Friday, February 28, 2014

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இந்த பொருத்தங்களும் இருக்க வேண்டும் :

1) கணவரின் சுக்கிரன் அல்லது சந்திரன் மனைவியின் சூரியனுக்கு 1-5-9-           ஆக அமைவது .

2) கணவரின் சுக்கிரன் அல்லது சந்திரன் மனைவியின் சூரியனுக்கு ஒரே         ராசியாக அமைவது அல்லது ஒரே திரேக்காணமாக அமைவது .

3) கணவரின் சுக்கிரனும் செவ்வாயும் ஒன்றாக அமைந்தாலும் 30                           பாகைக்குள் இருப்பதும் நலமாகும் .

4) கணவரின் சூரியன் அல்லது சுக்கிரன்  மனைவியின் குருவுடன்                         இணைந்து  இருப்பது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தரும் .

5) மனைவியின் 7-ஆம் இடம் கணவரின் குரு அல்லது சுக்கிரன் இருக்கும்         வீடாக அமைவது சிறப்புடையது .

6) கணவரின் சுக்கிரன் மனைவியின் செவ்வாயைப் பார்ப்பதும்,                               மனைவியின் செவ்வாய் கணவரின் சுக்கிரனை பார்ப்பதும் சிறந்த                   அமைப்பாகும் .

7) கணவரின் சந்திரன் அல்லது சுக்கிரன் மனைவியின் ராகு அல்லது சனி       இருக்கும் வீடானால் இருவருக்கும் மன ஒற்றுமை இருக்காது .

8) மனைவியின் 7-ஆம் வீடும் கணவரின் செவ்வாயும் ஒரே வீடானால்               என்றுமே பிரச்சினைதான் .

9) பெண்ணின் ஜாதகத்தில் 2-8-இல் ராகு ,கேது பாவிகள் இருக்ககூடாது.             அப்படி இருந்து 9-ஆம் பாவம் ,அதன் அதிபதி பலம் பெற்றால்                               மகிழச்சியான திருமண வாழ்க்கை அமையும் .

Wednesday, February 26, 2014

யுரேனசும் திருமண வாழ்க்கையும் :

1) யுரேனஸ் 5-ஆம் பாவத்தில் இருப்பது  காதல் திருமணம் நடைபெறும்.
    அது  கலப்பு மணமாகக் கூட அமையலாம் .

2) யுரேனஸ் 7-ஆம் பாவத்தில் இருப்பது தம்பதியருக்குள் பிரிவினையை           ஏற்படுத்தும்.

3) யுரேனஸ் லக்கினத்தில் இருப்பது இளமையில் விதவையாகும்                         யோகமாம்.

4) யுரேனஸ்  மாங்கல்ய ஸ்தானத்தில் 8-ஆம் பாவத்தில்                                             இருப்பது இளமையில் விதவையாகும் யோகமாம்.

5) யுரேனசும் ,சுக்கிரனும் இணைந்து 7-ஆம் பாவத்தில் இருந்தாலும் ,7-ஆம்     இடத்தைப் பார்த்தாலும் திருமணம் நடைபெறாது .


மகிழ்ச்சியான திருமணம் அமைய சில விதிகள் :

1) ஆணின் சுக்கிரன் அல்லது சந்திரன் பெண்ணின் சூரியனுக்கு                               திரிகோணமாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை                           அமையும்.

2) ஆணின் சூரியன் ,பெண்ணின் சந்திரனுக்கு திரிகோணமாக அமைவது         மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.

3) ஆணின் சந்திரன் அல்லது சுக்கிரனும் ,பெண்ணின் சூரியனும் ஒரே                  ராசியாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்..

4) ஆணின் சுக்கிரன் ,பெண்ணின் செவ்வாய்க்கு அருகில் அல்லது                         அதற்குதிரிகோணமாக அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை           அமையும். 

5) ஆணின் சூரியன் அல்லது சந்திரன் பெண்ணின் குருவிற்கு அருகில்               அல்லது திரிகோணமாக அமைவது  மகிழ்ச்சியான திருமண                               வாழ்க்கை அமையும்.

6) பெண்ணின் 7-ஆம் இடம் ஆணின் குருவிற்கு அல்லது சுக்கிரனுக்கு                 அருகில் அல்லது ஒரே ராசியாக அமைவது திரிகோணமாக அமைவது         மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
திருமணம் தாமதமாகும் நிலை :

1) சனிக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் ஏற்படுமானால் புனர்பூ ஜாதகமாகும்.    திருமணம்  28 வயதிற்கு மேல்தான் நடைபெறும் .

2) சனி 7-இல் இருந்து ,7-ஆம் அதிபதியைப் பார்ப்பது ,சுக்கிரன் 6-8-12 இல் இருந்து சுக்கிரனை சனி பார்ப்பது.

3) லக்கினத்தில் 7-ஆம் பாவத்தில் கிரகயுத்தம் ஏற்படுவது .

4) சனி செவ்வாய் 10 பாகைக்குள் இருந்து லக்கினம் அல்லது 7-ஆம் பாவத்தில் இருப்பது 40 வயதில்தான் திருமணம் நடைபெறும்.

5) 7-ஆம் அதிபதி 6-இல் அஸ்தமனம் ,நீசம்,பாவிகளுடன் இருப்பது.

6) சனி பலமற்று 2-இல் தனித்திருந்து சுபர் சம்பந்தமின்றி இருப்பது .

7) சூரியன் ,சந்திரன் இருவரும் சனி சாரத்தில் இருப்பது.

8) லக்கினம் ,7-ஆம் பாவம் .7-ஆம் அதிபதி ,சுக்கிரன் இவர்களில் ஒருவர் சனி ,சுரியனுக்கிடையே இருப்பது 

9) வக்கிரம் பெற்ற கிரஹம் 2-இல் அல்லது 7-ஆம் பாவத்தில் இருப்பது.

10) 5-7-ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது.

இவை போன்றவற்றால் திருமணம் தாமதமாகும் நிலை ஏற்படும்.


வாழ்க்கை துணைவரின் வயது :

                                                                       7ஆம் பாவத்தின் உபநட்சத்திராதிபதி சனியானால் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாகும் .

அவர் குரு,சுக்கிரன் ,சுரியனானால் சிறிது வித்தியாசமாக அமையும் .

அவர் செவ்வாய் ,புதன் ,சந்திரனாகில் சம வயதாக அமையும் .
இளமையில் தலையில் நரை :


                                                                  சூரியனும் ,சனியும் கூடி நின்றாலும் பார்த்தாலும் அவர்களுக்கு இளமையிலேயே நரை உண்டாகும் .
மறுபிறவி அடையாதவர் :

                                                         ஜெனன லக்கினத்திற்கு 5,12ஆம் இடத்தில் கேது இடம்பெற்றாலும் கேது திசையில் மரணம் அடைந்தாலும் மறுபிறவி கிடையாது .

உலக அதிபதி ஆகும் யோகம் :
                                                    
                                                                  9இல் இருக்கும் சந்திரன் ஆனவர் செவ்வாய் புதன், சனி இவர்களால் பார்க்கப்பட்டாலும்  அல்லது 9 ஆம் இடத்தில் இருக்கும் மற்ற கிரஹங்கள் உச்சனாகி சுபக்கிரஹங்களால் பார்க்கப்பட்டாலும் இந்த யோகம் உண்டாகும் .
அதிர்ஷ்டமுள்ள சிறப்பு வாய்ந்த மனைவி :
                                                                                              
                                                                                              7 மற்றும் 9, 2 மற்றும் 7 அதிபதிகள் சம்பந்தம் மற்றும் சுக்கிரன் 9 ஆம் அதிபதி சம்பந்தம் யோகமான மனைவியை தரும். 8,11ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெற்று கேந்திர,கோணம் பெறுவது மற்றும், 7,12 ஆம் அதிபதிகள் சம்பந்தம் மற்றும் 4,9ஆம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று கேந்திரம் பெறுவதும் யோகமான மனைவியை தரும் .சந்திரனுக்கு  10,11இல் யோக கிரகங்கள் இருப்பது பிரபலமான   மனைவியை  உடையவர் .

7ஆம் அதிபதி சந்திரன் ,புதன் ,குரு வீட்டில் இருந்து இவர்களுடன் இணைந்தோ பார்க்கப்பட்டோ இருப்பதும் குரு,சந்திரன் இணைப்பும் அன்பான மனைவி ஏற்படும் .2 ஆம் அதிபதி உச்சம் பெற்று 4 ஆம் அதிபதியால் பார்க்கப்படுவதும் 4-7 ஆம் அதிபதிகள் 11ஆம் வீடு (அ ) அதிபதியொடு சம்பந்தம் பெறுவது மற்றும் 2,7,11ஆம் அதிபதிகள் சம்பந்தம் உயர் குடும்பத்தில் வாழ்க்கை துணை ஏற்படும் .

Tuesday, February 25, 2014


உங்களுக்கு வரப்போகும் மனைவியின் அல்லது கணவனின் நட்சத்திரம்,ராசி ,திசை  என்ன?

  • 7 ஆம் அதிபதியின் நட்சத்திராதிபதி
  • 7 ஆம் பாவத்தின் நட்சத்திராதிபதி
  • 7 ஆம் அதிபதி, 7 ஆம் பாவம் இவைகள பார்க்கும் கிரகங்களின் நட்சத்திராதிபதி.
இதுவே உங்களுக்கு வரப்போகும் மனைவியின் நட்சத்திரமாக அமையும்.


1. ஜாதகரின் இராசி, நவாம்ச இராசி அல்ல அதற்கு 5 - 9 வது இராசி

2. ஜாதகரின் லக்கணம், நவாம்ச லக்கணம் அல்ல அதற்கு 5 - 9 வது இராசி

3. ஜாதகரின் இராசி, லக்கணத்திற்கு 7 வது இராசி அல்ல 7 - வது இராசிக்கு 5 - 9 வது இராசி

4. லக்கணாதிபதியின் பாகையையும், சுக்கிரனின் பாகையையும் கூட்டி வரும் இராசி அல்லது லக்கணாதிபதி, 7 ஆம் அதிபதி இருவரின் பாகையை கூட்டிவரும் இராசியே மனைவி (அ) கணவரின் இராசியாகும்.


7 ஆம் அதிபதி, சுக்கிரன் இருவரின் பாகையைக் கூட்டி வரும் ராசிக்குரிய நவாம்சம் சரமானால் - அதிக தூரத்திலும்,

ஸ்திரமானால் - அருகிலும் (20.கி.மீ)

உபயமானால் - 50 கி.மீக்குள்ளும், அமைவார்கள்.



12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்:




மேஷ ராசி :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்


ரிஷப ராசி :
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம் 
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

மிதுன ராசி :
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்

கடக ராசி :
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர் (தேனி )
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் ,திருபரங்குன்றம்

சிம்ம ராசி : 
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்

கன்னி ராசி :
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை


துலாம் ராசி :
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்


விருச்சிக ராசி  :
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி

தனுசு ராசி :
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

மகர ராசி : 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்

கும்ப ராசி :
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

மீன ராசி :
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர் 





சிரிப்பு யோகாவின் மூலம் கிட்டும் 5 பலன்கள்!!!




'சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல் என்றாலும், அது மிகவும் அர்த்தம் உள்ளதாகும். சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். அது பற்றி இந்த கட்டுரையில் காண்போம். மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா? கவலை வேண்டாம். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும். 



நல்ல மன நிலை தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும், அவையெல்லாம் உங்கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்றன. அந்த வகையில் சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழுதும் வழக்கமாக சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள்.     

மன அழுத்தத்தை நீக்கும் சிறந்த உடற்பயிற்சி ஏரோபிக்ஸ் போல் தான் சிரிப்பு யோகவும். சிரிப்பு யோகா இதயத்திற்கு பயிற்சி அளித்து அதிக அளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனால் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும்.

ஆரோக்கிய பலன்கள் நாம் நோயுற்றால் வாழ்வில் உள்ள நல்ல காரியங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாது. சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்கவும் முன்னேற்றத்தை தரவும் முடிகின்றது.  



வாழ்வாதாரம் சிரிப்பு என்பது இயற்கையாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செயலாகும். இதனை நாம் நல்ல நண்பர்கள் மூலமும் மற்றும் நம் மேல் அக்கறையும் அன்பும் கொண்டவர்களிடமும் மட்டுமே நாம் பெற முடியும். ஆகையால் இத்தகைய மக்களுடன் இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் நாம் சிரித்துப் பழகும் போது நமக்கு நல்ல நண்பர்களும் புதிய உறவுகளும் கிடைக்கின்றனர்.

கடினமான காலத்தில் சாதிக்கும் மனப்பக்குவம் 'துன்பம் வரும் போது சிரி' என்று சில பேர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நல்ல சமயங்களில் யாராயினும் சிரித்து மகிழலாம். ஆனால் மிகுந்த கடினமாக காலங்களில் ஒருவர்; எப்படி சிரிப்பது? ஆனால் அதையும் நாம் மீறி சிரிக்கும் போது நமக்கு அந்த காரியங்களிடமிருந்து மீண்டு வரவும், அத்தகைய கடினமான காரியங்களை செய்யும் துணிவும் கிடைக்கும்.    

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம் என்று தான். ஆனால் இப்படி வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இந்தியாவில் பார்க்க முடியாது. மாறாக மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்தால் தெரிந்திருக்கலாம். ஏனெனில் இந்தியாவில் குழந்தை பெண்ணாக இருந்தால், கருவிலேயே சிலர் கலைத்துவிடுகின்றனர் என்பதால் தான். இருப்பினும் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நம் முன்னோர்களின் வாக்கு மூலம் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பிணிகளே! குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க... மேலும் அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!! இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!! 


வயிற்றில் வளரும் குழந்தை :

குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம்.

சிறுநீரின் நிறம் நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள்.

பிம்பிள் கர்ப்ப காலத்தில் பிம்பிளால் அவஸ்தைப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம்.

சிறிய வயிறு நிறைய பெண்கள் வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த கூற்றின் படி பல பெண்களுக்கு சரியாக நடந்துள்ளது என்றால் பாருங்களேன்.

மார்பகத்தின் அளவு கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருக்குமாம்.

குளிர்ச்சியான பாதம் கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

இதயத்தின் துடிப்பு ஒவ்வொரு முறை மருத்துவரை சந்திக்கும் போதும், குழந்தையின் இதயத்தின் துடிப்பை கண்காணித்து வாருங்கள். ஏனெனில் குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

கூந்தல் வளர்ச்சி வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் ஒன்று தான் கூந்தலின் வளர்ச்சி. கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

ஆசை கர்ப்பமாக இருக்கும் போது உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுவது சாதாரணம் தான். ஆனால் புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமாக இருந்தால், அது வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது என்று அர்த்தம்.

தூங்கும் நிலை கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். இருப்பினும்., அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

கைகள் எவ்வளவு தான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அதுவும் ஆண் குழந்தை தான் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

Monday, February 24, 2014

இந்த பைரவ வழிபாட்டை யாருக்கு திருமணம் தாமதமாகிறதோ அந்த கன்னிப்பெண்/இளைஞர் மட்டுமே செய்ய வேண்டும்;அவர்கள் சார்பாக யார் செய்தாலும் பலன் தராது.

யாருக்கு திருமணத் தடை இருக்கிறதோ அவருக்கு என்ன திசை நடைபெறுகிறது ? என்பதை உரிய ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்;அந்த திசையின் கிழமையில் வாரம் ஒரு கிழமை வீதம் ஏழு கிழமை மட்டும் இந்த பைரவ வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.

சூரிய மஹாதிசை நடைபெற்றால் ஏழு ஞாயிற்றுக்கிழமைகளும்

சந்திரமஹாதிசை நடைபெற்றால் ஏழு திங்கட்கிழமைகளும்

செவ்வாய் மஹாதிசை நடைபெற்றால் ஏழு செவ்வாய்க்கிழமைகளும்

புதன் மஹாதிசை நடைபெற்றால் ஏழு புதன்கிழமைகளும்

வியாழ(குரு)மஹாதிசை நடைபெற்றால் ஏழு வியாழக்கிழமைகளும்

சுக்கிரமஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும்

சனிமஹாதிசை நடைபெற்றால் ஏழு சனிக்கிழமைகளும்

ராகு மஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும்


கேது மஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும் இந்த வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.இந்தக் கிழமையில் வரும் இராகு காலநேரத்தில் இந்த வழிபாடு செய்ய வேண்டும்;இந்த வழிபாடு செய்ய விரும்புவோர் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் கைவிட வேண்டும்;அவ்வாறு கைவிட்டப்பின்னரே இந்த பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;அப்படி செய்தால் மட்டுமே வழிபாடு பலன்களைத் தரும்.முடிந்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவ சன்னதியிலும் இந்த வழிபாடு செய்யலாம்;முதல் வாரத்தில் எந்த பைரவப் பெருமானை வழிபட இருக்கிறோமோ,அதே பைரவப்பெருமானைத் தான் ஏழு வாரங்களுக்கும்(வாரம் என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் கிழமை என்று பொருள்) வழிபட வேண்டும்;கோவிலை மாற்றக் கூடாது.

பழமையான சிவாலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு பின்வரும் பொருட்களை படையலாக இடவேண்டும்;முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை அல்லது செவ்வரளிமாலையை பைரவப் பெருமானுக்கு சந்தனக் காப்பு செய்த பின்னர் அணிவிக்கச் சொல்ல வேண்டும்;இரண்டு நெய்தீபங்களை அவரது சன்னதியில் அல்லது சன்னதி இருக்கும் பகுதியில் ஏற்றி வைக்க வேண்டும்;ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு பாக்கெட் வாங்கி வந்து அவரது பாதத்தில் பாக்கெட்டை திறந்து வைக்க வேண்டும்; 

முடிவாக திருமணத் தடை நீங்க என்று ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தனது பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு ரூ.60/-தட்சிணை தர வேண்டும்;இதேபோல தொடர்ந்து ஆறு கிழமைகள் வழிபாடு செய்ய வேண்டும்;ஏழாவது கிழமையன்று ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு படையலாக அவல் பாயாசம் படைக்க வேண்டும்;(வீட்டில் தயார் செய்ய இயலாதவர்கள் நட்பு/உறவினர் வீட்டில் செய்யலாம்) அர்ச்சனையின் முடிவில் படையல்களில் டயமண்டு கல்கண்டு பாதியை அங்கே வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;ஏழாவது கிழமையில் அவல் பாயாசத்தை அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;

இந்த ஏழு கிழமைகள் வழிபாடு செய்தப் பின்னர்,90 நாட்களுக்குள் தகுந்த வரன் தேடி வரும்;திருமண வாழ்க்கை அமைந்து விடும்
, மாடு. மாடு என்றால் சீமை மாடு அல்ல; நாட்டு மாடு. இந்த நாட்டு மாட்டின், காலையில் நிலத்தில் படாத கோமியத்தை ஆவியாக்கி, அந்த ஆவியிலிருந்து வடியும் நீரை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பெயர் அர்க். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டராக வடிய வேண்டும்.



"இந்த அர்க்கை, 30 மில்லி எடுத்து, 100 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால், புற்றுநோயே வராமல் தடுக்கலாம்' என, கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் ஆவியான பிறகு, பானையில் தங்கும் அடி வண்டலின் பெயர் கண்வெட்டி. இதையும் மருதமரப் பட்டையையும் கலந்து உட்கொண்டால், இதயநோயைத் தவிர்க்கலாம்.

இதுபோல், அர்க் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை, நாட்டு மாடுகளின் கோமியம். நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, நாட்டு மாடுகள்தான் விவŒõயப் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்திருக்கின்றன.



மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் என்று, இந்தியக் கலாசாரம் பற்றிக் குறிப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். ஆனால், நஞ்சில்லாத இயற்கை விவசாயத்துக்கு இன்றைய விஞ்ஞான உலகம் சிபாரிசு செய்வது, மேற்கண்ட கோமியத்தையும், சாணத்தையும்தான்.ரŒõயனப் பொருட்களால் உலகம் அழிந்து கொண்டிருப்பது பற்றி, மேற்குலக விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஒரே மாற்றாக இருப்பது, இந்தியப் பாரம்பரிய இயற்கை விவசாயமும், இயற்கை மருத்துவமும் தான்.



ஒரு விவசாயி, மாடுகளை வைத்தே தன் வாழ்க்கையை சீராக ஓட்ட முடியும். மாட்டிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், நமக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இப்போது, கல் மாவிலிருந்தெல்லாம் விபூதி தயாரிக்கப்படுகிறது. ஆனால், பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுவதே உண்மையான விபூதி என்பது நமக்குத் தெரியும்.

"பஞ்ச கவ்யம்' என்பது, ஒரு அருமையான இயற்கை உரக் கரைசல். பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டது இது. ரசாயன உரங்களால் இன்று, உலகம் முழுவதும் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.



நம் விவசாய நிபுணர்கள், இந்தப் பஞ்ச கவ்யத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், இதற்கு அரசாங்கம் ஆதரவு தந்தால், இதன் மூலம் நமது விவசாயம் மட்டுமல்ல, இதை ஏற்றுமதியும் செய்து, நாம் பொருளாதார ரீதியில் தன்னிறைவைப் பெறலாம்.

ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.

இந்தியப் பாரம்பரிய சிந்தனா முறை பற்றி, பல ஆய்வுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர், எனக்கு முக்கியமாகத் தெரிய வந்தது. அவர் எழுதியுள்ள, "பஞ்ச கவ்யம்' பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடிக்கிறார்:



ஆபிரகாமிய அகங்காரப் பண்பாட்டில் உருவான முதலாளித்துவத்துக்கும், மார்க்சியத்துக்கும் அப்பால், மூன்றாம் பாதை ஒன்று இங்கு இருக்கிறது. கிராமக் கோவில்களில் அம்மன் சிலைகளுக்கு முன்னால், மண்விளக்குகளில் ஆமணக்கு எண்ணெயில் ஏற்றப்படும் தீபமென, அமைதியாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒளி, உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட பண்பாடுகளின் உள்ளொளி. ஐயாயிரம் ஆண்டுகள், அதை நாம் பாதுகாத்து வந்தோம். இனி அதை வளர்த்தெடுத்து உலகுக்கு அளிப்போம்.அதற்கு என்ன செய்யலாம் நாம்?
குற்றாலம் : குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கற்காலம் முதல் தற்காலம் வரை மனிதனின் வாழ்க்கை முறை மாறினாலும் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சில ஐதீகங்கள் மாறாது. அந்த வகையில் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் தனித்தனியாக வழிபட வேண்டிய தெய்வங்கள், மரங்கள், பயன்படுத்த வேண்டிய நிறங்கள் என முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர். நட்சத்திரங்கள் 27. இந்த 27 நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய 27 மரங்களும் தென்றல் தவழும் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில் அருகே வளர்க்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நட்சத்திரங்களுக்கான மரங்கள் இருக்கும் ஒரே இடமாக குற்றாலநாதர் சுவாமி கோயில் திகழ்ந்து வருகிறது.
27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய மரங்களின் விபரம்: அஸ்வினி- எட்டி, பரணி- நெல்லி, ரோகிணி- நாவல், மிருகசீரிஷம்- கருங்காலி, திருவாதிரை- செங்கருங்காலி, புனர்பூசம்- மூங்கில், பூசம்- அரசு, ஆயில்யம்- புன்னை, மகம்- ஆல், பூரம்- பலாசம், உத்திரம்- ஆத்தி, ஹஸ்தம்- அத்தி, சித்திரை- வில்வம், சுவாதி- மருது, விசாகம்- விளா, அனுஷம்- மகிழ், கேட்டை- பிராய், மூலம்- மரா, பூராடம்- வஞ்சி, உத்திராடம்- பலா, திருவோணம்- எருக்கு, அவிட்டம்- வன்னி, சதயம்- கடம்பு, பூரட்டாதி-தேவா, உத்திரட்டாதி- வேம்பு, ரேவதி- இலுப்பை. இந்த 27 நட்சத்திர மரங்களும் கோயில் அறங்காவலர் குழுவினரால் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குற்றாலம் கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் நட்சத்திர மரங்களை இங்கு வரும் பயபக்தியுடன் வணங்கி செல்கின்றனர்.

Sunday, February 23, 2014

ஹோரைகள் :


தினசரி ஹோரைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு நாளின் ஒரு மணி நேர கால அளவு ஆகும். 

ஒரு வாரத்தில், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் நேரம் தொடங்கி ஏழு நாட்கள் உள்ளன. ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதமாக இந்த ஒவ்வொரு நாளையும் (24 மணி நேரம்) ஏழு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. 

ஆளும் கோள்களின் தன்மையைப் பொறுத்து ஹோரைகள் பல்வேறு பணிகளுக்கு பொருத்தமானதாகவோ அல்லது பகையானதாகவோ உள்ளன. இதன் மூலம் ஒரு காரியம் செய்யப் பொருத்தமான நேரத்தைனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். பின்வரும் ஹோரைகள் விளக்கப்படம், ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்தெந்த கோள்கள் ஆளுகின்றன எனக் காட்டுகிறது. 

ஹோரைகளைக் பார்க்கும் போது, உங்கள் இடத்தின் அன்று சூரிய உதயம் நேரம் அறிந்து அதிலிருந்து முதல் 1 மணி நேரத்தினைக் கணக்கிட்டுக் கொள்ளவும். சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம். 

சுப கிரக ஹோரைகள் : சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 

பாப கிரக ஹோரைகள் : சூரியன், செவ்வாய், சனி 
சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை
மணிஞாயிறுதிங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனி
6 - 7சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
7 - 8சுக்கிரன்சனி சூரியன்சந்திரன்செவ்வாய்புதன் குரு
8 - 9புதன் குருசுக்கிரன்சனி சூரியன்சந்திரன்செவ்வாய்
9 - 10சந்திரன்செவ்வாய்புதன் குருசுக்கிரன்சனி சூரியன்
10-11சனி சூரியன்சந்திரன்செவ்வாய்புதன் குருசுக்கிரன்
11- 2குருசுக்கிரன்சனி சூரியன்சந்திரன்செவ்வாய்புதன் 
12 - 1செவ்வாய்புதன் குருசுக்கிரன்சனி சூரியன்சந்திரன்
1 - 2சூரியன்சந்திரன்செவ்வாய்புதன் குருசுக்கிரன்சனி 
2 - 3சுக்கிரன்சனி சூரியன்சந்திரன்செவ்வாய்புதன் குரு
3 - 4புதன் குருசுக்கிரன்சனி சூரியன்சந்திரன்செவ்வாய்
4 - 5௦சந்திரன்செவ்வாய்புதன் குருசுக்கிரன்சனி சூரியன்
5 - 6சனி சூரியன்சந்திரன்செவ்வாய்புதன் குருசுக்கிரன்

சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை
மணிஞாயிறுதிங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனி
6 - 7குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
7 - 8செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
8 - 9சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
9 - 10சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
10-11புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
11-12சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
12 - 1சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
1 - 2குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
2 - 3செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
3 - 4சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
4 - 5௦சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
5 - 6புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்

எண் 9


செவ்வாய் (Mars)


இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள் இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள். இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டு. உடலும் சற்று முறுக்கேறி நிற்கும். நான்கு எண்காரர்களைப் போல் இவர்களுக்குக் கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும் நிறைந்திருக்கும். எனவே இவர்களுக்கு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எத்தொழிலிலும், பதவியிலும், நிர்வாகத்திலும் வல்லவர்கள். இவர்கள் ஓரளவு ஒல்லியானவர்களே! ஆண்களில் பெரும்பாலோர் மீசை வளர்ப்பதில் விருப்பம் உடையவர்கள். நாவன்மை மிகுந்தவர்கள். 

இவர்களில் அதிர்ஷ்டசாலிகள் மென்மேலும் அதிர்ஷ்டசாலிகளாகவும், துரதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த எண்காரர்களுக்கு உடலில் அடிக்கடி காயங்கள், விபத்துக்கள் போன்றவை ஏற்படும். ஆயினும் அதைக் கண்டு பயப்பட மாட்டார்கள். 9-ம் எண்ணில் பிறந்தவர்களின் பெயர்கள் 8&ம் எண்ணில் மட்டும் இருந்து விட்டால் தற்கொலை முயற்சிகளும், வாகனங்களால் விபத்து உண்டு. இந்தச் செவ்வாய்க் கிரக ஆதிக்கர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் லாரி, காளை மாண்டு வண்டிகள், குஸ்தி, நீச்சல் போட்டிகள், மிருகவேட்டை, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் மிகவும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். சர்க்கஸ் விளையாட்டுக்களில் விருப்பமுடன் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். கார், சைக்கிள், லாரி, பஸ் ஆகியவற்றை மிகவும் வேகமாக ஓட்டுபவர்கள் இவர்கள் தான். இவர்கள் எதற்கும், எப்போதும் பயப்பட மாட்டார்கள்! மேலும் தங்களது நோக்கத்திற்காகக் கடுமையான உழைக்கவும் தயங்க மாட்டார்கள். இவர்கள் எப்போதும் அலைபாயும் மனத்தை உடையவர்களாக இருப்பார்கள். இறைவன் இவர்களின் மனத்தை அமைதியாக வைத்திருக்க அனுமதிப்பதில்லை போலும்! இவர்கள் நடப்பதில் மிகவும் பிரியமுடையவர்கள்! இவர்களுக்கு என்னதான் வசதியிருப்பினும் கால் தேய நடந்து செல்வதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும், தனியார் ஸ்தாபனங்களிலும் தலைமைப் பதவியில் இவர்கள் நன்கு புகழ் பெறுவார்கள். இவர்கள் உழைப்பதில் சுகம் காண்பார்கள். சோம்பலை இவர்கள் வெறுப்பவர்கள். ஊர் சுற்றுவதிலும் அலாதிப் பிரியம் உடையவர்கள். 

நடுரோட்டில் ஒரு நோஞ்சானை ரௌடி ஒருவன் தாக்கினால் அதைக் கண்டு பொறுக்காமல், அந்த முரடனுடன் தைரியமாகச் சென்று போராடுபவர்கள் இவர்கள்தான். சிறு வயதுகளில் மிகவும் சிரமப்பட்டாலும், தங்ளது மன உறுதியினாலும், விடா முயற்சியினாலும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறி விடுவார்கள். இவர்கள் சுதந்திரப் போக்கு உடையவர்கள்! அவசரக்காரர்கள்! உணர்ச்சி மயமானவர்கள்! பிடிவாத குணம் இயற்கையிலேயே உண்டு. ஆபத்து மிகுந்த தொழிலில் இறங்கி விடுவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்களின் சண்டைக் குணத்தால், குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்படும். தங்களை எல்லோரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு. எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள் கிடைத்தால்தான், இவர்கள் அவற்றில் மிகவும் தீவிரமாகவும், சிறப்பாகவும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்து முடிப்பார்கள். இல்லை என்றால் அவைகளை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள். பின்பு அந்தக் காரியங்கள் கெட்டழிந்தாலும்கூட அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள். 

அதிர்ஷ்ட நாட்கள் 

ஒவ்வொரு மாதமும் 9, 18, 27 ஆகிய நாட்களும், 6, 15, 24 ஆகிய நாட்களும் மிகவும் சிறப்பானவை! எனவே கூட்டு எண்கள் 6 மற்றும் 9 வரும் நாட்களும் இவர்களுக்கு மிகவும் சாதனமானவையே.

1, 10, 19, 28 மற்றும் எண் 1 வரும் நாட்களும் நடுத்தரமான பலன்களையே கொடுக்கும்.

ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 நாட்களும் கூட்டு எண் 2 வரும் நாட்களும் துருதிர்ஷ்டமானவை! எந்தச் செயலும் தொடங்கக் கூடாது. 

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம் 

இவர்களுக்குப் பவழம் (CORAL) மிகவும் ஏற்றது! இரத்தக் கல் (BLOOD STONE) மிகவும் ஏற்றது! மேலும GARNET எனப்படும் இரத்தினக் கல்லும் மிகவும் நன்மை தரும். 

அதிர்ஷ்ட நிறங்கள் 

இவர்களுக்கு கருஞ்சிவப்பு, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் மிகவும் ஏற்றவை! ஆனால் கரும்பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் துரதிர்ணடமானவை. 

நண்பர்கள் 

3, 6, 9 ஆகிய எண்களை உடைய அன்பர்கள் இவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் அமைவார்கள். 1ந்தேதி பிறந்தவர்களின் உதவி நடுத்தரமானதுதான். 2, 8 எண்காரர்களின் நட்பையும், கூட்டையும் (றிணீக்ஷீtஸீமீக்ஷீsலீவீஜீ) தவிர்த்துவிட்டால், பல நஷ்டங்களை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளலாம். 

திருமணம் 

இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை (பிறவி எண், கூட்டு எண்) மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு! ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.

2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது! திருமண வாழ்க்கையே கசந்துவிடும். சில அன்பர்கள் மனைவியின் கொடுமையால் மனைவியை விட்டு ஓடத் துணிந்து விடுவார்கள். திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும். 

நோய்களின் விபரங்கள் 

இவர்களது உடலில் ஏதாவது ஒரு நீண்டகாலப் பிணி இருக்கும். அடிக்கடி வாய்வுத் தொந்தரவுகள், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இவர்களுக்குப் பல் வலி, பற்களில் பூச்சி விழுதல் போன்றவை ஏற்படும். கால் ஆணித் தொந்தரவுகள், பாதங்களில் வலி, வெடிப்புக்கள் ஆகியவை ஏற்படும். மிகவும் உஷ்ண தேகிகளாதலால், இவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கலும், மூல உபத்திரவங்களும், வலியும், கண்களில் எரிச்சலும் ஏற்படும். பகலைவிட இரவில் உற்சாகமாக இருப்பார்கள். நீண்ட நேரம் இரவில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டோ, பேசிக் கொண்டோ இருப்பார்கள். இவர்கள் தினமும் நீராகாரம் பருகி வந்தால் மிகவும் நல்லது! உடல் சூட்டைத் தணிக்க நீராகாரம் சிறந்த பானமாகும். 

நெருப்புக் காயங்கள், விபத்துக்கள் ஆகியவைகளால் உடலில் பாதிப்பும் உண்டு. இரத்தக் கட்டிகள், குடற்புண்கள், இரத்தம் கெடுதல் ஆகியவைகளால் பாதிப்பும் உண்டு! கூர்மையான ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொள்ளக்கூடாது! இந்த எண்காரர்களின் உடம்பில் எப்படியும் ஆபரேஷன்கள் (ஏதாவது ஒரு காரணத்திற்காவது) செய்ய வேண்டி வரும். 

சிறப்புப் பலன்கள் 

செயல் வீரர்களான 9ம் எண்காரர்களின் சிறப்புப் பலன்களைப் பார்ப்போம். 

எண்களில் முடிவானது இந்த எண்தான். எந்த எண்ணுடன் சேர்ந்தாலும், தன் இயல்புக் குணத்தை இழக்காதது இந்த எண்தான். 3 எண்ணுடன் 9 சேர்ந்தால் 12 கிடைக்கும். மீண்டும் கூட்டினால் (1+2) 3 என்ற எண்ணே மீண்டும் கிடைக்கும். 

எனவே 9 எண்காரர்கள் மற்ற எண்காரர்களுடன் சேர்ந்து செயல்பட்டுத் தங்களின் இயல்பிறக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றிவிடும் திறமை படைத்தவர்கள்! இவர்கள் தீவிரமான மனப்போக்கும், தைரியமான செயல்பாடும் கொண்டவர்கள். எந்த முயற்சியையும் திட்டமிட்டு, அதன்படியே செயல்படுவார்கள். எத்துணைச் சோதனைகள் வந்தாலும், அவைகளைத் துணிவுடன் சந்தித்து வெற்றி பெறுவார்கள்! மற்றவர்கள் இவர்களை அலட்சியம் செய்தால் உடனே தட்டிக் கேட்பார்கள். மனதில் எப்போதும் தைரியம், தன்னம்பிக்கை உண்டு. தவறுகளைக் கண்டால் உடனே தட்டிக் கேட்கவும் தயங்கமாட்டார்கள். 

எதையும் திட்டமிட்டு, நேரம், காலம் பார்த்துத் தங்களது காரியங்க¬ளை நடத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டும். இவர்களது பேச்சில் எப்போதும் வேகமும், அதிகாரமும் உண்டு! பயம் என்பது இருக்காது! செவ்வாய்க் கிரகம், தேவர்களுக்குத் தளபதியாவார். எனவே இவர்களுக்கச் சண்டையிடும் மனோபாவம் இயற்கையிலேயே அமைந்துவிடும். இரத்தம், விபத்து, கொலை போன்ற சம்பவங்களிலும் எல்லாம் துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வார்கள். வேகம், சக்தி, அழிவு, போர் என்பவற்றின் எண் இது! ஆற்றல், ஆசை, தலைமை தாங்குதல் ஆதிக்கம் செலுத்தல் போன்ற குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சிந்திக்க மாட்டார்கள். விரைவிலேயே ஒரு முடிவு எடுத்து அதை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவார்கள். பலருக்கு உடலில் காயங்களும், சிறு விபத்துக்களும் ஏற்படும். பெரும்பாலோர் போர் வீரர்கள், காவல் துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற கடினமான துறைகளிலும் புகழ்பெற்று விளங்குவார்கள். 

இவர்கள் நிதானம் குறைந்தவர்கள்! உணர்ச்சி வசப்பட்டவர்கள், பிறருக்கு அடங்கி நடக்க முடியாதவர்கள். பகைவர்களை இவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். பல சமயங்களில் இவர்களது பேச்சே இவர்களுக்குப் பல சண்டைகளைக் கொண்டு வந்துவிடும். பங்காளிச் சண்டை, மனைவி குடும்பத்தாருடன் சண்டை என்று அடிக்கடி பிரச்சினைக்குள்ளாவார்கள்! பிறர் தங்களைக் குறை கூறவதை மட்டும் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது! சந்தர்ப்பங்களைச் சமாளிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக ஆற்றலும் உண்டு! அதிகாரத்துடன் மற்ற அனைவரையும் வேலை வாங்குவார்கள். இல்லையெனில் மனம் உடைந்து போவார்கள். இவர்கள் பல ஊர்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவார்கள். பலர் வெளிநாடுகளுக்கும் சென்று வருவார்கள். இவர்கள் ஆன்மீகத் தலைவர்களைக் கண்டவுடன் பணிந்து மிகவும் மதிப்பு கொடுப்பார்கள். பலருக்கு முன்னோர்கள் தேடி வைத்த செல்வங்கள் இருக்கும். இவர்களுக்கு மனைவியின் வழி சொத்துக்கள் கிடைக்கும் யோகமும் உண்டு. எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் மனோ தைரியமும் உண்டு. இவர்கள் கூர்மையான அறிவுடையவர்கள். எதிரிகளைச் சமயம் அறிந்து அவர்களை அழித்துவிடும் இயல்பினர். தீவிரமான ஆராய்ச்சிகளில் பலர் ஈடுபடுவார்கள். இவ்வளவு இருப்பினும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுப்பார்கள். தெய்வம் உண்டு என்பதை முழுமையாக நம்புவார்கள். தங்களது தொழிலில் மிகவும் உற்சாக உள்ளவர்கள்! தங்களது தொழிலை பெருகச் செய்வது எப்படி என்பதைப் பற்றிய எண்ணத்திலேயே இருப்பார்கள். பலருக்கு அரசாங்கப் பணியிலும், காவல் துறையிலும், இராணுவத்திலும் மிகவும் ஈடுபாடு உண்டு. 

தொழில்கள் 

இவர்களில் பெரும்பாலோர் எஞ்சினியர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பார்கள். இராணுவம், போலீஸ், மேனேஜர் போன்ற அதிகாரப் பதவிகளின் விருப்பம் உடையவர்கள். மேலும் கட்டிடம் கட்டுதல், இயந்திரங்கள், வியாபாரம், இரும்புச் சாமான்கள் உற்பத்தி ஆகியவை நல்ல அதிர்ஷ்டம் தரும். சிறந்த அமைச்சர்களாகவும், இராஜ தந்திரிகளாகவும் இருப்பார்கள். வான இயல் துறையும், இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

நாட்டிற்காகத் துப்பாக்கி ஏந்து வீரர்கள் இவர்களதான். அநீதிகளை எதிர்த்துப் போராடுவார்கள். இவர்கள் அரசியலிலும் ஈடுபடலாம். பலரை வைத்து வேலை வாங்கும் தலைவர்களாக, உயர் அதிகாரியாக, மேஸ்திரியாகப் புகழ் பெறுவார்கள். இவர்கள் வீரம் மிகுந்தவர்கள், துப்பறியும் தொழில் ஒத்து வரும். கலைத் தொண்டிலும், உணர்ச்சியைத் தூண்டும் எழுத்திலும் பிரகாசிப்பார்கள்! பொது மக்களுக்காகத் தியாகம் (உண்மையாகச்) செய்ய வல்லவர்கள். பிரபல வேட்டைக்£கரர்களாகவும், வனவிலங்குகளைத் திறமையாக அடக்கும் தொழிலும் நன்கு பிரகாசிப்பார்கள். கால் பந்தாட்டம், டென்னிஸ், ஹாக்கி, பேட்மிண்டன், வாலிபால், சைக்கிள் பந்தயம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்வார்கள்! சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் புகழ் பெறுவார்கள். இரயில், கார், லாரி ஆகியவை ஓட்டுநர்கள், தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றிலும் இவர்கள் தொழில் அமையும். இவர்கள் நிர்வாகச் சக்தி மிகுந்தவர்க! ஆயுதம் தாங்கிச் செய்யும் அனைத்துத் தொழிலும் வெற்றி பெறுவார்கள். இராணுவம், காவல் துறை, அறுவை மருத்துவர்கள் போன்றவைகளில் பிரகாசிப்பார்கள். கார், ரயில், விமானம், ஓட்டுவதில் நாட்டம் உள்ளவர்கள். வேகமாகச் செல்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். பொறுமை இவர்களுக்குப் பிடிக்காத விஷயம். எலக்ட்ரிகல் என்ஜினியரிங் துறை, விவசாயத்துறையும் ஒத்து வரும். தீயுடனும், வெப்பத்துடனும் சேர்ந்த எந்தத் திட்டங்களிலும் வெற்றி பெறுவார்கள். எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் பிரகாசிப்பார்கள். சிலர் கோபக்காரர்களாக மாறி தீய செயல்களைச் செய்யவும் தயங்கவும் மாட்டார்கள்.

பொறியியல் தொடர்பான பெரிய பொறுப்புகளை தைரியமாக ஏற்று வெற்றி பெறுவார்கள். இரும்பு, எஃகு தொழில்களில் ஈடுபட்டால் சீக்கிரம் முன்னேறலாம். அச்சகத் தொழிலும் நன்கு அமையும். கட்டிடத் துறை, மின்சாரத் துறை, விளையாட்டுத் துறை, வாழை, மொச்சை, சிவப்பு தானியம் போன்றவை உற்பத்தி, உரம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தச்சு வேலை போன்ற தொழில்கள் அனைத்தும் வெற்றி தரும். விளையாட்டு வீரர்கள். மலையேறும் வல்லுநர்கள் போன்றவையும் வெற்றி தரும். ஆன்மிகத்திலும் சிலர் தீவிரமாக, முழுமையான மனதுடன் ஈடுபடுவார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களையும் தொடங்கி, நன்கு நிர்வகிப்பார்கள்.

குறிப்பு 

இதுவரையிலும் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களுக்கான தொழில்களைப் பார்த்தோம். உங்களது பிறவி எண்ணுக்கோ, விதி எண்ணுக்கோ, பொருத்தமான தொழிலாக இருக்க வேண்டியது முக்கியம். பெயர் எண்ணிக்கான தொழிலிலும் ஓரளவு வெற்றி பெறலாம்.

எனது அனுபவத்தில் எண்கணிதப்படியான தொழில்களே இறுதியில் மனிதனுக்கு அமைகின்றன. நீங்கள் கோடீஸ்வரராவது என்பது சரியான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில்தான் உள்ளது என்பதால் மிகந்த கவனம் தேவை! எனவே ஒன்றுக்கு பல தடவை சிந்தித்து உங்களது தொழிலையோ, வியாபாரத்தையோ தொடங்குகள்! முடிந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலிலும் ஈடுபடுங்கள்! தொழிலில் உங்களை நம்பி முழுமையாக ஈடுபட்டால், அதில் வெற்றி பெறலாம். கோடிகளைக் குவிக்கலாம். 

18-ம் தேதி பிறந்தவர்கள் 

போராட்டமே இவர்களது வாழ்க்கையாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் எச்சாக்கையைப் பொருட்படுத்தமாட்டார்கள். எதையும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவே முற்படுவார்கள். பேச்சுத் திறமை அதிகம் உண்டு. கட்டைப் பஞ்சாய்த்து செய்து வைக்கும் குணத்தவர்கள். அவசரம், பிடிவாதம், சுயநலம் ஆகியவற்றை விட்டுவிட்டால், இவர்கள் பெரும் சாதனைகளைப் படைக்கலாம். காதலிலும் அதிகாரம் காட்டி, அதன் மூலம் பிரச்சினைகளை உண்டு பண்ணிக் கொள்வார்கள். எப்போதும் உணர்சி வசப்பட்டவர்கள், மன அமைதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

செவ்வாயின் யந்திரம் (சக்கரம்) 

8310
975
4116


செவ்வாயின் மந்திரம் 

தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வத்யுத்காந்தி ஸமப்ரம்
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யஹம்
Blogger Gadgets