Thursday, August 7, 2014

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந் தவர்களுக்கும் உரிய திருத் தலங்க ளைப் பற்றி இங்கே கொடுத்துள் ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வர லாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங் களாய் தன்னையே புதுப்பி த்துக் கொண்டவை. எத்தனையோ மகான் களும், ரிஷிகளும், தேவர் களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அரு ள் பாலிப் பவை.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் – இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தின மும் ஒரு தடவையாவது தங்களுக்கு ரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன. மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே - லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிர ண்டு வீடுகளில் நவக் கிரகங் கள் அமர்ந்து - பெற்றெடுக்கும் பெற் றோர்களையும், பிறக்கும் ஊரை யும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கை யையுமே தீர்மானிக்கிறது. நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலய ங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக் கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும். உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவா க மட்டுப்படும். 

அஸ்வினி – அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் இருப் பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

பரணி – அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.

கார்த்திகை – அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

ரோஹிணி - அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

மிருக சீரிஷம் - அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

திருவாதிரை – அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

புனர் பூசம் – அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

பூசம் – அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது. 

ஆயில்யம் – அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். 
திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

மகம் – அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

பூரம் – அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

உத்திரம் – அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

ஹஸ்தம் – அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

சித்திரை – அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். 
மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

சுவாதி – அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

விசாகம் – அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன.

அனுஷம் – அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

கேட்டை – அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் – அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

பூராடம் - அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

உத்திராடம் – அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

திருவோணம் - பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்.

அவிட்டம் – அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

சதயம் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

பூரட்டாதி – அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

உத்திரட்டாதி – அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

ரேவதி – அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.

உங்களது ராசியும், ராசிக்குரிய வழிபட வேண்டிய சித்தர்களும்

 உங்களது ராசிக்குரிய சித்தர்கள்

1.மேஷம் சட்டைமுனி,குதம்பை.


2.ரிஷபம் சட்டைமுனி,குதம்பை.


3.மிதுனம் சிவவாக்கியர்,சட்டைமுனி.


4.கடகம் சிவவாக்கியர்,சட்டைமுனி.


5.சிம்மம் கபிலர்,கருவூரார்.


6.கன்னி காகபுஜண்டர்,அகப்பேய் சித்தர்.


7.துலாம் பட்டினத்தார்,கடுவெளி சித்தர்.


8.விருச்சிகம் சிவவாக்கியர்,சட்டைமுனி.


9.தனுசு வள்ளலார்,இடைக்காடர்.


10.மகரம் கபிலர்,கருவூரார்.


11.கும்பம் காகபுஜண்டார்,அகப்பேய் சித்தர்.


12.மீனம் கஞ்சமலைசித்தர்,சென்னிமலை சித்தர்.

இரட்டை குழந்தைகள் பிறக்கும் அமைப்பு!!


புதன் ஐந்தில்மேவ மற்றோர் மறைவு ஆகினும்
புகர்மதி சேய் பதனங்கள் இன்றி உக்குமம் சார்ந்து பனிமதியின்
சுதனும் கண் நோக்க தனுதண்டு உதயமும் தோன்ற ரவி மதியும் பொனும் உக்குமம் ஆகின் ரட்டை மகவுஉளதே
--ஜோதிட யவன காவியம் 
5ல் புதன் இருக்க மற்ற கிரகங்கள் 6-8-12 ல் இருந்தாலும்
சுக்ரன் செவ்வாய் சந்திரன் ஆகியோர் பலமிழந்து இரட்டை ராசிகளில் இருக்க புதன் பார்த்தாலும் .
மிதுனம் தனுசு லக்னமாகி சூர்யன் சந்திரன் குரு ஆகியோர் இரட்டை படை ராசிகளில் இருந்தாலும்
அந்த ஜாதகருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்றே பொருள் அறியவும்.

செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும் 
பரிகாரமும் !

நவகிரகங்களில் ஒவ்வொன்றும் தனக்குரிய பலன்களை ஒரு ஜாதகருக்கு தந்துக்கொண்டிருக்கிறது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பின்படிதான் ஒருவரின் வாழ்க்கை நிலை அமைகிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சி காலத்தில் தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தையை நல்லநேரம் பார்த்தும் பிரசவம் செய்கிற மருத்துவ வளர்ச்சி வந்துவிட்டதாக இருந்தாலும், ஒரு குழந்தையானது எந்த தாய்க்கு எந்த ஊரில் எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதை இறைவன் முன்கூட்டியே தீர்மானித்து இருக்கிறான். நாம் நினைத்த நேரத்தில் குழந்தை பிறந்துவிட்டது என நாம் நினைத்தாலும், அதுவும் இறைவன் விதித்ததே. ஒருவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்ததோ அவ்வாறு அந்த குழந்தையின் ஏற்ற தாழ்வு உண்டாகிறது. செவ்வாய் இந்த நவகிரகங்களில் செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடு மிகமிக முக்கியமானது. ஒருவர் பெயர் புகழுடன் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு செவ்வாயின் பலமே காரணமாக இருக்கிறது. போலீஸ்-இராணுவம் மற்றும் பெரும் இயந்திரங்கள் கொண்ட தொழில்சாலைகளுக்கு அதிபதியாக இருக்க, செவ்வாயின் தயவு தேவை. எண்ணற்ற சொத்துக்களுக்கும் கட்டடக்கலை வல்லுனர்-பெரிய கட்டுமான நிறுவனத்தை நடத்துபவர் போன்றவர்களுக்கும் செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார். தைரியமாக ஒருவர் எந்த செயலையும் செய்கிறார் என்றால் அதற்கு காரணமானவர் செவ்வாய். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் அந்த நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சொத்துக்கள் சேராது-சேர்ந்தாலும் தங்காது. ஒருவருக்கு அதிகமாக கோபம் வருகிறது என்றால் அதற்கும் காரணமானவர் இந்த செவ்வாய்தான். பூமிக்கு அதிபதியான செவ்வாய், நிலஅதிர்வு-பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஜப்பான் பூகம்பம் உட்பட உலகில் நிகழ்ந்த பூகம்பம்-நிலஅதிர்வுகளுக்கு செவ்வாயின் கோச்சார நிலை காரணமாக இருந்தது என்பதை ஜோதிட ஆர்வலர்கள் அறிவார்கள். ஆங்கிலத்தில் மார்ஸ் (MARS) என்று சொல்லி செவ்வாய் அழைக்கப்படுகிறது. விஞ்ஞான தகவலின்படி செவ்வாய், சூரியனில் இருந்து நான்காவது கிரகம். இது சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. போலீஸ்-இராணுவதுறைக்கு செவ்வாய்தான் அதிபதி என்று நம் இந்திய ஜோதிடம் சொல்கிறது. அதன்படி மேலைநாட்டவர் செவ்வாய்க்கு மார்ஸ் என்று பெயர் வைத்ததற்கு காரணம், மார்ஸ் என்பது போர்க்கடவுளின் பெயர். செவ்வாய்க்கு ஏற்ற இரத்தினம் பவழம் என்றும் ரத்தின சாஸ்திரம் சொல்கிறது. காரணம் செவ்வாய்க்கு உரிய நிறம் சிகப்பு. அதனால் சிகப்பு நிறமுடைய பவழம் அணிவது நல்லது என்பது, இன்றல்ல நேற்றல்ல நவீன விஞ்ஞானம் வளர்ச்சிக்கு முன்னறே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்திய ஜோதிட சாஸ்திரம் சொன்ன விஷயம் இது. அதன்படி இன்றைய நவீன விஞ்ஞானம் செவ்வாயின் நிறம் சிகப்பு என்று கண்டுபிடித்ததாக சொல்கிறது. செவ்வாய் கிரகத்தின் மண்ணில் இரும்பு ஆக்ஸைடு மிகுந்திருப்பதால் அத்தகைய சிகப்பு நிறம் செவ்வாய் கிரகத்திற்கு உண்டாகி இருக்கிறது என்று சொல்கிறார்கள். சனி செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி. ஈஸ்வரனையும் விடாததால் சனிஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனி பகவான். பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி. முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை முப்பது ஆண்டுகள் தாழ்ந்தவனும் இல்லை என்று சனியின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டே சொன்னார்கள். ஒரு இராசியில் இருக்கும் சனிகிரகம் மீண்டும் அதே இராசிக்கு வந்து சேர முப்பது ஆண்டுகள் ஆகும். சனிகிரகத்தை ஜோதிட சாஸ்திரம் “மந்தன்” என்று அழைக்கிறது. அதாவது ஒருவர் திறமைசாலியாக இருந்தாலும் அவருடைய செயல்கள் மந்தமாக இருந்தால் சனியின் ஆதிக்கத்தை கொண்டவர் என்று அறியலாம். சுறுசுறுப்பு குறைந்த தன்மையை சனி கிரகம் தருகிறது. உடல் ஊனமுற்றவர்கள் குறிப்பாக நடப்பதற்கு சிரமப்படுகிறவர்களின் ஜாதகத்தில் சனி பலவீனம் கொண்டதாக இருக்கும் என்பதை அறியலாம். ஒன்பது கிரகங்களில் சனி கிரகத்தின் சிறப்புகள் எண்ணில் அடங்காது. ஏழையாக இருந்தவனை செல்வ-அந்தஸ்தின் உச்சிக்கு கொண்டு செல்வதும், அந்தஸ்தின் உச்சியில் இருந்தவனை நடுதெருவுக்கு கொண்டுவருவதிலும் சனி கிரகத்திற்கு நிகர் இல்லை. சனி பகவான் ஒருவருடைய ஜென்ம இராசிக்கு 12-ம் இடத்திற்கு வரும் போதும், அடுத்து ஜென்மத்திற்கு வரும் போதும், அதற்கு அடுத்து 2-ம் இடத்திற்கு வரும் காலத்தையும் ஏழரைநாட்டு சனி என்று ஜோதிட சாஸ்திரம் அழைக்கிறது. அதாவது, சனி ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கு செல்லும் காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும். அதன்படி 12-ம் இடம் இரண்டரை ஆண்டுகள், ஜென்மம் இரண்டரை ஆண்டுகள், இரண்டாம் இடத்திற்கு வந்த சனி இரண்டரை ஆண்டுகள் என ஆக மொத்தம் ஏழரை ஆண்டுகள் சனி ஒரு ஜாதகரை படாதபாடு படுத்துவார். அதுபோல ஒரு இராசிக்கு நான்காம் இடத்திற்கு சனி வரும்போது அதனை அர்தாஷ்டம சனி என்றும், ஒரு இராசிக்கு எட்டாம் இடத்திற்கு சனி வரும் காலத்தை அஷ்டம சனி காலம் என்றும் ஜோதிடம் அழைக்கிறது. இந்த அர்தாஷ்ட சனி மற்றும் அஷ்டம சனி காலங்கள் வெறும் இரண்டரை ஆண்டு காலமே என்றாலும், அதன் தாக்கம் – பாதிப்பு, அய்யோ போதுமடா சாமீ என்று அலறும் விதமாக ஏழரை ஆண்டு சனிக்கு இணையானதான பலனை தருவதாக இருக்கும். சனி பகவான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார். அவரை பொறுத்தவரையில் ஏழையும் ஒன்றுதான் பெரும் பணக்காரனும் ஒன்றுதான். சனியின் கொடுமையான பாதிப்பு இருக்கும் காலத்தில் ஒருவன் ஆடம்பரமான எதையும் விரும்பக் கூடாது. அந்த நபர் உடுத்தும் ஆடை கூட மிக சாதாரணமானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மனது ஆடம்பரத்தை விரும்புமேயானால் அந்த நபரின் கதி அதோ கதிதான். மன்னாதி மன்னனையும் அர்தாஷ்டம,அஷ்டம,ஏழரை ஆண்டு காலத்தில் சிறையில் தள்ளிபடாதபாடு படவைக்கும் ஆற்றல் கொண்ட ஒரே கிரகம் சனி கிரகம் மட்டும்தான். இத்தகைய தன்மைகளை சனிகிரகம் கொண்டிருந்தாலும் சனி கிரகத்தை போல ஒரு அற்புதமான வாழ்க்கையை தரும் கிரகம் இருக்க முடியாது. சனி கிரகத்தின் துணை ஒருவனுக்கு இருக்குமானால் அந்த நபரை எவராலும் வெல்ல முடியாது. அவன்(அ)அவள் தொட்டதெல்லாம் பொன்தான். சனி மந்தமான தன்மை கொண்ட கிரகம் என்று ஜோதிட சாஸ்திரம் சொன்னாலும், சனி மிக வேகமாக அதனுடைய அச்சில் சுழல்கிறது, அது தன்னைதானே சுற்றி வர பத்தரை மணி நேரமே எடுத்துக் கொள்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சனி கிரகம் சூரியனிலிருந்து ஆறாவது கிரகம் என்று நமக்கு விஞ்ஞானிகள் இன்று சொல்கிறார்கள். ஆனால் என்றைக்கோ நம் இந்திய ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள் இதை சொல்லிவிட்டார்கள் எனபது மிக பெருமைக்குரிய விஷயமாகும். சூரியனின் இராசி மண்டலமான சிம்ம இராசியில் இருந்து சனியின் இராசி மண்டலமான மகர இராசி மண்டலம் ஆறாவது இடமாகும். அதாவது சூரியன் இருக்கிற சிம்ம இராசிக்கு ஆறாவது இடமான மகர இராசி சனியின் இடம் என்பதை நம் இந்திய ஜோதிட சாஸ்திரம் என்றைக்கோ சொல்லிவிட்டது. இப்படியாக செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடுகள் ஒரு ஜாதகனின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகமானது சனியை பகை கிரகமாக நினைக்கவில்லை. ஆனால் சனி கிரகம் செவ்வாயை பகை கிரகமாக நினைக்கிறது. இதனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாயும்-சனியும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள். இதனை கிரக யுத்தம் என்றும் சொல்லலாம். இந்த செவ்வாய்-சனி ஒரே இராசி வீட்டில் இணைந்திருக்கும் போது அதனுடன் வேறு கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஒரளவு பாதிப்பு குறையும். ஆனால் எந்த கிரகங்களும் துணை இல்லாமல் செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருக்கும் போது அவை ஒரு ஜாதகருக்கு எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்துகிறது. செவ்வாய்-சனியும் ஒரு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்ப்போம்.
லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உலைச்சல் கொடுக்கிறது. லக்கினத்திற்கு 2-ல் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறது. கண் உபாதை உண்டாக்குகிறது. லக்கினத்திற்கு 3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம் செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைக்கிறது. உடல்நலனில் தொண்டை பகுதியை பாதிக்கிறது. புகழ், கௌரவத்தை பாதிக்கச் செய்கிறது. லக்கினத்திற்கு 4-ல் செவ்வாய்-சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் தேவை. லக்கினத்திற்கு 5-ல் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் கோர்ட்டு வரை இழுத்து செல்கிறது. இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. லக்கினத்திற்கு 6-ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவை இல்லாமல் கடன் பெருக செய்கிறது. விரோதங்கள் தொடர செய்கிறது. உடல்நலனில் ஒருமுறை அறுவை சிகிச்சை செய்து வைக்கிறது. லக்கினத்திற்கு 7-ல் செவ்வாய்-சனி சேர்க்கை, திருமண தடை உண்டாக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறது. கூட்டு தொழிலில் விரோதம் வளரும். மனைவி (அ) கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. லக்கினத்திற்கு 8-ல் செவ்வாய்-சனி இருந்தால் அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும். முன்கோபம் தவிர்க்க முடியாமல் அதனால் துன்பமே உண்டாகும். லக்கினத்திற்கு 9-ல் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். தந்தை – மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். தெய்வ நம்பிக்கை குறைய வைக்கும். சிலருக்கு தெய்வ நம்பிக்கை இருக்காது. லக்கினத்திற்கு 10-ல் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் வளர்ச்சியில் நிதானம் செய்யும்.  போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். அதேபோல் உத்தியோகத்தில் மேல்பதவி கிடைப்பது அரிது. மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும். நிலை இல்லா தொழிலே அமையும். லக்கினத்திற்கு 11-ல் செவ்வாய்-சனி இருந்தால் மூத்த சகோதரருக்கு பிரச்சினை உண்டாக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷராக இருத்தல் நலம். தொழில், வேலைகளில் இரண்டிலும், ஏன் அயல்நாட்டு தொடர்பு வைத்தோம் என்று கலங்க வைக்கும். ஜாதகருக்கே உடல்நிலை சீராக வைக்காது. லக்கினத்திற்கு 12-ல் செவ்வாய்-சனி இணைந்தால் வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது. என்னடா வாழ்க்கை என்று சலிக்க வைக்கும். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். விரயங்கள் விரைந்து வரும். தூர பயணத்தில் வெகு கவனம் தேவை. பரிகாரம் இப்படி செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்ய வேண்டியது தெய்வ வழிபாடாகும். செவ்வாய் கிரகம் முருகப் பெருமானுக்கு கட்டுப்படும். சனி கிரகம் விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் கட்டுப்படும். முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும். இந்த வழிபாட்டை எதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்க கூடாது. ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும். இந்த ஜாதகர்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாக மேற்சொன்ன தெய்வங்களை வணங்கி தொடங்கினால்தான் அவை பிரச்னையின்றி-தடங்களின்றி நடைப்பெறும். விநாயகப் பெருமானையும், ஸ்ரீ ஆஞ்சனேயரையும் வழிப்படலாம் என்றாலும் கூட, ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை கொண்டவர்கள், செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானையும், சனிக்கு அதிபதியான ஸ்ரீமன் நாராயணனையும் வாழ்நாள் முழுவதும் எந்த சமயத்திலும் மறக்கவே கூடாது. நீங்கள் எந்த திருக்கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் செவ்வாய்-சனி சிலைகளுக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள். நம்பிக்கையுடன் வழிப்படுங்கள். துன்பம் செய்ய வேண்டிய அவர்களே நம் அன்புக்கு கட்டுப்பட்டு இன்பங்களை அள்ளி தருவார்கள். வழிபடுவோம் – வளம் பெறுவோம். வாழ்த்துக்கள்.
திருமணத் தடை செய்யுமா செவ்வாய்?



நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம் பராக்கிரமம், வீரதீர  செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம், ஆண்மை போன்ற  எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, அதிகார பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றிற்கான அதிபதி செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான ஆண்மை, வீரியம், உடல் உறவு போன்ற விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங் கள், உடல் திறன், வீரதீர செயல்கள், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ் பெறவும், ரியல் எஸ்டேட், பில்டிங் காண்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் பணி, நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருட் கடாட்சம் அவசியம் தேவை

செவ்வாயும்-திருமணமும்

பெண், பையனின் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்துவிட்டு நல்ல நட்சத்திரமா, எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று கேட்பார்கள். மற்றபடி ஜாத கம் எப்படி இருக்கிறது? நல்ல தசா யோகங்கள் இருக்கிறதா, வளமான வாழ்க்கை அமையுமா, என்ன தோஷங்கள் இருக்கின்றன என்பதை பற்றி பலர்  அலட்டிக் கொள்வதில்லை. நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்பது ஒர் சம்பிரதாய வழக்கம். நட்சத்திரப் பொருத்தம் மட்டும் ஒரு மண வாழ்க்கையை  தீர்மானிக்காது. ஜாதக கட்டத்தில் உள்ள அமைப்புக்கள்தான் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அந்தவகையில் சரியான தோஷ ஜாதகத்தை  அதே போன்ற சரியான தோஷ ஜாதகத்துடன் இணைப்பதன் மூலமே சுப யோகமான திருமண வாழ்க்கை அமையும்.

முக்கியமான தோஷங்கள்

அங்காரகன் என்ற செவ்வாயால் ஏற்படக்கூடிய தோஷம், மாங்கல்ய தோஷம். விஷக்கன்யா தோஷம், களத்திர தோஷம், சர்ப்ப தோஷம், சூரிய  தோஷம், புனர்பூ தோஷம், இவற்றுள் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவை மிக முக்கியமானவை. இந்த தோஷ வகை களில் மிகவும் பிரபலமாகவும், ஒரு வித அச்சத்துடனும் அனைவரும் அறிந்தது செவ்வாய் தோஷமாகும்.

மங்களன் என்றழைக்கப்படும் செவ்வாய் 

உடலில் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர். உடலில் வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியவர். ஆண் மகனின் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக  அமைந்து இருந்தால்தான் ஊக்கம், தன்னம்பிக்கை, ஆண்மை போன்றவை மேம்படும். உடல் உறவில் வீரியத்துடன் ஈடுபட முடியும். பெண்கள் ஜாத கத்தில் பூப்படைதல், மாதவிடாய், உறவில் இன்பம், உள்ளக்கிளர்ச்சி பாலுணர்வு ஆகியவற்றை தூண்டக் கூடியவர், செவ்வாய். ஆகையால்தான்  தோஷம் என்ற பெயரில் ஆண்-பெண் ஜாதகத்தை சேர்க்கும்போது செவ்வாய்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண பந்தத்தில்  ஆண், பெண் உடல் உறவு சேர்க்கையே, வம்சம் பெருகுவதற்கு, மிகவும் முக்கியமானது. இருவருக்கும் அந்த ஆற்றலை தரக்கூடியவர் செவ்வாய். ஆகையால் தான் திருமணம் என்றவுடன் செவ்வாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இத்தகைய வீரியம் மிக்க செவ்வாய் நம் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம்.  இதற்கேற்ப 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகங்கள் இரண்டை சேர்ப்பதன் மூலம், தோஷம் சமன் அடைகிறது. பெரும்பா லான ஜாதகங்களில் அதாவது 90 சதவிதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும். தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக செவ் வாய் தோஷம் அறவே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக்கூடாது. உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் செவ்வாய்  இருந்து தோஷ நிவர்த்தி ஆகி இருந்தால், அதே போல் 2, 4, 7, 8, 12ல் உள்ள ஜாதகத்தைத்தான் சேர்க்க வேண்டும். 1, 3, 5, 6, 9, 11ல் செவ்வாய்  உள்ள ஜாதகத்துடன் சேர்க்க கூடாது.

செவ்வாய் இருப்பிடமும் உங்கள் குணமும்

லக்னத்தில் இருந்து செவ்வாய் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதைப் பொறுத்தே நமது குணங்கள் அமைகின்றன. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம், அதாவது செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் பலன்:

லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் இருந்தால் 

வீண் பேச்சுகள், விவாதங்கள், முன் கோபம் உண்டு. அதே நேரத்தில் குணமும் இருக்கும். நியாய தர்மத்தை எடுத்துரைப்பார். குடும்பத்தில் சற்று  டென்ஷனான நிலை இருக்கும். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிராக இருக்கும். ஆகையால் பேச்சைக் குறைப்பது நலம் தரும்.

லக்னத்திற்கு நான்கில் செவ்வாய் இருந்தால்

உடல் உஷ்ண ஆதிக்கம் பெற்று இருக்கும். சொத்து சேரும் யோகம் உண்டு. அடிக்கடி இடமாற்றம், பயணங்கள் இருக்கும். அரசு உத்யோகம் அமையும். 

லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் இருந்தால்

துணிச்சலாக பேசுவீர்கள். எப்போதும் பரபரப்பு, டென்ஷன் இருக்கும். மூக்கின் மேல் கோபம் வரும். உஷ்ண உபாதைகள் இருக்கும். உடல் உறவில்  நாட்டம் கூடும்.

லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் இருந்தால்

படபடப்பு, சிடுசிடுப்பு, கோப தாபங்கள், அதிகாரம் செய்தல், மர்ம ஸ்தானத்தில் நோய்கள் என்று வரலாம். ரத்த காயங்களுக்கும் வாய்ப்புண்டு.

லக்னத்திற்கு பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் 

ஏதாவது சிந்தனையில் மூழ்கி இருப்பீர்கள். படுக்கை சுகம் குறைவு, எரிச்சல்-கோப தாபங்கள் இருக்கும். சகோதர உறவுகளால் பிரச்னை. இந்தப் பலன்கள் எல்லாம் பொதுவான கருத்தாகும். அவரவர் ஜாதகம் லக்னம், ராசி அமைப்பின்படி பலன்கள் மாறுபடும். ஆகையால் செவ்வாய்  தோஷ ஜாதகத்தை செவ்வாய் தோஷ ஜாதகத்துடன் சேர்ப்பது நன்மை தரும். செவ்வாய், தோஷம் மட்டும் கொடுக்காது பிரபல யோகத்தையும் தரும்.  செவ்வாயால் இல்லறம் கசக்காது. சரியான ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் இல்லறம் இனிக்கும்.
யோகம் இருந்தும் பலன் இல்லாததற்குக் காரணங்கள்

ஒரு ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்தும் பலனளிக்காமல் போவதற்கு கீழ்கண்ட காரணங்களை ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
1. தமிழ் வருடம்மாதம்திதிநட்சத்திரம்ராசிலக்னம் ஆகியவைகள் முடிகின்ற நேரத்திலும்பகல் இரவு சந்திப்பு காலத்திலும்நள்ளிரவு 12 மணி மற்றும் மத்தியான பொழுதிலும் பிறக்கின்ற குழந்தைகள் ஜாதகத்தில் ராஜயோகங்கள் இருந்தாலும்கூட இவைகள் இரண்டும் கெட்டான் நேரத்தில் பிறந்த காரணத்தால் ராஜயோகம் பங்கம் ஏற்படுகிறது.
2. துவிதியைசப்தமிதுவாதசிதிதியிலும்வியதீபாத யோகத்திலும் பிறந்ததால் ராஜயோகம் பயனளிக்காது. இடி விழுதல்பூகம்பம் முதலிய உத்பாதம் உண்டாகும் தினங்கள் பலன்தரா..
3. ராசியில் உச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீச்சம் பெற்றால் பலந்தரா.
4. ஜாதகத்தில் சூரியன்சந்திரன் நீசம் பெற்றாலும் பலன் இல்லை.
5. 4,9,10,11க்குடையவர்கள் நீசம் பெற்றாலும் பலன் தராது.
6. ராஜயோக கிரகங்கள் சூரியனிடம் அஸ்தமனம் பெற்றால் பலன் இல்லை.
7. லக்னமோ சந்திரனோ எந்த கிரகத்தாலும் பார்க்கப்பட விட்டாலும் பலன் இல்லை.
****************************************************************************************************************************
சுக்கிர முடம்: சூரியனுக்கு முன்னும் பின்னும் 9 டிகிரியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது அது அஸ்தமனம் ஆகிறது. இந்த நேரத்தில் விவாகம்உபநயனம் போன்ற சுப காரியம் செய்யக்கூடாது.
ஏழு கிரக சேர்க்கை: 7 கிரக சேர்க்கையானது லக்னத்திலோ இரண்டாமிடத்திலோ ஏற்பட்டால் நன்று. இதற்கு நீளகயோகம் என்று பெயர். ஏழாம் இடத்தில் ஏற்படுவது நல்லதல்ல.
ஜெனன லக்னம் முதல் ஏழாம் இடம் வரை இடைவிடாது பூக்கள் தொடுத்தாற்போல் கிரகம் இருந்தால் கிரகமாலிகா யோகம் இதை வஜ்ர யோகம் எனவும் கூறுவர். இந்த யோகம் உள்ளவர் நல்லறிவுடையசீமானாகபுண்ணியச் செயல்களைச் செய்பவராக அளவில்லாத யோகத்தை உடையவராக விளங்குவார்.
ஒன்று முதல் ஆறு வரை கிரகம் இருந்தால் சக்கிரதார யோகம்.
ஒன்று முதல் ஐந்து வரை கிரகம் இருந்தால் பாசக யோகம்
ஒன்று முதல் நான்கு வரை கிரகம் இருந்தால் கேதாரயோகம்.
ஒன்று முதல் மூன்று வரை கிரகம் இருந்தால் சூல யோகம்.
ஒன்று மற்றும் இரண்டில் இருந்தால் நீளக யோகம் எனப்படும்.
இதில் நீளக யோகம் சூல யோகம் பெரும்பாலான ஜாதகங்களில் காணலாம்.
இவர்கள் கல்விசெல்வம்சுகயோகம் உடையவர்களாக இருப்பர். 
கேதார யோகம் 10 சதவீத ஜாதகங்களிலேயே காணப்படும்.இவர்கள் பூமி யோகம் தனலாபம் பெற்று பலருக்கு உபகாரம் செய்து நலம் காண்பர்.
பாசக யோகம் 5 சதவீத ஜாதகத்திலேயே காணப்படும்.இவர்கள் அரசாட்சி புரிபவர்கள்மக்களால் போற்றப்படுபவர்கள். திரண்ட செல்வம் பெறுவார்கள்,மேதாவி யாவார்கள்.
சுக்கிரதார யோகம்கிரகமாலிக யோகம் உள்ள ஜாதகங்களைப் பார்ப்பது மிக அரிது. இவ்வகை ஜாதகத்தில் கிரகங்கள் லக்னம் சுபவர்க்கம் ஏறி இருப்பார்கள். இந்த உலகத்துக்கே அரசனாககுருவாக விளங்கலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
லக்னத்திற்கு 9ம் இடத்தில் சுக்கிரன் சனி ராகு இணைந்தால் பிரம்மஹஸ்த்தி தோசம் ஆகும். இதற்கு பரிகாரம் ராமேஸ்வரத்தில் செய்யப்படுகிறது. பரிகாரம் செய்வதால் வேகம் மட்டுப்படுகிறது அன்றி பாபங்கள் தொலைந்து விடுவதில்லை.
ஜோதிடத்தில் சனிபகவான்!

சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடம் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் சாரம் சனி; சூரினிடமிருந்து வெளிவந்தவர்; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. அப்பாவின் சாரம், பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம். அதேபோல், மனதுடன் தொடர்புகொண்டவர் சனி. மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற தமோ குணம் அவரிடம் உண்டு. சூரியனில் (ஆன்மா) இருந்து உருப்பெற்றது சந்திரன் (மனம்). ஆன்மா ஒன்று மனமும் ஒன்று. ஆகவே 12 ராசிகளில் இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால், மற்ற ஐந்து கிரகங்களுக்கு இரண்டு வீடுகள் இருக்கும். ஆன்மா மற்றும் மனத்துடன் புலன்களுக்குத் தொடர்பு உண்டு. ஆதலால் ராசிச் சக்கரத்தில், சிம்மத்தில் உள்ள சூரியனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்குளம். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். சூரியனுக்கு சிம்மராசி. அதற்கு அடுத்த ராசியில், புதன், அதையடுத்து, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். சந்திரனுக்குப் பின் ராசியில், மிதுனத்தில் புதன்; அடுத்து சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். இருவருக்கும் கடைசியில் சனி தென்படுவதால் மகரத்துக்கும் கும்பத்துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார். ஆன்மாவுடன் மனம் இணையவேண்டும் அத்துடன் எண்ணங்கள் இணைந்தால் மட்டுமே, அது வளர்ந்து அனுபவத்துக்கு வரும். ஆன்மா, மனத்துடன் இணைகிறது; மனம், புலனுடன் இணைகிறது; புலன்கள் பொருட்களுடன் இணைகின்றன என்கிறது ஜோதிடம் (ஆன்மாமனஸா ஸம்யுஜ்யதே...). இருக்கிற பொருள், தோற்றமளிக்கும்; வளரும், மாறுபாட்டைச் சந்திக்கும்; வாட்டமுறும்; மறையும். ஆக.... இருத்தல், தோன்றுதல், வளருதல், மாறுபடுதல், வாட்டமுறுதல், மறைதல் ஆகிய ஆறுவித மாறுபாடுகளைக் கொண்ட பொருளுக்கு. எல்லாமே உண்டு. அது மனிதனுக்கும் உண்டு. அதனை ஆறு பாவ விகாரங்கள் என்கிற சாஸ்திரம் (அஸ்தி, ஜாயதெ, வர்த்ததெ, விபரிணமதே, ம்லாயதெ, நச்யதி, இதி. சூரிய - சந்திரனுடன் இணைந்த இந்த ஐந்து கிரகங்கள், ஜீவராசிகளில் தென்படும் ஆறுவித மாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றன எனும் கோணத்தில், ராசிச் சக்கரத்தின் கிரக வரிசைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜோதிடத்தில் சனிபகவான்: மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதியான சனி பகவான் நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே தனுசின் உருவம் கொண்டு மண்டலத்தில் உறைபவர். ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் சத்ருக்கள் - குரு சமமானவர் - சனிக்கு புதன், சுக்கிரன், ராகு, கேது ஆகியவர்கள் நண்பர்களாவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிப்பவர். 3,10ம் இடங்களைப் பார்ப்பவர். லக்னத்திற்கு 8ம், 12ம் இடமும் மறைவு ஸ்தானங்களாகும். இவர் மேஷ ராசியில் நீச்சமானவர். துலா ராசியில் உச்சமானவர். சனி தசை பத்தொன்பது வருட காலமாகும். சனியின் அதிதேவதை எமதர்மனாவார். இவருடைய வாகனம் காகம். சில புராணங்களில் இவருடைய வாகனம் கழுகு என்றும் சொல்லப்படுகிறது. இவர் வன்னிய சமித்துக்கு ப்ரீதியானவர். திசைகளில் இவர் மேற்கு முகம் நோக்கி காட்சி தருகிறார். நவதானியத்தில் எள் - மலர்களில் கருங்குவளை - நவரத்தினங்களில் நீல நிறக்கல் - இவருக்கு உகந்ததாகும். மகரம், கும்பம் இரண்டு ராசிகளும் இவருக்கு ஸ்வ÷க்ஷத்ரமாகும். இவருடைய ஆட்சி வீடு மகரம். மூலதிரிகோண வீடு கும்பம். பூசம், அனுஷம், உத்திராட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும், சனியின் சாரம் பெற்ற நக்ஷத்ரங்களாகும். இவர் அன்னிய பாஷைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறார். சுவையினில் சனி கசப்பிற்கும், புளிப்பிற்கும் ஆதிபத்தியம் வகிக்கிறார். வஸ்திர அமைப்பில், சனி கருப்பு பட்டு வஸ்திரத்திற்கு பூஷிதராவார். சனி, காசியப முனிவர் கோத்திரத்தைச் சேர்ந்தவராகிறார். பஞ்சபூத அமைப்பில் சனி ஆகாயத்திற்கு ஆதிபத்தியம் வகிக்கிறார். ஜெனன காலத்தில், சந்திரன் நின்ற ஸ்தானம், ஜெனன ராசியாகும். ஜெனன ராசிக்கு 4ல் சனி சஞ்சரிக்கும் காலம் அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்லப்படுகிறது. ஜெனன ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் காலம் கண்டச் சனி என்று சொல்லப்படுகிறது. ஜெனன ராசிக்கு 8ல் சனி சஞ்சரிக்கும் காலம் அஷ்டமத்துச் சனி என்று சொல்லப்படுகிறது.
ஒன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். சனை என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு. சனி பகவான் ஒவ்வொரு ராசியினருக்கும், அவரவர் பாவ புண்ணியங்களுக்கேற்ப பலன் தருபவர். அதாவது ஒரு ராசிக்காரருக்கு அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, மங்கு சனி, ஏழரைச்சனி ஆகிய காலங்களில் இவர் கொடுக்கும் பலன் கஷ்டமாகத் தோன்றினாலும்,  இந்த காலகட்டத்தில் அந்த ராசிக்காரரை திருத்தி நல்வழியில் நடக்க வைத்து ராசியை விட்டு விலகும் காலத்தில் மிகச்சிறந்த பலனை கொடுப்பதே சனி பகவானின் நோக்கம். இப்படி ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கும் சனி பகவானை கிரகங்களில் தலைமை நீதிபதி எனலாம். விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர் ! சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.
ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பார்கள் ! இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது - கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது. துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது ! மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோபலமும் குறைகிற இறுதிப்பகுதி. கவுமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம். சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே சனியின் பாதிப்பு மயங்கியது என்பர். இதனால் மங்குசனி என்கின்றனர். இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர். இன்ப - துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர். முதுமையில் சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக்காட்டி, போக்கு சனி என்றனர். ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கின்ற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.
ராசி மண்டலத்தில் வலம் வரும் தருணத்தில், சந்திரன் இருக்கிற ராசியில் இருந்து பன்னிரண்டிலும், சந்திரன் இருக்கிற ராசியிலும், அடுத்து சந்திரனில் இருந்து 2-வது ராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து, பயணிப்பார் சனி பகவான். ஆக, மூன்று ராசியிலும் இருந்த காலத்தைக் கூட்டினால் மொத்தம் ஏழரை வருடங்கள் வரும். இதை, ஏழரை நாட்டுச் சனி என்பார்கள் அதாவது ஏழரை ஆண்டுகளை நாடிய சனி எனப் பொருள். பிறக்கும் வேளையில் சந்திரன் இருக்கும் ராசி, ஒருவரது நட்சத்திரத்தைச் சொல்லும். அத்துடன், அவனது மனத்தையும் சுட்டிக்காட்டும். சனியுடன் மனம் நெருங்கிவரும், சந்திரன் இருக்கும் ராசி; அந்த நெருக்கம் தளர்வது. 2-வது ராசி. இந்த நெருக்கத்தின் தன்மையைக்கொண்டே, மங்கும் சனி, பொங்கும் சனி, போக்குச் சனி என்றும் சொல்லலாம். 12-ல் உள்ளபோது மங்க வைப்பார். சந்திரன் இருக்கும் ராசியில் இருக்கும்போது பொங்க வைப்பார். இரண்டில் இருக்கும்போது, போக வைப்பார். மனதோடு இணைந்த எண்ணங்கள், அதன் தாக்கம் நெருங்கும்போது, இன்பமோ துன்பமோ முழுமையாக வரும். விலகியிருக்கும் வேளையில், தாக்கம் செயலற்றுப் போகும். அதாவது, பன்னிரண்டிலும் இரண்டிலும்... நெருக்கம், மனத்துடன் (சந்திரனுடன் குறைந்திருப்பதால் பாதிப்பானது, அனுபவத்துக்கு வராமலே போகலாம். அந்த ஏழரை வருடகாலத்தில், அவனது தசாபுக்தி அந்தரங்கள் வலுவாகவும் நன்மையை வாரி வழங்குவதாகவும் இருந்தால், சனியின் தாக்கம் செயலிழந்துவிடும். தனக்கு இருக்கும் மூன்று இயல்புகளில் பொங்கும் இயல்பு வெளிப்பட்டு, தசாபுக்தி அந்தரங்களின் தரத்தைப் பொங்க வைத்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார், மாறாக தசாபுக்தி அந்தரங்கள் துயரத்தில் ஆழ்த்தும் நிலையில் இருந்தால், தரத்தையொட்டி மங்கவைப்பதோ அல்லது அதன் உச்சத்தை எட்டவைப்பதோ சனியின் வேலையாக மாறிவிடும்.
தசாபுக்தி அந்தரங்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாக செயல்படும் தகுதி சந்திர சாரப்படி வளையவருகிற ஏழரை நாட்டுச் சனிக்கு இல்லை. சந்திர சாரப்படி தென்படுகிற கிரகம், தசாபுக்தி அந்தரங்களின் பலத்தை நிறைவேற்றவே ஒத்துழைக்கும். பிறக்கும்போது இணைந்த நட்சத்திரம், அவனது ஆயுள் முடியும் வரை சந்திக்க வேண்டிய தசாபுக்தி அந்தரங்களை வரிசையாகப் பட்டியலிட்டுத் தந்துவிடும்; கர்மவினைக்கு உகந்தபடி, இன்ப- துன்பங்களைச் சந்திக்கும் காலத்தையும் வரையறுத்துவிடும். சந்திரசாரப்படி மாறி வரும் அந்தந்த வேளையில், அந்தந்த ராசியில் தென்படும் கிரகங்களின் பலன்கள், தசாபுக்தி அந்தர பலன்களை முடக்கிவைக்க இயலாது. நொடிக்கு நொடி, மனித சிந்தனையில் மாற்றங்கள் நிகழந்துக்கொண்டே இருப்பதால், மனமாற்றத்துடன் இணைந்த கிரகங்கள், நிரந்தரப் பலனை அளிக்க இயலாது என்பதே உண்மை. நிச்சயமான பலனை அளிக்கவல்லது தசாபுக்தி அந்தரங்கள். தசையினால் திடமான பலத்தை அறியவேண்டும் என்கிறது ஜோதிடம் (விசிந்தயேத் த்ருடம்...). அஷ்டகவர்த்தை முன் வைத்து அதிருட பலத்தை அறியவேண்டும். நிச்சயமல்லாத, அதாவது சந்தர்ப்பம் இருந்தால் தென்படும் பலன்களை அறியவேண்டும் என்கிறது அது. யோகங்களால் இரண்டு வித பலன்களும் ஏற்படலாம். யோக பலம் செயல்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் விளக்கம் தருகிறது ஜோதிடம்.
சனியின் உச்ச - ஆச்சி - நீச்ச வீட்டு பலன்கள்
சனி உச்சம் பெற்று இருப்பவரானால், அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து, எல்லோருடைய பாராட்டையும் பெறுவார்கள். மனோதைரியம் அதிகமாகயிருக்கும். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பவர். இரும்பு யந்திர துறையில் நல்ல முன்னேற்றம் அடைவர். சனி ஆட்சி வீட்டில் இருந்தால் உல்லாசமான வாழ்க்கை வாழ்வார்கள். நல்ல தொழிலைப் பெற்றிருப்பர். வாகன யோகமுண்டு. பிரயாணத்தின் மூலம் நன்மை அடைவர். சனி நீச்ச வீட்டில் இருந்தால் சாஸ்திர, சம்பிரதாயத்தில் நம்பிக்கை இருக்காது. மனோவலிமை குறைந்தவர்களாகவும், சில தீய குணங்கள் கொண்டவர்களாவும் இருப்பர்.
சனியினால் ஏற்படும் யோகங்கள் பரிகாரங்கள்
சந்திரனுக்கு 9ல் சனி இருந்தால் அது சசியோகம் எனப்படும். இத்தகைய யோகம் அமையப் பெற்றவர்கள் பெரிய குடும்பத்தைப் பெற்றிருப்பர். நிறைய வருவாயும், அதற்கேற்ற செலவும் உடையவர்களாக இருப்பார்கள். சந்திரனுக்கு 2ல் சனியிருந்தால் அது சுனபாயோகம் எனப்படும். இத்தகைய ஜாதகர்களுக்கு பிதுர் வழியில் சொத்து அமையாவிடினும், சுயமாக சம்பாதித்து அரச போக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இவ்வாறு சனி பகவானால் சிற்சில சோதனைகள் ஏற்பட்டாலும், அதற்கேற்ப அவரவருடைய ஜாதகப்படி ப்ரீதிகளைச் செய்தால் நல்ல யோகங்களைப் பெறலாம்! நமக்கு மலையளவு ஏற்படக்கூடிய சோதனைகளை சனி பகவான் கடுகளவாக குறைத்து, செல்வத்தையும், ஐசுவரியத்தையும் வாரி வழங்கும் இயல்புடையவர். அவரை பிரார்த்தித்து அஷ்ட ஐசுவரியங்களையும் பெறுவோமாக!
ஜெனன ராசிக்கு 12-1-2ல் சனி சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டு காலம் - ஏழரை நாட்டு சனி என்று சொல்லப்படுகிறது. சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும், இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும், மூன்றாவது சுற்று மரணச் சனி என்றும் சொல்லப்படுகிறது. இக்காலங்களில் சனி பகவானுக்கு ப்ரீதி செய்வதன் மூலம் நன்மைப் பெறலாம். பொதுவாக ஜெனன லக்னத்திற்கு 3-6-11 ஆகிய ஸ்தானங்களில் சனி நின்றால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் அநேகம் நடைபெறும் என்று சொல்ப்படுகிறது. முதல் இடமாகிய லக்னத்தில் சனி நின்றால் அந்த ஜாதகர் தீர்க்க ஜீவனம் அமையப் பெற்றவர். உபாயம் அறிந்தவர். எதிலும் வெற்றி பெறக் கூடியவர். கண்டிப்பான வார்த்தை பேசுபவர். சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். புறம் பேசுபவர்.
இரண்டாமிடத்தில் இருந்தால் வாக்கு பலிதம் உடையவர். தர்க்கம் வாதம் செய்பவர். இத்தகைய அமைப்பு உடையவர்கள் பால்யத்திலேயே திருமணமானவர்களாயின், இரண்டாம் தாரம் அமையும் நிலையுண்டாகும். கண்ணால் பேசக்கூடிய கவர்ச்சியைப் பெற்றிருப்பர். மூன்றாமிடத்தில் இருந்தால் நல்ல தைரியம் உடையவர்களாக இருப்பர். தன்னைவிட தாழ்ந்தவர்களுடன் சிநேகமாக இருப்பார்கள். ஆசார அனுஷ்டானங்களை மதியாதவர்கள். இனஜன பந்துக்களை மதிக்காதவர்கள். இளைய சகோதரர்கள் மிகவும் உதவுவார்கள். நான்காமிடத்தில் இருந்தால் தாய்க்கு ஆகாது. வீடு, வாகனம் முதலியவைகளை அடையும் வாய்ப்பு குறைவு. இவர்கள் சகல சாஸ்திரங்களையும் கற்றவர்களாக இருப்பார்கள். இளமையிலேயே புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டாகும்.
ஐந்தாமிடத்தில் இருந்தால் பிதுர் தோஷமாகும். புத்திரர்களுக்கும் ஆகாது. இவர்கள் பிறரை பழி வாங்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் தொழிலில் போட்டியும், பொறாமையும் நிறைந்திருக்கும். ஆறாம் இடத்தில் இருந்தால் காது சற்று மந்தமாக இருக்கும். தனம், சம்பத்து முதலியவைகளைப் பெற்றிருப்பர். எந்த காரியத்திலும் முதலில் தோல்வி ஏற்பட்டாலும் இறுதியில் ஜெயம் உண்டாகும். இத்தகைய அமைப்புடையவர்கள் பகைவர்களை வெல்லும் திறமையுடையவர்கள். ஏழாமிடத்தில் இருந்தால் மனைவியினால் துன்பத்தை அநுபவிப்பவர். அதிகமான பொறுப்புகளை ஏற்று நடத்துவர். இனிமையாக பேசக் கூடியவர்கள்.
எட்டாமிடத்தில் இருந்தால் வாக்கு பலிதம் பெற்றிருப்பர். இவர்கள் கஷ்டப்பட்டு பொருள் சேர்ப்பர். சில தீய குணங்களும் அமைந்திருக்கும். ஆனால் இவர்கள் துணிவும் தைரியமும் நிரம்ப பெற்றிருப்பர். மூலம் போன்ற உஷ்ண நோயினால் பாதிக்கப்படுவார்கள். ஒன்பதாம் இடத்தில் சனி இருந்தால் தந்தைக்கு தோஷமுண்டாகும். இளமையிலேயே வறுமையால் துன்பப்படுவார்கள். இவர்கள் சகோதர வகையிலும் துன்பத்தைப் பெறுவார்கள். சிவபக்தி உடையவர்களாக இருப்பார்கள். பத்தாமிடத்தில் இருந்தால் தாய்க்கு ஆகாது. இவர்கள் எவரையும் எளிதில் நம்பி காரியத்தில் இறங்க மாட்டார்கள். ஆசார, அனுஷ்டானங்களை பின்பற்றுவார்கள். நல்ல விவேகம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாகன யோகமும் உண்டு.
பதினொன்றாம் இடத்தில் இருந்தால் நல்ல சாஸ்திரம் அறிந்தவராகவும், சிறந்த ஞானம் பெற்றவராகவும் இருப்பார். வாகன யோகமுண்டு. ஆயுள் விருத்தி உண்டாகும். இத்தகைய சனியுடன் புதனும் கூடியிருந்தால், கலைத் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பன்னிரண்டாம் இடத்தில் சனி இருந்தால் முன் கோபியாகவும், ஆரோக்கியம் குறைந்தும் இருப்பர். சனியும், அங்காரகன் எனப்படும் செவ்வாயும் கூடி இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் இரும்பு யந்திர துறையில் ஈடுபட்டிருப்பர். பட்டம் பெறும் வாய்ப்பும் பெறுவர். சனியும், சுக்கிரனும் கூடியிருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் சில நஷ்டங்களாலும், நோயினாலும் துன்பப்படுவார்கள். இவர்களிடம் சில தீய பழக்கங்கள் குடி கொண்டிருக்கும். சனியும், ராகுவும் கூடியிருந்தால் கலைத் துறையிலும், இரசாயன துறையிலும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

சனீஸ்வரருக்கு அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறுதான்! ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும், கேரளத்தில் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதிகாரப்பூர்வமான கோவில் என்பதுபோல திருநள்ளாறு கோவிலே சனீஸ்வரருக்கு உரிய திருத்தலம். 
புராதன நூலான அர்த்தசாஸ்திரம், நம் அன்றாட வாழ்வில் சனியின் பங்களிப்பு பற்றி விரிவாகக் கூறுகிறது. ஒருவரது வாழ்நாள், தொழில், வியாபாரம் அல்லது பணி ஆகியவற்றை நிர்ணயிப்பவர் இவர் தான். அதனால், இவருக்கு ஆயுள்காரகர், ஜீவனகாரகர் என்ற பெயர் உண்டு. ஜோதிடத்தில் சிறந்தவரான வராஹமிகிரர், சனீஸ்வரர் துன்பத்தை மட்டுமே தருபவர் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார். ஒருவரது ராசியில் இருந்து 3,6,11 ஆகிய இடங்களில், இவர் சஞ்சரிக்கும்போது அளவற்ற நன்மைகளைக் செய்வார். இதுதவிர, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஆயுள், ஆரோக்கியம், செய்யும் தொழில் ஆகியவற்றில் விசேஷபலன்களைத் தந்தருள்வார். பிதுர்களை வழிபடுவது இவருக்கு மிகவும் பிடித்தமானது. இவருடைய வாகனமான காகம் பிதுர்களின் அம்சமாகத் திகழ்கிறது.

சனி பகவானின் பிறப்பு!

தலைமை நீதிபதி  சனி பகவான்:
மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி...எவனாக இருந்தாலும் சரி...சனிபகவானின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம். இவர் சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள். தவறு செய்தவன் தான் பயப்பட வேண்டும். தவறு செய்யாதவர்கள் சனியினால் தோஷம் ஏற்பட்ட காலங்களில், இவருக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றி வழிபட வேண்டும். சனிபகவானை வணங்கும் போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீதுபடக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. என்னதான் கோயில் கோயிலாக சென்று சனிபகவானை சுற்றி வழிபட்டாலும், நாம் உண்மையான மற்றும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காத வாழ்க்கை வாழ்ந்தால் எந்த தோஷத்திலிருந்தும் தப்பிக்கலாம். கிரகங்களுள் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்ற பெருமைக்கு உரியவர், சனிபகவான் மட்டுமே. தன்னை வழிபடுவோரின் வாட்டங்களைப் போக்கும் வல்லமை இவருக்கு உண்டு.
சனி பகவானின் பிறப்பு: சனீஸ்வர பகவான், சூரிய பகவானின் குமாரர். இவருடைய மாதா, சாயா தேவியார்! சாயாதேவிக்கு நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு. சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும் புதல்வராக அவதரித்த சனீஸ்வர பகவானின் புராண வைபவம் நமக்கு பேரருளையும், செல்வத்தையும் அளிக்கும். திருப்பாற் கடலில் ஸ்ரீமந்நாராயணன் தேவி, பூதேவி சமேதராய் - திருவாழி திருச் சங்குடன், கவுஸ்துப, வனமால கேயூர கிரீடங்களுடன் சேவை சாதிக்கிறார். இவரின் நாபிக் கமலத்தில் நின்று சதுர்முக பிரம்மன் அவதரித்தார். பிரம்மதேவன், விஷ்ணுவின் ஆணைப்படி பிரபஞ்சங்களை சிருஷ்டிக்கும் கர்த்தாவாக சத்தியலோகத்தில் எழுந்தருளினார். சிருஷ்டியின் மகிமையால் பிரம்மதேவன் மரீசி, அத்திரி, ஆங்கிரீஸ், புலஸ்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்னும் ஞானத் தவயோகியர்களைத் தோன்றச் செய்தார். அந்த மாமுனிவர்கள் சப்தரிஷிகள் என்னும் திருநாமத்தைப் பெற்றனர். சப்தரிஷிகளைப் படைத்த பிரம்மதேவன் தக்ஷப் பிரஜாபதி என்ற மகரிஷியையும் உலக ÷க்ஷமத்திற்காக சிருஷ்டித்து அருளினார். சப்தரிஷிகளில் மூத்தவரான மரீசி மகரிஷி. சம்பூதி என்னும் கன்னிகையைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் காசியப முனிவர் குமாரராகப் பிறந்தார். காசியப முனிவர், தக்ஷபிரஜாபதியின் குமாரத்தியான அதிதி என்பவளைத் திருமணம் செய்துக் கொண்டார். அதிதிக்கும், காசியப முனிவருக்கும் அநேக புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்கள் நல்ல தேஜஸைப் பெற்றிருந்தார்கள். அவ்வாறு அத்யந்த தேஜஸ் பொருந்திய காசியப புத்திரர்கள் துவாதச ஆதித்தியர்கள் என்ற திருநாமத்தைப் பெற்றனர். ஆதித்ய குமாரர்களில் மூத்தவர்தான் சூரிய பகவான்!
சூரிய பகவான் அழகானவர் - அவனிக்கு ஒளியாகத் திகழ்பவர் - சுவர்ண சொரூபமானவர் - பரமாத்மரூபிணியானவர் - தேஜோ மயமானவர்-ஆரோக்கியம், ஐசுவர்யம், கீர்த்தி, வெற்றி அனைத்தையும் அருளுபவர் - ஆயிரம் கிரணங்களைக் கொண்டவர் - சக்கராதி கிரகங்களுக்குத் தலைவன் - திவ்யமான ஏழு பச்சைக் குதிரைகள் பூட்டப் பெற்ற பொன் வண்ணத் தேரைச் செலுத்துபவர் - குரு குகனுக்கு ப்ரீதியானவர் என்றெல்லாம் போற்றப்படும் நவக்கிரக நாயகனாக விளங்குகிறார் சூரியபகவான்! பொன்மயமான சவுமனஸம் என்ற சிகரத்திலிருந்து புறப்படுகிறார். அங்கிருந்து புறப்பட்டு, ஜம்பூத் துவீபத்தில் வடக்கு திக்காக எழுந்தருளி எங்கும் பேரொளி பரப்புகிறார். சூரியதேவன் உத்திராயண காலத்தில் இந்த சிகரத்திலிருந்து புறப்படுகிறார். தக்ஷிணாயனத்தின் போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்துக்கு எழுந்தருளுகிறார். விஷுக் கனியின் போது இரண்டுக்கும் நடுவேயிருந்து எழுந்தருளுகிறார். சூரியதேவன் த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலாத் தேவியைத் திருமணம் செய்து கொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு. சூரிய தேவனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் சிராத்த தேவன் என்று அழைக்கப்படும் வைவசுதமனு யமதர்ம ராஜன் என்று இரு புதல்வர்களும், யமுனை என்னும் பெயருடைய அதிரூபவதியான புத்திரியும் பிறந்தனர். யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகள். சூரிய தேவனின் இல்லறக் கோவிலில் இன்புற்று வாழ்ந்து வந்த சுவர்ச்சலா தேவிக்கு நாளாக, நாளாக சூரிய தேவனின் உக்கிரமான கிரணங்களைத் தாங்கும்படியான சக்தி குறைந்து கொண்டே வந்தது.
இந்த நிலையில், சுவர்ச்சலாதேவி தனது துயர நிலையைச் சூரிய தேவனிடம் சொல்லும் படியான சக்தியற்றுப் போனாள். சுவர்ச்சலாதேவி கானகம் சென்று கடும் தவம் இருந்து உரிய சக்தியைப் பெற்று வருவதற்கு எண்ணினாள். அந்த எண்ணத்தையும் சூரியதேவனிடம் சொல்லும் ஆற்றல் அவளுக்கு இல்லாமற் போனது. சுவர்ச்சலா தேவி தனக்குள் ஒரு முடிவிற்கு வந்தாள். தனது மனோ சக்தியால் தனது நிழலையே, தன்னைப் போன்ற பேரெழில் கொண்ட பெண்ணாகத் தோன்றச் செய்தாள். நிழலில் நின்றும் உருப் பெற்று வந்த அந்த நளின சிங்கார வனிதை, தன்னைப் போன்ற உருவத்துடன் காணும் சுவர்ச்சலா தேவியைக் கண்டு திகைத்தாள்; அவளை நமஸ்கரித்து நின்றாள். சுவர்ச்சலா தேவி அவளைப் பார்த்து, எனது சாயையில் நின்றும் தோன்றியவளே! உனக்கு சாயாதேவி என்று நாம கரணம் சூட்டுகிறேன். உனக்கு நான் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன். நான் தவம் செய்யப் போகிறேன். நான் திரும்பி வரும் வரை நீ என் கணவருடன் சுகித்து வாழ்வாயாக! என் குழந்தைகளான வைவசுதமனு, யமதர்மன், யமுனா ஆகியோர்களை அன்போடு அரவணைத்து வாழ்வாயாக! என்று கூறினாள். சுவர்ச்சலா தேவியின் சுந்தர மொழி கேட்டு சாயாதேவி, தேவி! தங்கள் சித்தம் எந்தன் பாக்கியம். இருப்பினும் இந்த எளியவளுக்கு உங்களிடம் ஒரு சிறு விண்ணப்பம். என்றாவது ஒரு நாள் நம் பதி எனது சிகையைப் பற்றி இழுக்கும் துர்பாக்கியம் ஏற்படுமாயின் அன்று நான் நம் நாயகரிடம் உண்மையை நவில்வேன். இது சத்தியம் என்றாள். சுவர்ச்சலா தேவியும் அதற்கு சம்மதித்தாள். சுவர்ச்சலாதேவி சந்தோஷத்துடன் தந்தை வீட்டிற்குப் புறப்பட்டாள். சுவர்ச்சலா, பதியின் பாதத்தை விட்டு நீங்கி, பிதாவான த்வஷ்டா இல்லம் சென்றாள். நடந்தவற்றைத் தந்தையிடம் கூறினாள். தந்தையார், சுவர்ச்சலாவின் செயலைக் கண்டித்தார். ஒரு பெண், பதியை விட்டு வருவது தர்மமாகாது. என்னைக் காண வேண்டுமென்றால் உன் பதியோடு தான் வரவேண்டும். எனவே சற்றும் தாமதியாமல் உன் பதியின் கிருஹத்திற்குச் செல்வாயாக! சுவர்ச்சலா தேவி சஞ்சலம் கொண்டாள். தந்தையின் அடி பணிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றாள். தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக, குதிரை உருவம் கொண்டு, தவத்தைத் தொடங்கினாள். சுவர்ச்சலாவின் அன்பு கட்டளைப்படி சாயாதேவி, சூரியதேவனுடன் வாழத் தொடங்கினாள்.
சூரிய தேவனின் குழந்தைகளிடம் சாயா தேவி, மிகுந்த வாத்ஸல்யம் கொண்டிருந்தாள். கண்ணும் கருத்துமாக அக்குழந்தைகளைக் காத்து வந்தாள். சூரிய தேவனுக்கும், சாயா தேவிக்கும் தபதீ என்னும் புத்திரியும், ச்ருதச்ரவஸீ, ச்ருதகர்மா என்று இரு புதல்வர்களும் பிறந்தனர். ச்ருதகர்மா தான் பின்னால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். சுவர்ச்சலாவின் குழந்தைகளும், சாயா தேவியின் குழந்தைகளும் சாயாதேவியின் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். நாளாக நாளாக சாயா தேவி, தனது குழந்தைகளிடம் சற்று அதிகப்படியான வாஞ்சை செலுத்தினாள். சுவர்ச்சலா தேவியின் மகனான எமதர்மராஜனுக்கு இதனால் மனத்திலே வேதனை மிகுந்தது. தனது தாய்க்கு ஏன் இந்த பாரபக்ஷம் என்பதனை நினைந்து வருந்தினார். ஒரு நாள் எமதர்மராஜனுக்குத் தாயிடம் கோபம் மிகுந்து வந்தது. தந்தையாகிய சூரிய தேவனிடம் சென்றார். சிறிது காலமாகத் தாயார் தங்களைத் தரக் குறைவாக நடத்துவதாகச் சொல்லிக் கண் கலங்கினார். தர்மாத்மாவான, யமனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார் சூரியதேவன்! தருமபுத்திரா! தரும வழியில் நடந்து வரும் உனக்கே கோபம் வருகிறதென்றால் இதில் உண்மை இருக்கத்தான் செய்யும். நான் இப்போதே உனது குறையை நிவர்த்திக்கிறேன் என்று சூரியதேவன் மகனை அன்போடு அருகே அழைத்து, ஆரத் தழுவி ஆறுதல் சொன்னார். சூரிய தேவன் சாயாதேவி மீது கோபம் மிகக் கொண்டார். சாயா தேவியிடம், இதைப் பற்றி விசாரித்தார். சாயா தேவி மவுனம் சாதித்தாள். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதால், சூரிய தேவன் கோபத்தில் அவளது சிகையைப் பற்றி இழுக்க அது வரை பொறுமையாக இருந்த சாயாதேவி நடந்த விருத்தாந்தங்கள் அனைத்தையும் எடுத்துக்கூறி, தனது பிழையைப் பொறுத்தருளுமாறு பகலவனின் பாதங்களைப் பணிந்து கேட்டாள். இவற்றையெல்லாம் கேட்டு சூரிய தேவன், சாயா தேவியை க்ஷமித்தார்; எமதர்மராஜனும் சாயாதேவி மீது அனுதாபம் கொண்டார். சூரிய தேவன் ஞான திருஷ்டியால், சுவர்ச்சலாதேவி தவமிருக்கும் இடத்தை கண்டறிந்து, நேராக குரு÷க்ஷத்ரம் சென்றார். சுவர்ச்சலா தேவியை ஆனந்தத்தால் அநுக்கிரஹித்தார். சூரிய தேவனின் சக்தியால், சுவர்ச்சலா தேவிக்கு, இருபுத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் அஸ்வினி தேவர்கள் என்று திருநாமம் பெற்றனர். இவர்கள் தேவலோக வைத்தியர்களாக விளங்கினர். ரைவதன் என்று மற்றொரு மகனும் பிறந்தான். சூரிய தேவன், சுவர்ச்சலா தேவியை அழைத்துக்கொண்டு, தமது லோகத்திற்குத் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக் கொண்டு இரு தேவியர் சமேதராக பத்மாசனத்தில் எழுந்தருளி பாரெல்லாம் பவனி வந்தார்.
எமதர்மராஜன், காசி அருகேயுள்ள கோகர்ணம் என்னும் திருப்பதியில் சிவபெருமானை ஆராதித்து அற்புதமான தவம் இயற்றினார். எமதர்மராஜனின் தவத்திற்கு திருவுள்ளம் கனிந்த பெருமான் எமனைத் திரு நோக்கம் செய்து, ஆதவன் புதல்வா! உனக்கு சையமணி என்னும் நகரத்தைப் பரிபாலிக்கும் பாக்கியத்தை அருளுவோம். எமது அருளாணைப்படி பிதுர் பரிபாலன தர்மத்தை காலம் தவறாமல் கண்ணியத்துடன் நடத்தும் உனக்கு காலன் என்னும் நாமம் சித்திக்கும் என்று திருவாய் மலர்ந்தார். எமதர்மராஜனும் சிவனைப் போற்றி தென் திசைக்கு அதிபதியாக விளங்கினான். அதே போல் வைவசுதமனு வைது மன் வந்தர மனு ஆனார். ச்ருதசரஸ், மேரு மலையில் தவம் செய்து சாவர்ணீ என்ற திருநாமம் பெற்றான். அவன் ஏழாவது மன்வந்தரத்து மனுவானார். சாயா தேவியின் புத்தரி யமுனையும் , சுவர்ச்சலா தேவியின் புத்திரி தபதியும் நதிகளாயினர். தபதீ என்பவள் ஸமவரணன் என்ற மன்னனை மணந்தாள். அதன் பின்னர்தான் அவள் விந்திய மலையிலிருந்து பெருகி வரும் தபதி என்ற நதியாக மாறினாள் என்பது புராணம்! அசுவனி தேவர்கள், பகவானின் திருவருட் கிருபையால், நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரமாக வானிலே ஒளி வீசும் பேறு பெற்றனர். ரைவதனும் பகவானின் பேரளால் மனுவாகி ரைவத மனுவந்தரத்தில் சகல அண்ட சராசரங்களையும் ரட்சிக்கும் உன்னத மேன்மை அடைந்தான். ஒவ்வொரு மனுவின் காலத்திலும் ஒருவர் இந்திரனாக இருப்பார். இந்த பதினான்கு மனுக்களின் காலத்தில் பதினான்கு பேர் இந்திரனாக இருப்பார்கள். இவ்வாறு சூரிய புத்திரர்கள் பாரெல்லாம் போற்றும் பெருமை பெற்றனர். ச்ருதகர்மாவான சனீஸ்வரர், இளமை முதற்கொண்டே மற்ற புத்தர புத்திரிகள் எவருக்கும் இல்லாத ஓர் தனித்தன்மை பெற்ற விளங்கினார். சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! சாயாதேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணிப்பில் தனது லோகத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். சனீஸ்வரரும், சாயாதேவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை. அடுத்து பொருளாதாரம், செயல்பாடு, தெளிவு பெற்று மகிழ்தல் கடைசியில் மறைதல் என அவனது வாழ்கை நிறைவுறுகிறது. இந்த வரிசையில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி எனத் தென்படுகிறது. இறுதியில் உள்ள சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப்படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர். பிறந்தவனுக்கு இறப்பு உண்டு; இறப்பு இருப்பவனே பிறக்க இயலும்; அதுதான் நியதி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். விதை முளைக்கிறது; வளர்கிறது. இலை, பூ, காய், கனி என மாறுபாடுகளைச் சந்திக்கிறது; வாட்டமுறுகிறது; மறைகிறது என்பது நமக்குத் தெரியும். உடலில், ஆன்மவுக்குக் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனிபகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப - துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார். சம் சனைச்சராய நம: என்று சொல்லி, சனி பகவானுக்கு 16 வகை உபசாரங்களை அளித்து வழிபடலாம். நம: ஸூர்யாய ஸோமாய மங்களா புதாய ச குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவே நம: எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, 12 நமஸ்காரங்களைச் செய்தால், 12 ராசியில் வீற்றிருக்கும் கிரகங்களை வணங்கி வழிபட்டதாக ஆகிவிடும். உடல் - உள்ளத்தை வாடவைத்து, அடிபணிந்தால்தான் பலன் உண்டு என நினைக்க வேண்டாம். உள்ளத் தெளிவுடனும் ஈடுபாட்டுடனும் சனி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபட்டால், அவனருளால் இன்பம் பொங்கும்; மூன்று நிலைகள் இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரை பொங்கும் சனியாகவே நமக்குக் காட்சி தருவார். சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றினால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை. வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல்பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்திப்போம்.
சனி பகவானின் பிறப்பையும், அவரது பெருமையையும் படிப்பவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும்.
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச் செகம் வாழ இன்னருள் தா! தா!

சனீஸ்வர பகவான் சங்கடங்களைத் தீர்ப்பவர்; மங்கலம் பொங்கும் மனையிலே ஒரு மனதாக, அவரைப் போற்றுவோர்க்கு உன்னதமான பதவியைப் பேரானந்தம் பொங்க அருளும் கருணைத் தேவன்! ஊழ்வினைப் பயனால், நம்மை ஆரம்பத்தில் சோதனைக்குள்ளாக்கும் சனிபகவானைத் தினமும் தியானித்து பூஜித்தால், அவர் நமக்கு ஏற்பட இருக்கும் இன்னல்களைக் குறைத்து இறுதியில் ஈடில்லா இன்பத்தைப் பெருக்குவார்! காகம் அமர்ந்து, மேற்கு திசை முகம் நோக்கி, நீலநிற வஸ்திரம் அணிந்து அபயஹஸ்தம் நல்கும் சனீஸ்வர பகவான் தாமச குணம் கொண்டவர்! சனீஸ்வர பகவான் தம்மைச் சரணடைந்தோர்க்கு, சஞ்சலங்களைத் தீர்த்து நல்ல வரங்களைத் தந்து சந்தோஷத்தை நிலை பெறச் செய்வதில் கற்பக விருட்சம் ! காமதேனு! காலச் சக்கரத்தைப் பிளப்பதில் அவர் கதிரவனுக்கு நிகரானவர்.
சாப்பாடு போடுபவர்
ஒரு மனிதனின் வாழ்நாளை நிர்ணயம் செய்வதும், அவரவர் தகுதிக்கேற்ப சாப்பாடை வழங்குபவரும் சனி பகவானே. எனவே அவரை ஆயுள்காரகன் என்றும், ஜீவனகாரகன் என்றும் சொல்வர். அவர் தர்மப்பிரபு. தர்மத்துக்கு மிக மிக கட்டுப்படுபவர். பூஜைக்குச் சென்ற நளன், தன் காலில் சரியாக தண்ணீர் ஊற்றிக் கழுவவில்லை என்பதைக் கூட அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பூஜா தர்மத்தை மீறியதாக ஏழரை ஆண்டுகள், அவனது குடும்பத்தையே பாடாய் படுத்தியவர். எல்லாம் பர்பெக்ட்ஆக இருக்க வேண்டும் என்று அதிகம் எதிர்பார்ப்பார். இது சற்று தவறினாலும், அவரது கோபக்கனலுக்கு ஆளாகி விடுவோம். அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் சாப்பாடு கிடைக்கும். அதுபோல, ஆயுளை நிர்ணயம் செய்பவராகவும் திகழ்கிறார்.
நினைத்ததை நடத்துபவர்
ஒருமுறை தேவலோகத்தில் ஒரு மண்டபம் கட்ட முடிவாயிற்று. அதில், தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் தங்கி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது திட்டம். சிவபெருமானுக்கு இதில் இஷ்டமில்லை. அதேநேரம், அவரது மனைவி பார்வதி மண்டபம் கட்டும் விஷயத்தில் ஆர்வமாக இருந்தாள்.தேவஜோதிடர்கள் மண்டபம் கட்ட நாள் பார்த்தனர். அப்போது ஒருவர், இதைக் கட்டி முடித்தாலும் எரிந்து போகும். சனியின் பார்வை சரியில்லை, என்றார். இருந்தாலும், சனீஸ்வரனை சரிக்கட்டி விடலாம் என நினைத்த பார்வதி மண்டபத்தை கட்ட ஏற்பாடு செய்தாள்.  பார்வதி சிவனிடம், மண்டபத்தை அழியாமல் பாதுகாக்கும்படி சனீஸ்வரனிடம் சொல்வோம். அவன் நம்மை மீறவா செய்வான்? அப்படி மீறினால், நீங்கள் எனக்கு ஒரு சமிக்ஞை செய்யுங்கள். அவன் எரிப்பதற்கு முன் நானே  எரித்து விடுகிறேன். அவன் ஜெயிக்கக்கூடாது என்றாள். எல்லாருக்கும் பாவபுண்ணிய பலனைத் தர வேண்டும் என்ற உத்தரவு போட்டவரே  மீறலாம் என்றால் எப்படி?  சிவன் பார்வதியிடம், நானே அவனிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவன் கேட்க மறுத்தால்,  தலைக்கு மேல் உடுக்கையைத் தூக்கி அடித்து சமிக்ஞை செய்கிறேன். நீ  தீ வைத்து விடு, என சொல்லிவிட்டு சென்றார். சனீஸ்வரனிடம் சென்று, தேவர்களுக்காக இந்த மண்டபத்தை விட்டுக்கொடேன், என்றார்.  சிவனே சொல்லும் போது என்ன செய்ய!சனீஸ்வரர் தடுமாறினார். வேறு வழியின்றி, பெருமானே! தாங்கள் நடனமாடுவதில் வல்லவர். உங்கள் நடனத்தை நான் பார்த்ததில்லை. எனக்காக ஆடிக்காட்டினால் விட்டு விடுகிறேன், என்றார்.எனக்கு சகாயம் செய்த உனக்கு நான் இதைக்கூடவா செய்யமாட்டேன்! என்ற சிவன், உடுக்கையை தலைக்கு மேல் தூக்கி அடித்தபடியே ஆடினார். பார்வதியின் காதில் சத்தம் விழுந்தது. ஆஹா! சனீஸ்வரன் சம்மதிக்கவில்லை போலிருக்கிறதே! என்று எண்ணியவள், மண்டபத்துக்கு தீ வைத்து விட்டாள். சனீஸ்வரனும் கடமையைச் செய்து விட்டார், சிவனும் நினைத்ததை சாதித்து விட்டார். அவரவர் பாவ புண்ணியத்தைப் பொறுத்து சனீஸ்வரன் பலன் வழங்கியே தீருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
சனிபகவான் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!

நளதீர்த்தத்தில் தீர்த்தமாடுவோர்க்கு அனைத்து கிரஹ தோஷங்களும் விலகும். இங்கு கோயில் கொண்டுள்ள ஈசுவரனையும், ஈசுவரியையும், சனிபகவானையும், திருமால், பிரமன், இந்திரன், முசுகுந்தன், அஷ்டதிக்கு பாலகர், அகத்தியர், சப்தரிஷிகள், அர்ச்சுனன், நளன், கலிங்காதிபதி, வாணி, முதலியோர் பூஜித்து அரும்பெரும் வரங்களைப் பெற்றுள்ளனர். இங்குள்ள திருக்கோயிலில், கோவில் கொண்டுள்ள ஆதிமூர்த்திக்குத் தர்ப்பாணேஸ்வரர் என்பது திருநாமம். அம்பிகையின் திருநாமம் போகமார்த்த பூண்முலையாள். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள நவக்கிரஹதேவன் சனிபகவான்! மற்ற நவக்கிரஹதேவர்களுக்கு இத்திருக் கோயிலில் சன்னதி கிடையாது. கோயிலுக்குள் நுழைந்ததும் அம்மன் சன்னதிக்கு முன்னால் சனிபகவான் சன்னதி அமைந்துள்ளது. தர்ப்பாணேஸ்வரரை, சனிபகவான் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள சனிபகவான் தமது விக்ரஹத்தின் தாழே தமது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அருளப்பட்டுள்ளதால் அந்த யந்திரத்தின் சக்தி அளவிட முடியாதது. சனிபகவானின் திருச்சன்னதி மிக்கச் சிறப்பும், சக்தியும், மூர்த்திகரமும் பெற்று விளங்குகிறது. சனிபகவானுக்கு உகந்ததும், பெருமை வாய்ந்தததுமான இத்திருத்தலத்தில், எழுந்தருளியுள்ள சனிபகவானின் பெருமைகளையும், மகிமைகளையும் அளவிட முடியாததொன்றாகும்.
திருநள்ளாற்றுத் திருத்தலம்:செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளரும் சோழவள நாட்டிலே - காவிரி ஆற்றின் தென்கரையிலே திருநள்ளாறு என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இறைவளமும், இயற்கை வளமும் செழித்தோங்கும் இத்தெய்வீகப் பதியில், நோக்குமிடமெல்லாம் பச்சைப் பட்டு விரித்தாற் போல் வயல்களைக் காணலாம். இத்திருத்தலம் பேரளம் காரைக்கால் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. மாயவரம் அல்லது காரைக்கால் சென்றால் திருநள்ளாறு திருத்தலத்தை சுலபமாக அடையலாம்.ஆதிகாலத்தில் இத்திருத்தலத்தைப் பிரம்மதேவன் பூஜித்ததால் ஆதிபுரி எனவும், தல விருட்சம் தருப்பையாதலால், தருப்பாரண்யம் எனவும், முசுகுந்த சக்கரவர்த்தி நகவிடங்கப் பெருமானைப் பிரதிஷ்டை செய்தமையால் நக விடங்கபுரம் எனவும், இங்கு கோயில் கொண்டுள்ள சனிபகவானைப் பூஜித்து, மேன்மையைப் பெற்ற நளமன்னனால் நளேச்சரம் என்றும் பல திருநாமங்களை, இத்திருத்தலம் பெற்றுள்ளது. இத்திருத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. விடங்கர் என்பதற்கு தானே தோன்றியவர், சுயம்பு மூர்த்தி என்பது பொருளாகும். அதனால்தான் இத்திருத்தலத்து, விடங்கத்தியாகரின் திருநாமம் நகவிடங்கர் என்று சொல்லப்படுகிறது. இத்திருத்தலத்தில் எம்பெருமான் ஆடிய திருநடனத்துக்கு உன்மத்த நடனம் என்று பெயர். முற்காலத்தில் பதிமூன்று தீர்த்தங்கள் இருந்தன. இன்று நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், ஸரஸ்வதி தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அம்ஸ தீர்த்தம் என்று ஒரு சில தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன.
நளதீர்த்தம் - நளன் தீர்த்தமாடியது.
பிரம்ம தீர்த்தம் - பிரம்மா தமது தண்டாயுதத்தால் இத்தீர்த்தத்தை நிர்மாணித்து சிவபிரானுக்கு அபிஷேகம் செய்து பூஜித்தது.
ஸரஸ்வதீ தீர்த்தம் - ஸரஸ்வதி சிவனை வழிபட்ட தீர்த்தம்.
அகத்தியர் தீர்த்தம் - அகஸ்தியரால் சிவபிரானுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம்.
அம்ஸ தீர்த்தம் - தேவர்களும் முனிவர்களும் ஒன்று கூடி உருவாக்கிய தீர்த்தம்.

சனிபகவானைத் தரிசிக்க செல்வோர் வடமேற்கு திசையிலுள்ள நளதீர்த்தத்தில் கண்டிப்பாக நீராடி செல்ல வேண்டும். நளதீர்த்தக் கரையிலுள்ள விநாயகருக்கும் நளமன்னன் குடும்பத்தினருக்கும் வணக்கத்தைச் செலுத்த வேண்டும். இந்த நளதீர்த்தத்தை நளனுக்காக இறைவன் அருள் செய்தது வைகாசி மாதம். புனர்பூச நக்ஷத்திரம் ஆகும். அந்நாள் திருநள்ளாற்றில் மிக விசேஷமான வழிபாட்டு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று திருநள்ளாற்றில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சனிபகவானைத் தரிசித்து இன்புறுவர். பிதுர்க்களுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்ய இயலாது போனவர்கள். அமாவாசைக்கு முதல் நாள் இரவு கோவிலில் தங்கி மறுநாள் தீர்த்தமாடி, தான தருமங்களைச் செய்து, சனிபகவானையும் தர்ப்பாணேஸ்வர ஈசனையும் வழிபட வேண்டும். அங்ஙனம் வழிபடுவோர் பித்ருகளுக்குச் செய்ய வேண்டிய கர்மா பண்ணாத தோஷம் நீங்கி புண்ணியத்தை அடைவர்.
பூர்வஜென்ம பாப வினைகள் விலக, மூன்று சனிக்கிழமைகள் தொடர்ந்து திருநள்ளாறு சனிபகவானை வழிபட்டு அன்னதானம் செய்தால் பாபவிமோசனம் பெற்று சனிபகவான் பேரருளையும் பெறுவர். மார்கழி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று சனி பகவானுக்கு வழிபாடு புரிந்து, எட்டு அந்தணர்க்கு அன்னதானம் செய்தால் மூன்று பரம்பரையாக தொடர்ந்து வரும் சாபங்கள் விலகும். தெண்டி குப்தன் என்ற அரசர் தான் செய்த பாப வினைகளுக்கு விமோசனம் தேடி திருநள்ளாறு வந்து, சனிபகவானை வழிபட்டு வந்தான். சனிபகவான் பேரருளால் சிவபெருமானே தெண்டிகுப்தன் செவிகளில் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசிக்கும்படியான பெரும் பேறு பெற்றான்.
சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறும் தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆதிமூர்த்தி சன்னதியைத் தரிசித்து முதல் பிரகாரத்திற்கு வரவேண்டும். அங்கு சோபன மண்டபம் அமைந்துள்ளது. சோபன மண்டபத்திற்கு வடக்கு முகமாகச் சென்றால் அம்மன் சன்னதியைக் காணலாம். அம்மன் திருநாமம் பிராணேஸ்வரி அம்மன் என்றும் யோக மார்த்த பூண்முனையாள் என்றும் திருநாமம் உண்டு. அம்மன் சன்னதிக்கு அருகில் சுவர்ண பிள்ளையார் சன்னதியைத் தரிசிக்கலாம். அம்மனையும், பிள்ளையாரையும் தரிசித்து அம்மன் சன்னதி முன்புறம் கிழக்கு பக்கம் சனிபகவான் சன்னதி தரிசிக்கலாம். இக்கோவிலில் சனிபகவானுக்கு மட்டும் தனி சன்னதி! மற்ற எட்டு கிரகங்களும் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இந்த ஆலயத்தில் கர்ப்பகிரஹத்தில் தெற்கு திசையில் விடங்கதியாகர் மண்டபமும், அர்த்த மண்டபமும், சபா மண்டபமும் அமைந்துள்ளது. இதை தவிர உட்பிரகாரத்தில் பரிவார தேவதைகளை தரிசிக்கலாம். மேற்கு புறம் சித்தர்களும், சப்தரிஷிகளும் வணங்கி வழிபட்ட சிவலிங்க திருமேனியைத் தரிசிக்கலாம். அங்கிருந்து தென்புறமாக வந்தால் சபாநாதர். பைரவர் இருக்கும் மண்டபத்தைக் காணலாம். வலது புறத்தில் லட்சுமியின் திருமேனியை தரிசிக்கலாம். அங்கிருந்து பிரதக்ஷிணமாக வரும் போது முருகப் பெருமான், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சண்டிகேசுவரரை தரிசிக்கலாம். கோபுர வாயிலுக்கு வெளியே அடையான் முக்தி மண்டபத்தைக் காணலாம். திருநள்ளாற்று நாயகனான சனிபகவானை வழிபடுவோர்க்கு, அப்பெருமான் அவர்களது ஜாதகத்திலுள்ள தோஷங்களை நிவர்த்தி செய்து சகல சௌபாக்கியங்களும் அருளுவார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போது, திருநள்ளாற்றுக்கு வந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சனிபகவானை வழிபடுவோர்க்கு, ஜாதக ரீதியாக ஏதாவது பாதிப்பு இருந்தால் அது நிவர்த்தியாகும். சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள் முடிச்சு எண்ணை விளக்கு ஏற்றி ஒன்பதுக்குக் குறையாமல் வலம் வர வேண்டும். சனிபகவானுக்கு ப்ரீதி தரும் சனிதோத்திரங்களையும் மந்திரங்களையும் ஜபிக்க வேண்டும். ஆஞ்சநேயரை தரிசிப்போர்க்கு சனிபகவான் அருள் செய்வார். சனிபகவானுக்கு சங்கு புஷ்பம், நீலோத்தம பூ, துளசி, வன்னிபத்ரம், பில்வபத்ரம் இவற்றால் அர்ச்சனை செய்வது மிக்கச் சிறப்படையதாகும். இந்த வழிபாட்டால் நோய் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐசுவரியத்துடன் வாழ்வர். வைகாசி மாதம், உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் தொடங்கி திருநள்ளாற்றில் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடக்கும் பிரம்மோத்ஸவத்தைத் தரிசிப்போர்க்கு சனிபகவான் அவர்களது வாழ்விலுள்ள சங்கடங்களைத் தீர்த்துச் சந்தோஷத்தை வர்ஷிப்பார். சிவபெருமானை வழிபடுவதும், ஆஞ்சநேயரை வழிபடுவதும், சனிபகவானுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். சனிபகவானை மலையாக நம்புவோர்க்கு மலையத்தன கெடுதல் வந்தாலும் அடியோடு மறைந்து போகும். சனிபகவான் அவரை நம்பிக்கையோடு வழிபடுவோர்க்கு நலம் தருபவர். நிலம் தருபவர். நிம்மதி தருபவர். வாழ்வில் என்றென்றும் சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தருபவர்.
திருநள்ளாறுக்கும் சனிக்கும் என்ன தொடர்பு
பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாகவும், அருகிலும் இருக்கிறதோ, அதேபோல் சனி கிரகத்தினுடைய நீள் வட்ட பாதையில் உச்சமான கதிர்வீச்சு திருநள்ளாறு தலத்தில் அதிகம் என்பது விஞ்ஞான உண்மை. இதனை ஞான திருஷ்டியில் உணர்ந்த முன்னோர் சனிபகவானுக்கு இத்தலத்தில் கோயில் அமைத்தார் கள். சனி கிரகம் தினமும் தன் கதிர்களை இப்பகுதியில் வாரி இறைக்கிறது. அதனால் ஒருநாள் இங்கு தங்கினால் சனிக்கிரகத்தின் கதிர்வீச்சுக்கள் நம் உடலில் பட்டு நமக்கு நன்மையான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு இரவு மட்டுமாவது தங்கி காலையில் சனி பகவானை வழிபடுவது நல்ல பயன் தரும்.
சனிப்பெயர்ச்சிக்குப் பின் 45 நாள் வரலாம்
நவக்கிரகங்கள் ஒன்பதுக்குள் மிகவும் மெதுவாக சஞ்சாரம் செய்பவர் சனி. இதனால் அவரை மந்தன் என்பர். இந்த கிரகம் வான வீதியில் ஒரு பாகை தூரத்தை கடக்க சராசரி ஒரு மாத காலமாகிறது. வக்ரம், அதிசாரம் ஆகிய நிலைகளில் இந்தக் காலம் சற்று மாறுபடும். இது வானியல் கோள்கதிர்களின் முடிவாகும். இந்த முடிவின்படி சனிபகவான் ஒரு பாகையைக் கடக்க ஒரு மாத காலத்தையும் சனிப்பெயர்ச்சி காலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகையால் சனிப்பெயர்ச்சி நாளை மையமாகக் கொண்டு 15 நாட்கள் முன்பாகவோ, 15 நாட்கள் பின்போ வந்து சனிபகவானை தரிசனம் செய்யலாம். இது பூரண பலன் தரும். சனிபகவானுடைய ரட்சாயந்திரத்தை 45 என்ற எண்ணை மனதில் கொண்டு அமைத்துள்ளனர். இதனால், சனிப்பெயர்ச்சி தினத்தில் இருந்து 45நாட்கள் முன்பு அல்லது பின்பு தரிசனம் செய்யலாம் என்றாகிறது.
சனிப்பெயர்ச்சி திருவிழா
நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ கர வருஷம், மார்கழி மாதம் 5-ந் தேதி (21-12-2011) புதன்கிழமை, கிருஷ்ணபக்ஷ ஏகாதசி, சுவாதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை மணி 7.24 க்கு ஸ்ரீசனீஸ்வர பகவான் கன்னி ராசியை விட்டு துலா ராசிக்கு பிரவேசம் அடைவதை முன்னிட்டு விழுப்புரம் வட்டம், கோலியனூரில் மேற்குமுக ஸ்ரீவாலீஸ்வர சுவாமி திருக்கோயிலில், இராமாயணகாலத்தில் ஸ்ரீவாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வரர் என்னும் திருநாமம் கொண்டு, பக்தர்களின் சங்கடங்களை உடன் நீக்கியருளி தீர்க்காயுளையும், பொன்னையும், பொருளையும், வெற்றியையும் வாரி வழங்கும், வள்ளல் பிரானாக, வன்னிமரத்தடியில், இந்தியாவில் எங்கும் இல்லா வகையில் ஸ்ரீ சங்கடஹர வினாயகர் உடனிருக்க, திருநள்ளாருக்கு நிகரான பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்கும், சரித்திரபுகழ் பெற்ற, மிகப் பழமை வாய்ந்த திவ்ய÷க்ஷத்ரமாகிய கோவில்புரநல்லூர் என்னும் கோலியனூரில் தனியாக தெற்குநோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகூர்மாங்க சனீஸ்வர பெருமானின் சனிப்பெயர்ச்சி விழாவின் பலன்கள்:
இந்த சனிப்பெயர்ச்சியினால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு உத்திரம் 2-ம் பாதம்முதல், அஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை வரையிலான இராசிகாரர்களுக்கு ஏழரைச் சனியின் காலமாகவும், புனர்பூசம் 4 பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை, கடக ராசி காரர்களுக்கு, அர்த்தாஷ்டம சனியின் காலமாகவும், பூரட்டாதி 4 பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய மீனராசிக்கு அஷ்டம சனியின் காலமாக இருப்பதால் மேற்படி இராசிகாரர்கள் தங்கள் சக்திக்கு தக்கவாறு அர்ச்சனை, அபிஷேகம், சாந்தி ஹோமம், தானங்கள் (தானத்தில் சிறந்தது அன்னதானம்) போன்ற பரிகாரங்கள் செய்து நன்மை அடையலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ரிஷபம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய இராசிகாரர்களுக்கு மிக நன்மையும் ஏனைய ராசிகாரர்களுக்கு வழிபாட்டினால் நல்ல பலன்கள் உண்டாகும். எனவே இந்த இராசிகாரர்கள் ஸ்ரீ சனீஸ்வரபகவானை வழிபடுவது உத்தமம்.
பிற தலங்கள்: சனி பகவான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அத்திருத்தலங்களுக்குச் சென்று சனிபகவானால் ஏற்படும் தோஷத்திலிருந்து விடுபடலாம்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் 27அடி உயரத்தில் நின்றகோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் இவர்தான். இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டவர். பீடத்துடன் சேர்த்து இவரது உயரம் முப்பத்து மூன்று அடியாகும். தங்க நிறத்தில் ஒளிரும் இந்த மகாசனீஸ்வரர் தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் திகழ்கிறார். ஆகமங்களில் இவரது வாகனம் கழுகு என்று கூறப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார். இவர் எழுந்தருளியுள்ள பீடத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பங்களும் பறந்தோடிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இயற்கைச் சூழலில் வெட்டவெளியில் நின்று கொண்டிருக்கும் இந்த சனீஸ்வரருக்கு முன், சுமார் 54அடி உயரமுள்ள மகாகணபதி அருள்பாலிக்கிறார். இந்த விநாயகரின் முதுகில் நாளை வா என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. இந்த மகாகணபதி பலவித அரிய மூலிகைச் சாற்றினைக் கொண்டு, விசேஷமாகப் பதப்படுத்தப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டவர். பெரிய திருவுருவிலிருக்கும் இந்த கணபதியை நவகிரக சாந்தி கணபதி என்றும் சொல்கிறார்கள். மகாகணபதியின் பின்புறத்தில் உள்ள சிறிய சந்நிதியில் திருமணக்கோலத் துடன் காட்சி தரும்- பஞ்சலோகத்தி னாலான மகாவல்லப கணபதியும், அவருடன் திருமணக்கோலத்தில் தேவசேனாதிபதியும் காட்சி தருகிறார்கள். இவர்களுக்கு அருகில் கோகிலாம்பிகை சமேத கல்யாணசுந்தரரும் காட்சி தருகிறார். மேலும் 16 அடி உயரத்தில் (கல் விக்ரகம்) நவகிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன் காட்சியளிக்கின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்திற்குரிய விருட்சங்களும் அருகில் உள்ளன. ஒவ்வொரு சிலையின் அடியிலும் சிவலிங்கம் உள்ளது. இத்திருத்தலத்தினை சூரியத் தோட்டம் என்று அழைக்கிறார்கள். இங்கு 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள், 60 வருடத்திற்கான விருட்சங்கள், 12 ராசிகளுக்கான மரங்கள், ஒன்பது கிரகங்களுக்கான மரங்கள் என 108 மரங்கள் இங்குள்ளன. இங்குள்ள மரங்கள், செடிகள் அனைத்தும் நவகிரக தோஷத்தை நீக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த எழில்மிகுந்த தோட்டத்தின் நடுவில் சுமார் நாற்பது அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரைத் தரிசித்தால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சனிப்பெயர்ச்சியின்போது இந்த மகாசனீஸ்வரரைத் தரிசிப்பது சிறப்பாகும்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கல்பட்டு என்ற கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற நிலையில் சுமார் இருபது அடி உயரத்தில் அருள்புரியும் சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
தேனி மாவட்டம் குச்சனூரில் சனி பகவான் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில்தான் சனீஸ்வரரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சனியின் தாக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் பால், பச்சரிசி, வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், அவல், கறுப்பு எள், சர்க்கரை, உளுந்து, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவற்றைப் படைத்து, கறுப்பு வஸ்திரம் அணிவித்து, நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட்டால் ஏழரைச் சனியால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்று ஜோதிடர் கள் சொல்வர். இவருக்குத் திருவுருவம் இல்லாமல், சற்று அகலமான லிங்கம்போல் காட்சி தருகிறார்.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி வட்டம் திருக்கொள்ளிக்காட்டில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவி மிருதுபாதநாயகி. இத்தல இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கி பொங்குசனியாக மாறினார். இங்கு சனி பகவானுக்கு தனிசன்னதி உள்ளது. இறைவன், இறைவியை வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனி தோஷம் நீங்கும்.
திருவாரூரில் வன்மீகநாதர்-கமலாம்பிகை (தியாகராஜர்) ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சனிபகவான் சிவபெருமானை வழிபட்ட தாகச் சொல்லப்படுகிறது. மேலும், இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்வரிசையில் நிற்பதைக் காணலாம். திருநள்ளாறில் சனி பகவானைத் தரிசிப்பவர்கள் தங்கள் முழு தோஷமும் நீங்க, திருவாரூரில் அருள்புரியும் ஈசனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால், இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகப் போற்றப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெரிச்சியூர் கிராமத்தில் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள சனி பகவான் தனிச்சன்னதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இவரை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் முருகப் பெருமானை வழிபட்டபின், அங்கு கிழக்கு நோக்கி தனியாகக் காட்சி தரும் சனி பகவானை வழிபட்டால் சனியின் தோஷம் விலகும்.
திருச்சி உறையூரில் கூரை இல்லாத சன்னதியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளி அம்மனைத் தரிசித்தபின், அக்கோயிலுக்குள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருள் புரியும் பொங்கு சனியை வழிபட்டால் சனியின் தோஷங்கள் நீங்கும். மற்ற கோயில்களில் உள்ள சனி பகவானை வழிபட்டால் அங்கு தரும் விபூதி போன்ற பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல மாட்டார்கள். ஆனால் இவர் பொங்கு சனி பகவான் என்பதால், இவரிடமிருந்து கொண்டு செல்லும் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு சென்றால் மங்களம் பொங்கும் என்பது நம்பிக்கை.
தஞ்சாவூர் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இத்தலத்தில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இங்குள்ள சனிபகவான், ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன் என்ற அகந்தையுடன் நிற்கும் கோலத்தில், இடுப்பில் கை வைத்துக் கொண்டுள்ளார். இவர் சிவபெருமானால் இரண்டாகக் கிழிக்கப்பட்டு அதன்பிறகு மீண்டும் உயிர் பெற்றார். எனவே, இக்கோவிலில் அருள்புரியும் ஈசனையும் அம்பாளையும் வழிபட்டபின், சனி பகவானை வழிபட சனியின் தாக்கம் விலகும்.
தஞ்சாவூர் கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் ராமநாதசுவாமி சமேத பர்வதவர்த்தினி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனிச் சன்னதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மகன்கள் மாந்தி, குளிகன் மற்றும் தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியுள்ளார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் பெற்றார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
தஞ்சாவூர் கும்பகோணம் அருகிலுள்ள  சூரியனார் கோவிலில் சனி பகவான் தன் இரு பத்தினிகளுடன் தனிச்சன்னதியில் வாகனமின்றி அருள்புரிகிறார். இவரை குடும்பத்துடன் வழிபட அனைவரின் தோஷங்களும் நீங்கும் என்பர்.
தஞ்சாவூர் குடந்தை மேலக்காவிரி ஆற்றின் தென்கரையில் ஜெய் ஆஞ்சனேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேயர், சனி பகவானை தன் காலில் போட்டு மிதித்த படி காட்சி தருகிறார். இந்த ஆஞ்சனேயரை சனிக்கிழமை விரதம் இருந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால், ஆஞ்சனேயர் அருளுடன் சனியின் தாக்கமும் விலகும்.
தஞ்சாவூர் கும்பகோணம் மேலக்காவிரியில் அமைந்துள்ள ஹயக்ரீவர் திருக்கோயிலை சனிப்பிரீதி செய்யும் தலம் எனப் போற்றுகின்றனர். சனிப் பெயர்ச்சிக்காக பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள், இங்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கினால், சனி பகவானின் பிடியில் இருந்து தப்பலாம். தவிர, சனீஸ்வரரின் பேரருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதிதேவிக்கு உகந்த தலமாக இருந்தாலும், சனிக்கிழமைகளில் இங்குள்ள அனுமரையும் சனீஸ்வரரையும் பக்தர்கள் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். சனிப்பெயர்ச்சி ஹோமமும் இங்கு சிறப்புற நடைபெறுகிறது. வியாபாரம் செழிக்க, திருமணத் தடை நீங்க இங்கு வழிபடுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-திருவைகாவூர் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டவர்த்தி எனும் ஊர். இங்கு தான்தோன்றிநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் பெயர் தையல்நாயகி.  மகா சிவராத்திரிக்குப் பெயர்பெற்ற தலமாக போற்றப்படும் இத்தலம் எமபயம் போக்கும் தலமாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள தான்தோன்றி நாதரையும் தையல்நாயகி அம்பாளையும் மனதாரப் பிரார்த்தித்தால், மரண பயம் நீங்கும்; நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழலாம் என்கின்றனர், பக்தர்கள். இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு.. இங்கு சனீஸ்வர பகவான், தனிச் சன்னதியில் இருந்தபடி, அழகுறத் தரிசனம் தருகிறார். சனிக்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து, சனீஸ்வரரைத் தொடர்ந்து தரிசித்து எள் தீபமேற்றி வழிபடுவதை, தஞ்சாவூர்-கும்பகோணம் மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளாக வந்து, சனீஸ்வரரைத் தரிசித்துச் செல்கின்றனர். சனீஸ்வரருக்கு உரிய கறுப்பு வஸ்திரத்தைச் சார்த்தி, எள் தீபமேற்றி, எள் சாத நைவேத்தியம் செய்து, சிறப்பு பூஜையில் பங்கேற்றால், சனி தோஷம் விலகும்; சங்கடங்கள் அகலும் என்பது ஐதீகம்!
தஞ்சாவூர் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்றுவதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள். இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை பொங்கு சனி என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.
மதுரை சோழவந்தானில் உள்ளது சனீஸ்வர பகவான் திருக்கோயில். இங்குள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். விருச்சிக ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.
நாகப்பட்டினம் வைதீசுவரன் கோயிலில் வைத்தியநாதரும், தையல்நாயகியும் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை. மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தவக்கோல சனிபகவான் சன்னதி கொண்டுள்ளார். காக வாகனத்தில் அமர்ந்துள்ள இவரது வலக்கையில் தண்டம் இருக்க, இடக்கை வரத முத்திரை காட்டுகிறது.
கரந்தை சிதாநாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனிபகவான் வில், அம்பு, திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயிலில் எழுந்தருளியுள்ள 18அடி உயர சாளக்கிராம ஆஞ்சநேயரையும், கன்னியாகுமரி சுசீந்திரம் திருத்தலத்தில் அருள்புரியும் 18 உயர ஆஞ்சனேயரையும் வழிபட்டால் சனி பகவான் உங்கள் பாதையில் குறுக்கிடமாட்டார். ஏனெனில், விநாயகரை எப்படி சனி பகவானால் பிடிக்க முடியவில்லையோ அதேபோல் ஆஞ்சனேயரும் சனி பகவானால் பிடிக்க முடியாதவர். எனவே, ஆஞ்சனேய சுவாமியை வழிபட சனியின் தோஷம் விலகும்.
திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள கல்லுக்குழி என்னுமிடத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேய சுவாமி மிகவும் கீர்த்தி பெற்றவர். மேலும், இக்கோயில் வளாகத்தில் சக்கரத்தாழ்வாரும், நரசிம்மமூர்த்தியும் அருள்புரிவதால், ஒரே சமயத்தில் இந்த மூர்த்தங்களை வழிபட சனியின் தோஷம் விலகும் என்பர்.
திருச்சியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்தமர்கோவில். இங்கு அருள் புரியும் சப்தநாதர்களை (சப்தகுருக்கள்) ஒரே சமயத்தில் வழிபடுவதால் சனியின் தாக்கம் நீங்கும். மேலும் இக்கோவிலுக்கு அருகில் தென்பண்டரிபுரம் என்னும் திருத்தலம் (பிச்சாண்டார் கோவில்) உள்ளது. இங்கு ராதா, ருக்மிணி சமேத பாண்டுரங்கன் அருள்பாலிக் கிறார். மிகவும் பழமையான இக்கோவிலில் எழுந்தருளியுள்ள பாண்டுரங்கனுக்கு சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து, துளசி மாலை அணிவித்து ஆலிங்கனம் செய்து கொண்டால், சனியின் அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பர். ஆலிங்கனம் என்பது வழிபாடுகள் முடிந்தபின், மூலவரான பாண்டு ரங்கனைக் கட்டிப்பிடித்து தழுவிக் கொள்வது ஆகும். அப்போது பகவான் பாண்டுரங்கன் நம் துன்பங்களைத் தீர்த்து ஆசீர்வதிப்பதாக நம்பிக்கை. மேலும், நம்முடன் பகவான் நட்புடன் இருப்பதாக ஐதீகம். இங்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும் புக்கா பொடி என்னும் கருப்பு நிற குங்குமம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப் படுகிறது. இதனை சனிக்கிழமை களில் நெற்றியில் இட்டுக்கொண்டால் சனி தூரமாகப் போய்விடுவார்.
பெரும்பாலான பெருமாள் கோயில்களில், சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில்  அருள் பாலிப்பது வழக்கம்.  இவரை சனிக்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும். மேலும், இவரது பின்புறத்தில் நரசிம்மர் எழுந்தருளியிருப்பார். ஒரே சமயத்தில் சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் வழிபடுவதால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பர். நரசிம்ம அவதாரத்தினைக் கண்டால் சனி பகவானுக்குப் பயம் என்ற கருத்து நிலவுகிறது.
மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில் சனி பகவான் வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் ஐந்தடி ஒன்பது அங்குல உயரமும், ஓரடி ஆறு  அங்குல அகலமும் உடைய கல் பலகைதான் திருமேனி. இவரை ஆண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபட வேண்டும். அதுவும் சிவப்பு ஆடை அணிந்திருக்க வேண்டும். பெண்கள் இவரை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. சிறிது தூரத்திலிருந்தே தரிசிக்கலாம். இந்த ஊரினை சனி பகவான் காவல் காக்கிறார் என்பது ஐதீகம். ஆண்கள் காவித்துண்டு, வேட்டி அணிந்து நீராடி, ஈரம் சொட்டச் சொட்ட நடந்து வந்து பீடத்தின் மீதேறி நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால், சனியால் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் குறைவதுடன் சனியின் ஆசியும் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் பதவி உயர்வு, திருமண பாக்கியம், மக்கட்செல்வம் கிட்டும் என்பர்.
Blogger Gadgets