்மை
மிகுந்தஆ கமஞா னங்கள்
நித்திரை கர்மம் மானம்
பூஷணம் நிதியோ டெல்லாம்
கோத்தவன் கதிர்மால்  நீலன்
குருவையும் பேணிப் பாரே!
பத்தாம் இடத்தைக் கொண்டு – வர்த்தகம், பிழைப்பு, புகழ், கலை அறிவு, தூக்கம், தொழில், கெளரவம், விருது, பொருட்செல்வம் ஆகியவற்றைப் பற்றி அறியலாம். சூரியன், புதன், குரு, சனி  ஆகியோரின் நிலையையும் ஆராய்ந்து பார்த்து பலன்களை சரியாக தீர்மானிக்க முடியும்.
பத்தாம் இடம் ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம், தசம கேந்திரம் என்றெல்லாம் கூறப்படும்.
முந்திய சொன்ன சேதி
மொழிந்திடப் பத்தைப் பார்க்க
வந்திடும் கர்மக் கோளன்
வரும்பல வீன மாகச்
சிந்தைசஞ் சலவா னாகும்
செய்தொழில் ஆசா ரங்கள்
சொந்தமாய் அவனி டத்தில்
தோற்றிடும் வகையைஸ் சொல்லே!
பத்துக்குடையவன் வலு இழந்து நின்றிருந்தால் அந்த ஜாதகன் நிலையற்ற மனமுடையவாயிருப்பான்.
செய்தொழிலும் ஆசார அனுஷ்டானங்களும் அவனிடத்தில் நிலை பெற்றிருக்க மாட்டாது.
குருபுகர் கதிர்மால் இன்னொளி
குணம்பல வீன மாக
ஒருபன்னி ரண்டில் ஆறில்
எட்டினில் ஊறி நின்றால்
வருவது பொல்லாக் கன்மம்
வழங்குவன் பத்தில் ராகு
எரிகதிர் கூடக் காசி
யாத்திரை இவனே போவன்!
குருவும் சுக்கிரனும் சூரியனும் புதனும் வலு இழந்து 6, 8, 12 ஆம் ஸ்தானங்களில் மறைந்து நின்றிருந்தால், அந்த ஜாதகன் பாவத் தொழில் செய்து பிழைப்பான்.
பத்தாம் இடத்தில் இராகுவோ, சூரியனோ ஈரியிருந்தால் அந்த ஜாதகன் காசி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை போவான்.
மீனமே தானம் பத்தாய்
விளங்கிடும் மதியாய் மோட்சம்
தானவன் சுங்க னோடும்
கூடியே உச்சம் சார்ந்து
ஆனகேந் திரத்தில் ஏற
அவன்கங்கா ஸ்தானம் ஆடப்
போனவன் என்று பிள்ளை
பூமியில் வருநாள் பேசே.
மீன ராசி பத்தாமிடமாய் அமைந்திருக்க அந்த மீன ராசியில் சந்திரன் நின்றிருந்தால், அந்த ஜாதகன் முக்திப் பேற்றை அடைவான்.
பத்துக்குடையவன் சுக்கிரனுடன் சேர்ந்து உச்சம் பெற்றுக் கேந்திர ஸ்தானங்களில் நின்றிருந்தால், அந்த ஜாதகன் கங்கையில் நீராடும் பாக்கியம் பெறுபவன் என்று அவன் பிறந்த அன்றைக்கே அழுத்தமாக எடுத்துரைக்கலாம்.
வியமதில் மாலை அந்த
வியபதி கர்ம மாகில்
நயமுளோர் புதனைப் பார்க்க
நல்லபுண் ணியங்கள் செய்வான்!
தயவோடு பத்தில் பூர்ண
சந்திரன் இருந்து வாழ்ந்தால்
அயனிட்ட அதிகா ரத்தால்
அவனும்கா சிக்கே செல்வான்!
பன்னிரெண்டாமிடத்தில் புதன் அமர்ந்திருக்க அந்த புதனைச் சுபர்கள் பார்வையிட பன்னிரெண்டுக்குடையவன் பத்தாமிடத்தில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகன் புண்ணியச் செயல்கள் பல செய்வான்.
வளர்பிறைச் சந்திரன் பத்தாமிடத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகன் பிரமதேவன் விதித்த விதிப்படி காசிக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வான்.
பாவர்கள் பலவா னாகப்
பத்தினில் சாக சங்கள்
சீவர்கள் பலவி னங்கள்
திருந்தநற் கருமம் செய்யான்!
கோவயில் பத்தின் கோளன்
குருபுதன் இவரைக் கொண்டு
ஆவதே யாக கன்மம்
அளிக்கச்சிந் திக்க லாமே!
பாவக் கிரகங்கள் பலம்பெற்று பத்தாமிடத்தில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் வீரதீரச் செயல்கள் புரிபவனாவான்.
பத்தாம் இடத்தில் உள்ள கிரகங்கள் பலவீஎனமுற்று நின்றிருந்தால், அந்த ஜாதகன் செய்வான திருந்தச் செய்யாதவாக இருப்பான்!
பத்துக்குடையவன், குரு , புதன் ஆகியோரின் நிலைமையை வைத்து அந்த ஜாதகன், யாகம் முதலிய தெய்வீக கர்மங்களைச் செய்வானா, செய்ய மாட்டானா என்று நிர்ணயிக்க வேண்டும்.

விநாயகர் அகவல்



விநாயகர் அகவல்
சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்

பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில் 
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி 
கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து 
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி 
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் 
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறு ஆதாரத்து அங்குச நிலையும் 
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து 
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலணி அதனிற் கூடிய அசபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை 
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் 
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும் 
எண்முகமாக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்கு 
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக் கொன்றிடம் என்ன 
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி 
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட 
வித்தக வினாயக விரை கழல் சரணே! 

சர்வ தோஷ பரிகாரத் தலம்!

புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அம்முனிவருக்கு பால சயனக் கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலத்துக்கு திருச்சிறுபுலியூர் என்று பெயர் ஏற்பட்டது.

தில்லையில் நடராஜப் பெருமானை வேண்டி பல காலமாகத் தவம் செய்துவந்தார் வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர். 

அவருக்குக் காட்சி தந்த பரமனிடம், தமக்கு முக்திப் பேறு அளிக்க வேண்டும் என்று கோரினார். 

அதற்கு பரமன், மகாவிஷ்ணு பால சயனத்தில் கோயில் கொண்ட இத்தலத்தே தவம் புரியுமாறு வழி கூறினார். 

அதன்படி இந்தத் தலம் வந்த வியாக்ரபாதர், கடுந்தவத்தில் ஈடுபட்டார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், அருள்புரிந்து அருகே வைத்துக் கொண்டார். 

ஆதிஷேசனின் அம்சமான பதஞ்சலி முனிவரும் பெருமாளின் அருளுக்குப் பாத்திரராகி, பெருமாளின் அருகேயே இருந்துகொண்டார். 

தில்லையில் சிவநடம் கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும், இங்கே பெருமாளின் அருகே கருவறையில் காட்சி தருகின்றனர்.

பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக 

ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து

 செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு

 காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். 

விளைவு- இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக 

மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு 

தவமிருந்தார். 

அவர் தவத்துக்கு இரங்கி தரிசனமளித்த பெருமாள், 

ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு குழந்தையாக 

பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார்.

 புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் வழிபட்டதாலும்,

 பெருமாள் அம்முனிவருக்கு பால சயனக் கோலத்தில் காட்சி 

தந்ததாலும் இத்தலத்துக்கு திருச்சிறுபுலியூர் என்று பெயர் ஏற்பட்டது. 

இங்கே பெருமாளுக்கு அருள்மாகடல் அமுதன் , சல சயனப் பெருமாள், கிருபா சமுத்திரப் பெருமாள் எனப் பல பெயர்கள். 

தாயாருக்கு தயாநாயகி, திருமாமகள் நாச்சியார் எனப் பெயர்கள்.

 வில்வ மரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. 

பெருமாள் இங்குள்ள நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்புரிகிறார். 

சலசயனம், பால வியாக்ரபுரம், திருச்சிறுபுலியூர் என்றெல்லாம் இந்தத் தலத்துக்கு திருநாமங்கள் ஏற்பட்டன.

விமானம்: நந்தவர்த்தன விமானம்.. இறைவன் நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். 

அவரை தரிசனம் கண்டவர்கள் வியாக்ரபாதர், வியாசர், ஆதிசேஷன்.

முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப் பெரிய வடிவினனாக ஆனந்த சயனத்தில் காட்சி தருகிறார். 

இரண்டாவது தலமான இங்கே பெருமாள் பால சயனத்தில் குழந்தை வடிவினனாகக் காட்சி தருகிறார் என்பது இந்தத் தலத்தின் சிறப்பு.

ஆதிசேஷனுக்கு கருடனிடமிருந்து அபயம் அளித்த தலம்.

இத்தலத்திற்கு நேர் மாறாக மிகப் பெரிய திரு உருவத்தை திருக்கண்ணமங்கையில் காணலாம்.

வில்வம் தல விருட்சம். 

சர்வ தோஷ பரிகாரத் தலம்.

கன்வ மஹரிஷி மோட்சம் அடைந்தத் தலம். 

விஷ்ணு பாதம் இடம் பெற்றுள்ள தலம். 

இராகு , கேதுவின் மூதாதையரான ஆதிசேஷன் தனியாக எழுந்தருளியுள்ள தலமாகும். 

தேங்காய் – ஆறு மஞ்சள் வாழைப் பழம் – துளசி – மலர் மாலை ( மஞ்சள் சாமந்தி / முல்லைப் பூ ) , நெய் , ஊதுவத்தி, அவல் கற்கண்டு மற்றும் வெண்ணெய் கொடுத்து அர்ச்சனை  செய்திட வேண்டும். 

இனிப்பு பூந்தி ( 150 gram) , டைமண்ட் கற்கண்டு ( 150 கிராம் )

அர்ச்சனைக்குப் பின் கருடாழ்வார் முன்பாக ஐந்து நெய் அகல் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். 

கொடி மரமருகே நின்று இனிப்பு பூந்தியினை ( கட்டை விரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரல் ) மூவிரலால் ஆலயத்திற்கு வருவோருக்கும் , இறைவனை வழிபட்டு செல்வோருக்கும் வழங்கிட வேண்டும். 

அதன் பின்னரே, ஆலயத்தினை இடமிருந்து வலமாக மும் முறை வலம் வர வேண்டும். கொடி மரத்தினருகே விழுந்து வணங்கவும்.

வணங்கிய பின், ஆலய வாசலின் அருகே நின்று டைமண்ட் கற்கண்டையும் முன்பு போல் மூவிரலால் வழங்கவேண்டும். அதன் பின்னர், மறுபடியும் கொடி மரத்தின் அடியில் விழுந்து வணங்கி, இருபது நிமிடங்கள் அமர வேண்டும்.

அதன் பின், ஆலயத்தில் இருந்து வெளிவர வேண்டும். 

இராகு கேது தோஷம் தவிர்த்து மற்ற தோஷங்களுக்கு இவ்வழி முறை பின்பற்றவும். 

48 நாட்கள் கழித்து, மீண்டும் இவ்வாலயம் வந்து வழிபடவும்.

அன்று அர்ச்சனை – ஐந்து தீபங்கள் ஏற்றுதல் – இடமிருந்து வலமாக மூன்று சுற்று – கொடி மரம் அருகே விழுந்து வணங்குதல் - 

அதன் பின் அன்ன தானம் – ஏழை குழந்தை (9) / விதவை (9 ) / முதியோர்களுக்கு – ஆண் (9), பெண் (9)

புதிய உடை தானம் - ஏழை குழந்தை / விதவை / முதியோர்களுக்கு

செய்திட வேண்டும். 

அன்ன தானம் செய்திட்ட இடத்தினை உணவருந்திய பின், இலைகள் நாமே எடுத்திட வேண்டும். பணியாள் வைத்திடக் கூடாது. நாமே அவ்விடத்தினை சுத்தம் செய்திட வேண்டும்.

மீண்டும் கொடி மரம் அருகே கற்பூரம் அல்லது நெய் தீபம் ஏற்றி வணங்கி இருபது நிமிடம் அமர்ந்து, மனம் உருகி விஷ்ணு சஹஸ்ர நாமம் / பஜ கோவிந்தம் படித்து பின்னர் இருபத்தோராம் நிமிடம் ஆலயம் விட்டு இல்லம் திரும்பவும்.

இல்லம் திரும்பிய பின்னர், சூரனை வென்ற திருக்குமரனுக்கு ஒரு நெய் அகல் தீபமேற்றி வணங்கி, அத்தீபம் அணையும் வரை எங்கும் செல்லாமல், அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்து, கற்பூரம் ஏற்றி பரிகாரம் / தோஷ நிவர்த்தி பூசையினை பூர்த்தி செய்யவும்.

அனைத்து பிரச்னைகளுக்கும் இப்பரிகார முறை மேற்கொள்ளவும்.

 பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் 

இந்தத் தலத்துக்கு வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், காலசர்ப்ப 

தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் 

தடை, நவக்கிரக பரிகாரம் என, பல்வேறு தடை சிரமங்களைச் 

சந்திப்பவர்களுக்கு இந்தப் பெருமான் அருள்புரிந்து ஆறுதல் 

தருவான் என்பது நம்பிக்கை. தீராத நோய், மனநலம் 

பாதிக்கப்பட்டவர்களும், இங்கே வந்து, சிறப்பு வழிபாடுகளைச் 

செய்து, நலம் பல பெற்றுச் செல்கின்றனர்.

அமைவிடம் : அறந்தாங்கி ரயில்பாதையில், கொல்லுமாங்குடி ஸ்டேஷனிலிருந்து 3 கிலோ மீட்டர் துரத்தில் அமைந்துள்ளது. 

மாயவரத்திலிருந்து டவுன் பஸ்ஸில் கொல்லுமாங்குடி போகலாம். 

இங்கு தங்கும் வசதிகள் ஒன்றுமில்லை. 

மாயவரத்தில் தங்கி தரிசிப்பதே நன்று.

செவ்வாய் தோஷ நிவர்த்திகள்



விவாகம் செய்வதற்கு ஸ்திரி- புருஷரின் ஜாதகங்களை மிக நுண்ணியமாக ஆராய்ந்து பரிசீலித்து தசப் பொருத்தங்களும், முக்கியமாக செவ்வாய் தோஷத்தையும் நல்லமுறையில் அறிந்துகொண்ட பிறகே மணமக்களுக்கு விவாஹம் செய்ய வேண்டும். 

பொருத்தங்களையும், செவ்வாய் தோஷத்தையும் கவனியாது விவாஹம் செய்யப் படுமானால், மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமையின்மை, சந்ததி யின்மை, சுகமின்மை, மணமக்கள் பிரிந்திருத்தல், இல்வாழ்க்கையின் தன்மையை நுகராதிருத்தல், ஒருவரை விட்டு ஒருவர் இயற்கை எய்தல் போன்ற நல மற்ற செயல்கள் நடை பெற்று விடுகின்றன. 

ஒருசில மண மக்களுக்கு தோஷமிருந்து சந்ததி ஏற்படுமாயின் கருவழிதல், கர்ப்ப ரோகம், அற்பாயுளுள்ள புத்திர புத்திரிகள் பிறத்தல், காலங்கடந்து புத்திரப் பேறு அடைதல், ஸ்வீகாரம் போன்ற செயல்கள் தொடரும், 

களத்திரஹானியும், களத்திர தோஷமும், ஒருவரையொருவர் கோபதாபத்தால் பிரிந்திருத்தலும், உப களத்திரமும், உபயகளத்திரமும், களத் திரத்தால் இன்ப சுகங்களை பெறாமலும், களத்திர நஷ்டத்தை அனுபவிப்பதையும் காணமுடிகிறது. 

செவ்வாய் தோஷம்:

ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 2-4-8-12 ஆகிய ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால செவ்வாய் தோஷமாகும்.

புருஷருக்கு இலக்கனத்திற்கு 2-7-ல் செவ்வாய் இருக்கும்போது ஸ்திரிக்கு 4-12-ல் செவ்வாய் இருந்தால் ; செவ்வாய் தோஷமாகும். 

ஸ்திரி-புருஷர்களுக்கு லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் நின்றால், செவ்வாய் தோஷமாகும்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி:

இந்த செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்தாலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தி. அதாவது தோஷமில்லை எனலாம்.. 

லக்னம், சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு இரண்டாமிடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த இரண்டாமிடம் மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை. 

லக்னம்-சந்திர லக்னம் சுக்கிர லக்னம் இவைகளுக்கு நாலாமிடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த நாலாமிடம் மேஷமும், விருச்சிகமுமாகில் தோஷமில்லை. 

அதே போன்று லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 12-ம் இடம் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த 12-ம் இடம் ரிஷபமும் துலாமுமானால் தோஷ மில்லை. 

லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளும் 4-ம் இடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த 4-ம் இடம் மேஷமும், விருச்சிகமுமாகில் தோஷமில்லை. 

லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 7-மிடத் தில் இருக்கக் கூடிய செவ்வாய், அந்த 7-ம் இடம் மகரமும், கடகமுமாகில் தோஷமில்லை. 

குறிப்பு:
அதிகமான செவ்வாய் தோஷம் ஏழாம் வீடு ஆகும். அந்த ஏழாம் இடத்திற்கு யாதொரு பரிகாரமும் கிடையாது. ஆனால் மேற்கண்டபடி கடகம், மகரம் இவைகள் பூரண ஜலராசியாகையால் எவ்வளவு நெருப்பை சமுத்திரத்தில் போட்டாலும் சட்டை செய்யாது அல்லவா? அதேபோல் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் மகரம், கடகத்திலிருந்தால் தோஷம் என்பது சிறிதும் இல்லை. 

லக்னம் சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு எட்டாமிடம் தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை. 

சிம்மத்திலும், கும்பத்திலும் செவ்வாய் இருந்து எந்த லக்னத்தில் ஜனன மானாலும், சந்திரனும், சுக்கிரனும் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. 

அங்காரகனும், குருவும் ஒரு ராசியில் பத்து பாகைக்குள் சம்பந்தப்பட்டால், செவ்வாய் தோஷம் கிடையாது. சந்திரனும், செவ்வாயும் ஒரு ராசியில் பத்து பாகைக்குள் சம்பந்தப்பட்டால், செவ்வாய் தோஷம் கிடையாது.

காரணங்கள்:
மேற்படி ஸ்தானங்களில் மாத்திரம் செவ்வாய் இருந்தால் பரிகாரம் ஏற்படுவதற்கு காரணம் என்னவெனில், 

இரண்டாம் வீடு மிதுனம், கன்னி, புதன் வீடு அந்த புதன் வித்தைக்கு அதிபதி ஆகையால் அவ்விடத்தில் செவ்வாய் நின்றால் தோஷம் கிடையாது. 

12 ஆம் வீடு, ரிஷபம், துலாம், சுக்கிரன் வீடு, அந்த 12 ஆம் வீடு படுக்கை சுகமானதால், அந்த ஆதிபத்தியம் சுக்கிரனுக்கே வந்தபடியால், மேற்படி ராசியில் 12 ஆம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது. 

நான்காம் வீடு, மேஷம், விருச் சிகம், செவ்வாய் வீடு, அந்த நான்காமிடம் கேந்திரமானதாலும், கேந்திர ஸ்தானம் பாபக்கிரகங்களுக்கு சுபபலன் என்று சாஸ்திரங்கள் கூறுகிறபடியாலும், மேற்படி வீடு செவ்வாய் வீடு ஆனதால், நாலாம் வீடு செவ்வாய் தோஷம் கிடையாது. 

ஏழாம் வீட்டில், மகரம், கடகம், செவ்வாய் இருப்பதால், கடகம், நீசமும், மகரம் உச்சமும் ஆவதால் மேற்படி ராசிகள் பூரண ஜலராசிகள் ஆவதால் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது. 

எட்டாம் வீட்டில், தனுசு, மீனம், செவ்வாய் இருப்பதாலும், அது தேவ குரு வீடானதாலும், குரு நற்பலனையே தரக் கூடிய கிரகமானதால், எட்டாம் வீட்டு செவ்வாயால் தோஷம் கிடையாது. 

சூரியன், எல்லாக் கிரகங்களைக் காட்டிலும் பலமான கிரகம் ஆனதால், அங்கு செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது. 

கும்பம் பானை வடிவமானதால், அங்கு செவ்வாய் இருந்தால் பானைக்குள் வைத்த விளக்கு எப்படி இருக்குமோ, அம்மாதிரி செவ்வாய் தோஷம் கிடையாது. 

புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும், 
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும், 
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும், மேற்படி செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் தோஷம் என்பது கிடையாது.

மேற்படி ஸ்தானங்களில் இருக்கக் கூடிய செவ்வாயை சனி பார்த்தால், செவ்வாய் தோஷம் இல்லை என்று கர்க்க மகரஷி அபிப்பிராயப் படுகிறார்.

Blogger Gadgets