Sunday, July 6, 2014

களத்திர தோசம் சில‌ விதிகள் ஜோதிடக்குறிப்பு

      களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே. அதற்கான சில விதிகள் இதோ...............

1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.

2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.

3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.

5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.

6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.

7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.

8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்

நல்ல காலம் எப்போது? ஜோதிட குறிப்பு 


      ஒருவருடைய ஜாதகத்தில் இருந்து அவருக்கு எப்போது நல்ல காலம் பிறக்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து சொல்ல முடியும்.
      ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் அவருக்கு 22 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் சந்திர‌ன் வலுவாக இருந்தால் அவருக்கு 24 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் அவருக்கு 28 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் புதன் பலமுடன் இருந்தால் அவருக்கு 32 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      குரு பலமாக‌ இருந்தால் அவருக்கு 16 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சுக்கிரன் பலமாக‌ இருந்தால் அவருக்கு 25 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சனி பலமாக‌ இருந்தால் அவருக்கு 35 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் ராகு பலமுடன் இருந்தால் அவருக்கு 42 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் கேது பலமுடன் இருந்தால் அவருக்கு 48 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      இவ்வாறு பலன் சொல்லும் போது கூடுதலாக கவனிக்க வேண்டியவை எதுவெனில்...........
      ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ பலமாக அமைந்தால், அந்த ஜதகத்தின் லக்கினாதிபதி, சந்திரலக்கினாதிபதி ஆகியோர்களின் நிலை அதாவது அவர்கள் பகை நீசம் பெற்று கெடாமல் இருந்தாலே போதும், ஜதகருக்கு நல்ல காலம் முன்னரே ஆரம்பித்து விடுவதை பார்க்க முடிகிறது.
      உதாரணத்திற்க்கு மேஷ லக்கினத்தில் பிறந்த ஜாதகர் ஒருவருக்கு கேது பலமாக அமைந்து, ஜதகத்தில் செவ்வாய் கெடாமல் இருந்து, பாதாகாதிபதி குரு 11ல் அமர்ந்ததால், அவர் குருவிற்குறிய 16 வயதில் +2 முடித்தவுடன், சின்ன சின்ன வேலையில் அமர்ந்து முன்னேறி, பின்பு செவ்வாய்க்குறிய 28 வயதில்  சொந்தமாக வீடு கட்டி, கார் வாங்கி நல்ல நிலையில் செட்டிலாகி விட்டார்.
      ராகு கேது பலமுடன் உள்ள ஜாதகர், லக்கினாதிபதி, சந்திர லக்கினாதிபதி, யோகாதிபதி, இந்த மூவரில் எவர் வலுவாக உள்ளனரோ அல்லது மூவரில் இருவரோ அல்லது மூவரும் வலுவாக உள்ளனர் என்றாலோ, எந்த கிரகத்திற்க்கு குறைந்த வயது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த வயதில் அவருக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிடும்.

மஹாசக்தியோகம் ஜோதிடக்குறிப்பு

      ஜாதகரை சாதனையாளராக்கி பெருமளவில் பெருளீட்டி பெயரும் புகழும் சம்பதித்துக் கொடுப்பது சக்தி யோகங்கள் ஆகும். அதில் இப்போது மஹாசக்தியோகம் பற்றி பார்ப்போம்
சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை
      சந்திரனும் ராகுவும் சுபத்துவ சம்பந்தம் பெறுவது மஹாசக்தி யோகமாகும்.
      சந்திரனுக்கு 12ல் ராகு நிற்ப்பது இந்த யோகத்தினை ஏற்படுத்தும். அதிலும் இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது இந்த யோகம் பிரமாதமாக இருக்கும்.
1. த‌னுசுவில் சந்திரன், விருச்சிக ராகு
2. ரிஷபத்தில் சந்திரன், மேஷ ராகு
3. கடகத்தில் சந்திரன், மிதுன‌ ராகு
      இத்துடன் ஜாதகத்தில் குரு மங்கள யோகமும் இருந்தால் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரராவார்.
     இந்த யோகம் அமையப் பெற்ற ஜாதகர்
1. வெளிநாட்டு வணிகம் மூலம் பொருளீட்டுதல்
2. வெளிநாடுகளில் பெரிய பதவி, அல்லது வெளிநாடுகளில் தொழில் மூலம் பொருளீட்டுதல்
3. முத‌ல் தர வழக்குறைஞர்.
4. பிரபல பேச்சுத் திறமை மிக்க அரசியல் வாதி.
5. அரசியல், நிதி அலோசகர்.
6. கடல் வழி வாணீபம்.
7. அரசாங்கத்தில் பெரு செல்வாக்கு பெற்று, அரசாங்கத்தால் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சலுகைகள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் பெறுவர்


சுகபா யோகம் , காம்பயோகம்,  மதன யோகம்  ஜோதிடக்குறிப்பு



  ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்து இருக்க, 11ம் இடத்தில் 2ம் இடத்ததிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்து, மேலும் இந்த சேர்க்கைக்கு சுபர் சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால், அதற்கு "சுகபா யோகம்" ஆகும். இந்த யோகம் பெற்ற ஜாதகர், பிறந்ததிலிருந்து எந்த துன்பமும் இல்லாமல்,கோடீஸ்வரர்களின் வீட்டில் பிறந்து சகல செளக்கியங்களையும் அனுபவிப்பார்கள். கவலையில்லாதவர்களாக‌, புகழுடையவர்களாக இருப்பர்.

 ஒரு ஜாதகத்தில் 2ம் இடத்தில் குரு இருக்க, 4ம் இடத்தில் சுக்கிரன் இருக்க, 7ம் இடத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்ந்து இருக்க, லக்கினாதிபதி வலுப்பெற்றிருந்தால் அதற்கு "காம்பயோகம்" என்று பெயர். இந்த யோகம் இருக்கப்பெற்றவர்கள், வாகன வசதி, மாளிகை போல வீடு, அழகான அன்பான மனைவி, நல்ல குழந்தைகள், வாக்கு வன்மை போன்ற பலன்கள் உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் லக்கினம் விருச்சிகமாக அமைந்து அதில் குரு மற்றும் சுக்கிரன் அமர, 11ம் இடத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்திருந்தால் அது மதன யோகம் எனப்படும். இந்த யோகத்தை உடைய ஆண்கள் பெண்கள் விரும்பும்படியாக பேசுவர், பெண்களால் விரும்பப்படுவர்!

விரயாதிபன் த‌ரும் ராஜயோகம்



விரயாதிபன் எனில் 12க்குடையவன்விரயாதிபன்விரயஸ்தானம் என்றாலே நம்மில் பலர் முகத்தை சுளிக்கிறோம். ஆனால் முன்னோர் விரயஸ்தானத்தை சுகசயன ஸ்தானம்மோட்ச ஸ்தானம் என்று கூறிச் சென்றுள்ளனர்.
விரயாதிபன் என்று சொல்லக்கூடிய 12க்குடையவன் உச்சம் பெற்றுநிற்கஅவனை பாக்கியாதிபன் என்று சொல்ல்க்கூடிய 9க்குடையவன் பார்த்தால் ஜாதகர் அநேகசுகங்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்லாம்.
மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி குரு சுக கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார். பாக்கியதிபதியும் ஆகிறார்அவர் கடகத்தில் உச்சம் பெறுதலே வாழ்வில் எல்லாசுகங்களையும் தரும்.
ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் ஆகி அவர் 9ம் இடமான பாதகஸ்தானத்தில் உச்சமடைவார்அவரை 9ம் அதிபதி சனி பார்ப்பதை விட குரு அல்லது லக்கினாதிபதி பார்ப்பது கூடுதல் நல்லதுசனியும் பாக்கியயோகபாதகதிபதி என்பதால் யோகம் சுமாராக அமையும்.
மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன் அவர் 10ம் இடமான கேந்திரத்தில் உச்சம் பெறுகிறார்அவரை 9க்குடைய சனி பார்ப்பது யோகம் தரும் என்றே கருத வேண்டியுள்ளது.
கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன் அவர் 3ல் உச்சம் பெற அவரை பாக்கியதிபதி குரு பார்ப்பது யோகம் தான்.
சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சந்திரன் அவர் 10ல் உச்சம் பெற அவரை பக்கிய பாதகதிபதி செவ்வாய் பார்த்தால் சந்திரமங்கள யோகம் எற்ப்படுகிறதுபிரபல யோகமே.
கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சூரியன் அவர் 8ல்உச்சம் பெற அவரை பாக்கியதிபதி சுக்கிரன் பார்ப்பது யோகம் தான்.
துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி புதன்அவர் விரயத்திலேயே உச்சம் பெற 9க்குடையவரும் அவரே என்பதால் யோகபலன்க‌ளைத் த‌ருவார்லக்கினாதிபதி குருவின் பார்வைஅவருக்கு கிடைகுமானால் யோகம் சிறப்பாக இருக்கும்.


விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சுக்கிரன்அவர்5ம் இடமான மீனத்தில் உச்சம் பெறுவார்அவரை பாக்கியதிபதி சந்திரன் பார்த்தாலே யோகம் பிரமாதமாக இருக்கும்.
தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி செவ்வாய் அவர்2ல் உச்சம்அவரை பக்கியதிபதி சூரியன் நண்பர் பார்த்தாலே யோகம் நன்றாக இருக்கும்.
கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி லக்கினாதிபதிசனியே ஆகிறார்அவர் 9ல் துலாத்தில் உச்சம்அவரை பாக்கியாதிபதி சுக்கிரன் பார்க்கும் போது தன் வீட்டையே பார்க்கும் அமைப்பு ஏற்படுகிறதுபாதக யோகதிபதி சுக்கிரனால் நல்ல பலன்களே நடக்கும் என்பதில் ஐயமில்லை.
மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு விரயதிபதி சனிஅவர் 8ல் துலாத்தில் உச்சம்அவரை பாக்கியதிபதி செவ்வாய் பார்த்தாலும் பார்க்கவிட்டாலும் யோக பலன் கிடைக்கும்.
எனவே விரயாதிபன் உச்சம் பெற்றுபாக்கியதிபதி பார்வையை பெறுவது யோகமேவிரையாதிபன் மறைவு ஸ்தனங்களில் இருப்பதை விடஉச்சம் பெற்று சுபர் பார்வை பெறும் போது நல்ல பலன்கள்கூடுதலாக நடக்க வாய்ப்பு அதிகம்

சனீஸ்வரர் மந்திரங்கள்!


கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைக் கூறுவதன் மூலம் சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனீஸ்வர காயத்ரி
ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
ஸ்லோகம்
நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
பொருள் : மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.
சனி ஸ்தோத்திரம்
ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.
சனி வழிபாடு
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
சனீஸ்வர ஸ்தோத்ரம்
ஸன்னோதேவீசரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
ஸம்யோ ரபிஸ்ர வந்துந:
அதிதேவதா மந்த்ரம்:
இமம்யமப்ரஸ்தரமாஹி ஸீதாங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான:
ஆத்வா மந்த்ரா கவிஸஸ்தா வஹன்த்வே நா ராஜன்ஹ விஷாமாதயஸ்வ:
ப்ரத்யதி தேவதா மந்த்ரம்:
ப்ரஜாபதே நத்வதேதான்யன்யோ விஸ்வா ஜாதானி பரிதாபபூவ
யத்காமாஸ்தே ஜுஹுமஸ் தன்னோ அஸ்து வயங்ஸ்யாம-பதயோ ரயீணாம்
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே சனைஸ்ச்சராய நம:
சந்தோஷம் தரும் சனைச்சர ஸ்தோத்ரம்
கோணேந்தகோ ரௌத்ரயமோத பப்ரு:
க்ருஷ்ண: ஸநி: பிங்களமந்தஸெளரி:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய
பொருள்: கோணன்-முடிவைச் செய்பவன்; ரௌத்ரன், இந்திரியங்களை -அடக்குபவன். மேலும் பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரிய புத்திரன் ஆகிய பெயர்களைக் கொண்ட சனைச்சரன் தினமும் நம்மால் தியானிக்கப்படுபவனாகி, சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய சூரிய புத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம்.
தசரதர் கண்டு சொன்ன சனைச்சர ஸ்தோத்ரத்தின் ஒரு ஸ்லோகம் இது. தினமும் பயபக்தியுடன் இந்த ஸ்லோகத்தைப் படித்து, சனி பகவானை தியானித்து வழிபட, நற்பலன்கள் கைகூடும்.
சனி கோசார ரீதியால் பன்னிரண்டு, எட்டு முதலிய ஸ்தானங்களில் இருப்பதாலும், ஜாதகத்தில் தோஷத்துடன் கூடியிருப்பதாலும், சனி தசாபுக்திகளிலும் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதுடன், சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.

சனீஸ்வர தியான ஸ்லோகம் (வேறு வகை)
1. நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
2. சதுர்புஜம் சனிம் தேவம் சாப தூணீக்ரு பாணகை
சஹிதம் வரதம் பீமதம்ஷ்ட்ரம் நீலோத் பலாக்ருதிம்
3. நீல மால்யானுலேபம் ச நீலரத்னைரலங் கிருதம்
ஜ்வாலோர்தவ முகுடாபாசம் நீலக்ருத்ர ரதாந்விதம்
4. மேரும் ப்ரதக்ஷிணம் யாந்தம் சர்வ லோக பயாவம்கம்
க்ருஷ்ணாம்பரதரம் தேவம் த்விபுஜம் க்ருத்ர சம்ஸ்திதம்
சர்வ பீடாஹரம் ந்ரூணாம் த்யாயேத் க்ரஹ கணோத்தமம்
5. சாபாசனோ க்ருத்ர ரதோதி நீல: ப்ரத்யங்முக: காச்யப கோத்ர ஜாத:
ஸசூலசா பேஷுகதாத ரோவ்யாத் சௌராஷ்ட்ர தேச ப்ரபவச்ச ஸெளரி
6. ஸனைச்சராய ஸாந்தாய சர்வாபீஷ்ட பிரதாயினே
நம: சர்வாத்மனே துப்யம் நமோ நீலாம்பராயச
7. த்வாதசாஷ்ட மஜன் மர்ஷே த்வீதிய ஸ்தான் ஏவச
த்வத் சஞ்சா ரோத்பவா தோஷா: ஸர்வே நச்யந்துமே ப்ரபோ
முனிவர்கள் தேவர் ஏனைய மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வு உன் மகிமை அல்லால் வேறுண்டோ?
கனிவுள தெய்வம் நீயே: கதிர் சேயே! காகம் ஏறும்
சனியனே! உனைத் துதித்தேன்; தமியனேற்கு அருள் செய்வாயே!

சனிபகவான் ஸ்தோத்திரம்
காப்பு - வெண்பா
தேவரெண்டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்
மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்
தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்
காரணிந்த யானைமுகன்-காப்பு
1. ஆதிவே தாந்த முதலறிய ஞான
மைந்தெழுத்தினுட் பொருளையயன் மாலோடு
சோதி சிற்றம்பலத்தி லாடிகின்ற
சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே
பாதிமதி சடைக்கணிய வரவம்பூணப்
பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்
சாதியில்லா வேடனெச் சிற்றின்ன வைத்த
சனியனே காகமேறுந் தம்பிரானே
2. வேலவனை வேங்கை மரமாக்கி வைத்தாய்
விறகுகட்டிச் சொக்கர் தமை விற்க வைத்தாய்
மாலினியை யுரலொடு கட்டுவித்தாய்
வள்ளிதனைக்குறவரது வனத்தில் வைத்தாய்
காலனை மார்க்கண்டனுக்காவரனுதைத்த
காரணமும் நீபிடித்த கருமத்தாலே
சாலவுனையான் றொழுதே னெனைத்தொடதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
3. மஞ்சுத வழயோத்தியில் வாழ்தசரதன் தன்
மக்களையும் வனவாசமாக்கி வைத்தாய்
பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
பஞ்சுபடும் பாடவர் படச்செய்வித்தாய்
எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டைவிற்றே
யிழிகுலத்திலடி மையுற விசையவைத்தாய்
தஞ்சமெனவுனைப் பணிந்தேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
4. அண்டமாயிரத்தெட்டு மரசுசெய்த
வடல்சூரபத்மனையு மடக்கிவைத்தாய்
மண்டலத்தையாண்ட நளச்சக்கரவர்த்தி
மனைவியோடு வனமதனி லலையச்செய்தாய்
விண்டலத்தை பானுகோபன்றன்னாலே
வெந்தணலாய்ச் சூரரை வெருவச்செய்தாய்
தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
5. அண்டர்கோன்மேனியிற் கண்ணாக்கி வைத்தாய்
அயன்சிரத்தை வயிரவனாலறுக்க வைத்தாய்
திண்டிறல்கொள் கௌதமனால கலிகைதான்
சிலையாகவேசாப முறவேசெய்தாய்
கண்டரள நகையிரதி மாரன் றன்றைச்
சங்கரனார் நுதல்விழியிற் றணல்செய்வித்தாய்
சண்டமிலா துனைத் தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
6. பாருலவுபரிதியைப் பல்லுதிரவைத்தாய்
பஞ்சவருக்குத்தூது பீதாம்பரனை வைத்தாய்
தாருலவுவாலி சுக்ரீவன் தம்மைத்
தாரையினாற்றீராத சமர்செய்வித்தாய்
சூரனெ னுமிலங்கை ராவணன்றங்கை
சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்
தாரணியு மணிமார்பா வெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
7. சுக்ரன்றன் கண்ணிழந்தான் இலங்கையாண்டு
துலங்குமி ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்
மிக்கபுகழிரணியன்றன் வீறழிந்தான்
விளங்குதிரிபுராதிகளும் வெந்துமாண்டார்
சக்கரத்தாலுடலறுத்தான் சலந்திரன்றான்
தாருகாசுரனுமே சமரில் மாண்டான்
தக்கன் மிகச் சிரமிழந்தா னின்றோஷத்தாற்
சனியனே காகமேறுந் தம்பிரானே
8. அந்தமுள ஐங்கரன் கொம்பரவே செய்தாய்
அறுமுனிவர் மனைவிகள் கற்பழியச் செய்தாய்
சந்திரன் தன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
சங்கரனைப் பிச்சை தானெடுக்கச் செய்தாய்
தந்திமுகச் சூரனுயிர் தளரச்செய்தாய்
சாரங்கதரன் கரத்தைத் தறிக்கச் செய்தாய்
சந்ததமுமுனைப் பணிவேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
9. சீதைதனையிரா வணனாற் சிறைசெய்வித்தாய்
தேவர்களைச்சூரனாற் சிறைசெய்வித்தாய்
மாதுதுரோபதை துயிலை வாங்குவித்தாய்
மகேச்சுரனையுமைபிரியும் வகைசெய்வித்தாய்
போதிலயன் றாளிற்றளை பூட்டுவித்தாய்
பொதிகையினிலகத்தியனைப் பொருந்தச் செய்தாய்
தாதுசேர்மலர்மார்பா வெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
10. அப்பர் தமைக்கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய்
அரனடியில் முயல்களை யடங்கச்செய்தாய்
செப்புமாணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்
ஸ்ரீராமனைமச்சவுரு வெடுக்கச் செய்தாய்
ஓப்பிலனுமான் வாலிலொளி தீயிட்டாய்
ஒலிகடலினஞ்சையர னுண்ணவைத்தாய்
தப்பிலா துனைத்தொழுதேனெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே
11. நீரினையுண்டேழுமேக வண்ணா போற்றி
நெடுந்தபத்திலறு கமலக்கண்ணா போற்றி
சூரியன் தவத்தில் வந்த பாலா போற்றி
துலங்கு நவக்கிரகத்துண் மேலா போற்றி
காரியன் பெயர்களுப காரா போற்றி
காசினியிற் கீர்த்திபெற்ற தீரா போற்றி
மூரிகொளு நோய்மகவாமுடவா போற்றி
மூதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி

சனீஸ்வர கவசம்
நெருங்கிடு பிணி யெலாம்
நீக்கு நோன்மையும்
ஒருங்கு மொய்ம்பு இரண்டும்
ஆங்குறும் கருந்துகில்
மருங்குலும் கழுகிவர்
வனப்பும் கொண்டு அமர்
அருங்கதிர் மதலை தாள்
அன்போடு ஏத்துவாம்!
(வேறு)
மறுவறும் எனது சென்னி
வளர்புகழ்ச் சனி புரக்க
பெறுமுகம் அன்பர் அன்பன்
பேணுக செவி கறுக்கும்
அறுவை நன்கு அணிவோன் காக்க
அச்சமே விளைக்கு மெய்யோன்
நறுமலர் விழி புரக்க
நாசி கை காரி காக்க.
கருங்களம் உடைய தேவன்
கவின்படு கண்டம் காக்க
பெருங்கடின் படுபு யத்தோன்
பெருவரைப் புயம் புரக்க
வருங்கை நீலோற் பலம்போல்
வளர்ஒளி அண்ணல் காக்க
ஒருங்குறும் எனது நெஞ்சம்
உடல் கரியவன் புரக்க.
சுந்தரம் தழுவும் உந்தி
சுட்கமாம் வயிற்றோன் காக்க
சந்தமார் விகடன் செய்வோன்
தடம்படு கடி புரக்க
நந்திய கோர ரூபன்
நற்றொடை புரக்க நாளும்
முந்துறு நெடிய ரூபன்
மொழிதரு முழுந்தாள் காக்க.
மங்கலம் ஈயும் ஈசன்
வனப்புறு கணைக்கால் காக்க
தங்குறு பரடு இரண்டும்
தகு குணாகரன் புரக்க
பங்கெனப் படுவோன் பாதம்
பழுதறப் புரக்க பார்மேல்
செங்கதிர் அளிக்கு மைந்தன்
திருந்திமென் அங்கங் காக்க.
நன்றிதரு சனிகவச நாள்தோறும்
அன்பினொடு நவின்று போற்றில்
வெற்றிதரும் விறல்உதவும் புகழ் அளிக்கும்
பெருவாழ்வு மேவ நல்கும்
கன்றுபவத் துயர்ஒழிக்கும் வினை ஒழிக்கும்
பிணி ஒழிக்கும் கவலை போக்கும்
அன்றியும் உள் நினைந்தவெலாம் அங்கை நெல்லி
யம்கனியாம் அவனி யோர்க்கே.
அருஞ்சுவணம் முதலவற்றின் அமைக்கும்
இயந்திரம் எள்ளுள் அமரவைத்து
வருஞ்சுகந்த மலராதிக்கு அரியவற்றால்
பூசித்து மனுப்பு கன்று
பெருஞ்சுகம் கொண்டிட விழைவோன்
கருந்துகிலோடு அந்தணர்க்குப் பெட்பின்ஈயில்
கருஞ்சனி உள் மகிழ்ந்துறு நோய்
களைந்துநல முழுதும்உளங் கனிந்தே நல்கும்.
ஆங்கதனோடு அரும்பொருளும் மற்றவனுக்கு
அளிப்பன் எனில் அவனுக்கு என்றும்
தீங்குஅகல மேன்மேலும் பெருகி எழு
வாழ்நாளும் செல்வப் பேறும்
ஓங்குமனை மக்கள்முதல் பற்பலசுற்
றப்பொலிவும் உதவும் காண்பீர்
வாங்குகடன் முளைத்திருள்நீத் தெழும்
கதிரேசன் அன்று உதவ வந்த மைந்தன்!

சனீஸ்வரன் அஷ்டோத்திரம்
ஓம் சநைச்சராய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நம
ஓம் சரண்யாய நம
ஓம் வரேண்யாய நம
ஓம் ஸர்வேசாய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் ஸுரவந்த்யாய நம
ஓம் ஸுரலோக விஹாரிணே நம
ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நம
ஓம் ஸுந்தராய நம
ஓம் கநாய நம
ஓம் கநரூபாய நம
ஓம் கநாபரண தாரிணே நம
ஓம் கநஸார விலேபாய நம
ஓம் கத்யோதாய நம
ஓம் மந்தாய நம
ஓம் மந்த சேஷ்டாய நம
ஓம் மஹ நீய குணாத்மநே நம
ஓம் மர்த்ய பாவந பாதாய நம
ஓம் மஹேசாய நம
ஓம் சாயா புத்ராய நம
ஓம் சர்வாய நம
ஓம் சத தூணிர தாரிணே நம
ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நம
ஓம் அசஞ்சலாய நம
ஓம் நீலவர்ணாய நம
ஓம் நித்யாய நம
ஓம் நீலாஞ்ஜந நிபாய நம
ஓம் நீலாம்பர விபூஷாய நம
ஓம் நிச்சலாய நம
ஓம் வேத்யாய நம
ஓம் விதிரூபாய நம
ஓம் விரோதா தார பூமயே நம
ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நம
ஓம் வஜ்ர தேஹாய நம
ஓம் வைராக்யதாய நம
ஓம் வீராய நம
ஓம் வீத ரோக பயாய நம
ஓம் விபத்பரம் பரேசாய நம
ஓம் விச்வவந்த்யாய நம
ஓம் க்ருத்ர வாஹாய நம
ஓம் கூடாய நம
ஓம் கூர் மாங்காய நம
ஓம் குரூபிணே நம
ஓம் குத்ஸிதாய நம
ஓம் குணாட்யாய நம
ஓம் கோசராய நம
ஓம் அவித்யர் மூல நாசாய நம
ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நம
ஓம் ஆவுஷ்ய காரணாய நம
ஓம் ஆபதுத்தர்த்ரே நம
ஓம் விஷ்ணுபக்தாய நம
ஓம் வசிநே நம
ஓம் விவிதாகம வேதிநே நம
ஓம் விதிஸ்துத்யாய நம
ஓம் வந்த்யாய நம
ஓம் விரூபாக்ஷõய நம
ஓம் வரிஷ்ட்டாய நம
ஓம் க்ரிஷ்டாய நம
ஓம் வஜ்ராங்குசதராய நம
ஓம் வரதாபயஹஸ்தாய நம
ஓம் வாமநாய நம
ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நம
ஓம் ச்ரேஷ்டாய நம
ஓம் மிதபாஷிணே நம
ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நம
ஓம் புஸ்டிதாய நம
ஓம் ஸ்துத்யாய நம
ஓம் ஸ்தோத்ரகம்யாய நம
ஓம் பக்தி வச்யாய நம
ஓம் பாநவே நம
ஓம் பாநு புத்ராய நம
ஓம் பவ்யாய நம
ஓம் பாவநாய நம
ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நம
ஓம் தநதாய நம
ஓம் தநுஷ்மதே நம
ஓம் தநுப்ரகாச தேஹாய நம
ஓம் தாமஸாய நம
ஓம் அசேஷ ஜநவந்த்யாய நம
ஓம் விசஷபலதாயிநே நம
ஓம் வசீக்ருத ஜநேசாய நம
ஒம் பசூ நாம் பதயே நம
ஓம் கேசராய நம
ஓம் ககேசாய நம
ஓம் கநநீலாம்பராய நம
ஓம் காடிந்ய மாநஸாய நம
ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நம
ஓம் நீலச்சத்ராய நம
ஓம் நித்யாய நம
ஓம் நிர்குணாய நம
ஓம் குணாத் மநே நம
ஓம் நிராமயாய நம
ஓம் நந்த்யாய நம
ஓம் வந்தநீயாய நம
ஓம் தீராய நம
ஓம் திவ்யதேஹாய நம
ஓம் தீ நார்ததி ஹரணாய நம
ஓம் தைந்ய நாசகராய நம
ஓம் ஆர்யஜ நகண்யாய நம
ஓம் க்ரூராய நம
ஓம் க்ரூர சேஷ்டாய நம
ஓம் காமக்ரோதகராய நம
ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நம
ஓம் பரிபோஷித பக்தாய நம
ஓம் பரபீதி ஹராய நம
ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நம
நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.
சனீஸ்வர அஷ்டகம்
எட்டு சுலோகங்களான இந்த அஷ்டகம் தசரத சக்கரவர்த்தியினால் திரேதாயுகத்தில் இயற்றப்பட்டதாகும். இந்த ஸ்தோத்திரத்தில் சனீஸ்வர பகவானின் அருமை பெருமைகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. சனிக்கிழமை தோறும் இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்போர்க்கு சனிபகவானால் வரும் துன்பம் விலகும். உளுந்து, எள், எண்ணெய், வெல்லம் இவற்றைத் தானம் செய்வது சனிபகவானுக்குப் ப்ரீதியானதாகும். இந்த சுலோகத்தை சனிக்கிழமைகளில், அரச மரத்தடியில் அமர்ந்து படிப்பது மிகவும் விசேஷமாகும்!
கோணாந்தகோ ரௌத்ரயமோ அத பப்ரு:
க்ருஷ்ண: சநி: பிங்கள ஏவ மந்த:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ஸுராஸுரா: கிம்புருஷா கணேந்த்ரா:
கந்தர்வ வித்யாதர கிந்நராச்ச
பஜந்தி பீடாம் விஷம ஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
தைலாயஸைர் மாஷ குட ப்ரதாநை:
ஸ்நாநைர் பலா லோத்ரபலைர் யவாத்யை:
ப்ரீணாதி ஸர்வாந் நிஜவாஸரே ய:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர் புவநத்ரயஸ்ய
த்ராதா ஹரி: ஸம்ஹரண: பிநாகீ
ஏகஸ் த்ரிதா ருக்யஜு: ஸாமமூர்த்தி:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
நரா நரேந்த்ரா: பசவோ ம்ருகேந்த்ரா:
த்வந்யே ச யே கீடபதங்க ப்ருங்கா:
பீட்யந்தி வேதாஷ்ட ம்ருகஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
தேசாச்ச துர்காணி வநாநி யத்ர
க்ராமா நிவேசா: புரபட்டநாநி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ப்ரயாக கூலே யமுநாதடே ச
ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்
யோ யோகிபி: த்யேயதமோ அதி ஸூக்ஷ்ம:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
மாஷைஸ் திலை: கம்பள தேநுதாநை:
லோஹேந நீலாம்பர தாநதோ வா
ந பீடயேத் யோ நிஜவாஸரேண
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
அந்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட:
த்வதீய வாரேஷு ஸுகீ நர: ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோ ந யத: ப்ரயாதி
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
சந்யஷ்டகம் ய: படதி ப்ரபாதே
நித்யம் ஸுபுத்ரை: பசுபாந்தவைச்ச
கரோதி ராஜ்யம் புவி போக ஸெளக்யம்
ப்ராப்நோதி நிர்வாண பதம் ததாந்தே
கோணஸ்த பிங்களோ பப்ரு:
க்ருஷ்ணோ ரௌத்ரோ அந்தகோ யம:
ஸெளரிச் சநைஸ்சரோ மந்த:
பிப்பலாதேந ஸம்ஸ்துத:
ஏதாநி சநி நாமாநி ப்ராதருத்தாய ய: படேத்
சநைசசரருக்ருதா: பீடா: ந பவந்தி கதாசந
இந்த சுலோகத்தில், சனிபகவானின் பதினோரு நாமங்கள் கூறப்படுகின்றன. இந்த சுலோகத்தை, அதிகாலையில் படிப்பது மிகவும் விசேஷமாகும்.
சனீஸ்வர கவசம்
போர் வீரர்கள், பகைவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அணிவது கவசம். அதேபோல், நாம் நோய் நொடிகளால் வரும் துன்பத்திலிருந்து நமது உடலையும் உள்ளத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக உகந்த கவசமாக அணிந்து கொள்வது தெய்வத்தின் திருநாமங்களாகும். புண்ணிய புராண புருஷர்கள் நமது சுபிஷத்திற்காக தெய்வத்தின் திருநாமங்களைக் கவசமாகக் கொண்டு, இடையறாது ஓதும் வண்ணம் அருளியுள்ளார்கள். சனிபகவான் மீது இயற்றப்பட்டுள்ள சனீஸ்வர கவசம், பிரம்ம தேவனால் அருளப்பட்டதாகும். சனீஸ்வர கவசத்தில், உடம்பினை பதினேழு வகையாகப் பிரிக்கப்பட்டு, சனிபகவானுடைய பதினேழு திருநாமங்களால் ஜபிக்கப்படுகின்றன. இக்கவசத்தை அனுதினமும் படித்து, சனிபகவானின் பேரருளால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஓம் அஸ்ய சநைச்சர கவச மந்த்ரஸ்ய, கச்யப ருஷி: அநுஷ்டுப் சந்த: ரவிபுத்ரோ மந்தகதிர் தேவதா. சம்பீஜம், நம் சக்தி: மம் கீலகம், சநைச்சர ப்ரீத்யர்த்தே கவசஜபே விநியோக:
சநைச்சராய நம: - அங்குஷ்டாயாம் நம:
மந்தகதயே: - தர்ஜநீப்யாம் நம:
அதோக்ஷஜாய நம: - மத்யமாப் நாம் நம:
ஸெளரயே நம: அநாமிகாப்யாம் நம:
சுஷ்கோதராய நம: கநிஷ்டிகாப்யாம் நம:
ச்சாயாத்மஜாய நம: கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:
க்ருஷ்ணாம்பரதரம் தேவம் த்விபுஜம் க்ருத்ரஸம்ஸ் திதம்
ஸர்வபீடாஹரம் ந்ரூணாம் த்யாயேத் க்ரஹகணோத்தமம்
ச்ருணுத்வம் முநயஸ் ஸர்வே ச்நிபீடாஹரம் சுபம்
கவசம் க்ரஹராஜஸ்ய ஸெளரே ரித மநுத்தமம்
கவசம் தேவதாவாஸ: கவசம் வஜ்ரபஞ்ஜரம்
ஸர்வபீடாஹரம் ஸ்ரீமத் ஸர்வ ஸெளபாக்யதாயகம்
சிர: சநைச்சர: பாது பாலம் வை ஸூயநந்தந:
நேத்ரே ச்சாயாஸுத: பாது ச்ரோத்ரே பாது யமஸ் ததா
நாஸாம் வைவஸ்வத: பாது முகம் மே பாஸ்கரிஸ் ததா
சுஷ்ககண்டஸ்து மே கண்டம் பாஹூ பப்ருஸ் ததைவச
ஹ்ருதயம் பிங்கள: பாது கோணஸ்த: பார்சவயோர் யுகம்
நாபிம் நீலாஞ்ஜந: பாது கடிம் ரௌத்ரஸ் ததைவ ச
ஊரூ மமாந்தக: பாது யமோ ஜாநுயுகம் ததா
பாதௌ மந்தகதி: பாது ஸர்வாங்கம் பாது பிப்பல:
அங்கப்ரத்யங்ககம் ஸர்வம் ர÷க்ஷத் ஸூர்யஸுதஸ்ததா
ய ஏதத் கவசம் நித்யம் படேத் ஸூர்யஸுதஸ்ய வை
ந தஸ்ய ஜாயதேபீடா சநைச்சரக்ருதா ஸதா
ஜந்மஸ்தாந கதோவாபி ம்ருத்யுஸ்தாந கதோபி வா
ரந்த்ரஸ்தாந கதோ வாபி சநிபீடா ந தஸ்யவை
இத்யேதத் கவசம் ஸெளரே: திவ்யம் ப்ரஹ்மவிநிர்மிதம்

சனி பகவான் போற்றி
ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
ஓம் உபகிரகமுளானே போற்றி
ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கரு மெய்யனே போற்றி
ஓம் கலி புருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலானே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி
ஓம் சுடரோன் சேயே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி
ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்மபீடனே போற்றி
ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
ஓம் பிரபலனே போற்றி
ஓம் பீடிப்பவனே போற்றி
ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன்மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
ஓம் மதிப்பகையே போற்றி
ஓம் மநு சோதரனே போற்றி
ஓம் முடவனே போற்றி
ஓம் முதுமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி
ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி

சனி ஸ்தோத்திரப் பாடல்
முனிவர்கள் தேவ ரேமும்
மூர்த்திகள் முதலி னோர்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன்
மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே
கதிர்சேயே காகம் ஏறுஞ்
சனியனே உனைத் துதிப்பேன்
தமியனேற்கு அருள்செய் வாயே!
(வேறு)
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவு இன்றி சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா!!
சனி மங்களாஷ்டகம்
ஸெளரி: க்ருஷ்ணருசிச்ச பச்சிமமுக: ஸெளராஷ்ட்ரப: காச்யபோ
நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருத்சுரக்ஞயோர்க்ருத்ரக:
ஷட்த்ரிஸ்த: சுபதோசுபோதநுகதிச்சாபாக்ருதௌ மண்டலே
ஸந்திஷ்டந் சிரஜீவதாதிபலத: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: காசியப கோத்ரியும், கும்பம், மகரம் ராசிகளுக்கு தலைவரும், மேற்கே தெற்கு முகமாக வில் போன்ற மண்டலத்தில் இருப்பவரும், நீண்ட ஆயுளை அளிப்பவருமான சனி மங்களத்தைச் செய்யட்டும்.
சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்:
விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.
மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர்.
மேற்கூறி ஸ்லோகங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள திருஞான சம்பந்தரின் பதிகத்தை தினமும் படித்து வந்தால், சனிபகவானைப்போல் கொடுப்பவர் யாருமில்லை. இப்படி என்னதான் விளக்கு போட்டு, பதிகம் பாடி சனிபகவானை வழிபட்டாலும், நாம் எப்போதும் இறை சிந்தனையுடன் நல்லதே செய்து நல்ல முறையில் வாழ்வது மிகவும் முக்கியம்.
போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே
ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்
பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,
பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,
நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே
ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்
ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்
எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே
வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவுஅதிர,
அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்
சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி
அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே
மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,
மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே
தண்புனலம் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல
பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே
திருச்சிற்றம்பலம்
தசரதர் போற்றிய துதி
நம: க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாயச
நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாயச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம: பௌருஷகாத்ராய ஸ்தூரோம்ணே ச தே நம:
நமோ நித்யம் க்ஷúதார்த்தாய த்ருப்தாய ச தே நம:
நமோ கோராய ரௌத்ராய - பீஷணாய கராளிநே
நமோ தீர்காய சுஷ்காய - காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமஸ்தே கோரரூபாய - துர்நிரீக்ஷ்யாயதே நம:
நமஸ்தே ஸர்வ பக்ஷõய - வலீமுக நமோஸ்துதே
ஸூர்ய புத்ர நமஸ்தேஸ்து - பாஸ்கரே அபயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து - ஸம்வர்தக நமோஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் - நிஷ்ப்ரபாய நமோநம:
தப நாத் ஜாத தேஹாய - நித்ய யோகரதாயச
க்ஞாந சக்ஷúர் நமஸ்தேஸ்து - காச்யபாத்மஜ ஸூனவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம்த்வம் - க்ருத்த: ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாச்ச - ஸித்த வித்யாதர உரகா:
த்வயா அவ லோகிதா: ஸர்வே - தைன்யம்ஆசு வ்ரஜந்திதே
ப்ரம்மா சக்ரோயமச்சைவ - முநய: ஸப்ததாரகா:
ரஜ்ய ப்ரஷ்டா: பதந்தீஹ - தவ த்ருஷ்ட்யா அவலோகிதா:
த்வயா அவலோகிதாஸ்தேபி - நாசம் யாந்தி ஸமூலத:
ப்ரஸாதம் குருமே ஸெளரே - ப்ரணத்யாஹித்யம் அர்தித:
ஏவம் ஸ்துத: ஸதா ஸெளரி: - க்ரஹராஜோ மஹா பல:
அப்ரவீக்ச சநிர் வாக்யம் - ஹ்ருஷ்டரோமா ஸபாஸ்கரி:
ப்ரீதோஸ்மி தவ ராஜேந்த்ர - ஸ்தோத்ரேண அநேநஸம்ப்ரதி
அதேயம் வாவரம் துப்யம் - ப்ரீதோஹம் ப்ரததாமிச
த்வயா க்ருதந்து யத் ஸ்தோத்ரம் - ய: படேத் இஹமாநவ:
ஏகவாரம் த்விவாரம்வா-பீடாம் முஞ்சாமி தஸ்யவை
ம்ருத்யு ஸ்தாந கதோவாபி - ஜன்மஸ்தாந கதோபிவா
ய: புமான் ச்ரத்தயா யுக்த: சுசி: ஸ்நாத்வா ஸமாஹித:
சமீபத்ரை: ஸமப்யர்ச்ய-ப்ரதிமாம் லோஹஜாம் மம
மா÷ஷாதநம் திலைர் மிச்ரம் - தத்யாத் லோஹந்து தக்ஷிணாம்
க்ருஷ்ணாம் காம் மஹிஷீம் வஸ்த்ரம் - மாம் உத்திச்ய த்விஜாதயே
மத்திநேது விசேஷேண - ஸ்தோத்ரேண அநேந பூஜயேத்
பூஜயித்வா ஜபேத் ஸ்தோத்ரம் - பூத்வா சைவ க்ருதாஞ்ஜலி:
தஸ்ய பீடாம் நசைவாஹம் - கரிஷ்யாமி கதாசந
கோசரே ஜன்ம லக்னேச - தசாஸு அந்தர் தசாஸுச
ரக்ஷõமி ஸததம் தம்ஹி - பீடாப்ய: அன்ய க்ரஹஸ்யச
அநேநைவ ப்ரகாரணே - பீடாமுக்தம் ஜகத்பவேத்
வரத்வயந்து ஸம்ப்ராப்ய - ராஜா தசரத: ததா
மேநே க்ருதார்த்தம் ஆத்மாநம்-ஸம்யக் ஸ்துத்வா சனைச்சரம்
கோண: சனைச்சரோ மந்த: சாயாஹ்ருதய நந்தந:
மார்தாண்டஜ: ததாஸெளரி: பாதங்கிர் க்ருத்ரவாஹந:
ப்ரும்மண்ய: க்ரூரகர்மாச - நீலவஸ்த்ர: அஞ்ஜநத்யுதி:
க்ருஷ்ண: தர்மாநுஜ: சாந்த: - சுஷ்கோதர வரப்ரத:
÷ஷாடச ஏதாநிநாமாநி - ய: படேச்ச திநேதிநே
விஷமஸ்தோபி பகவான் - ஸுப்ரீத: தஸ்ய ஜாயதே
மந்தவாரே சுசிஸ்நாத்வா - மிதாஹாரோ ஜிதேந்த்ரிய:
தத்வர்ண குஸுமை: ஸம்யக் - ஸர்வாங்கம் த்விஜ ஸத்தம:
பூஜயித்வா அந்ந பாநாத்யை: - ஸ்தோத்ரம் ய: ப்ரயத: படேத்
புத்ரகாமோ லபேத்புத்ரம் - தநகாமோ லபேத்தநம்
ராஜ்ய காமோ லபேத் ராஜ்யம் - ஜயார்த்தீ விஜயீபவேத்
ஆயுஷ்காமோ லபேதாயு: - ஸ்ரீ காம ச்ரியம் ஆப்நுயாத்
யத்யத் இச்சதி தத்ஸர்வம் - பகவான் பக்த வத்ஸல:
சிந்திதாநிச கர்மாணி - ததாதிச நஸம்சய:
சநிநா அதஅந் யநுக்ஞாத: - ஸ்வஸ்தாநம் அகமத்ந்ருப:
ஸ்வஸ் தாந ஸங்கதோ பூத்வா - ப்ராப்தகாம: அபவத்ததா
சனைச்சர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
முத்துசாமி தீட்சிதர் பாடிய கீர்த்தனங்கள்
பல்லவி
திவாகர தநுஜம் சனைச்ரம் தீரதரம் ஸந்தகம் சுந்தயேஹம் (திவா)
அநுபல்லவி
பவாம்பு நிதௌ நிமக்ன ஜநாநாம் பயங்கரம் அதி க்ரூரபலதம்
பவானீச கடாக்ஷ பாத்ர பூதபக்திமதாம்
அதிசய சுய பலதம் (திவா)
சரணம்
காலாஞ்ஜந காந்தியுக்த தேஹம் காலஸஹோதரம்
காக வாஹநம் நீலாம் சுக புஷ்பமாலா வருதம்
நீலரத்ந பூஷண அலங்க்ருதம்
மாலிநீ விநுத குருகுஹ முதிதம் மகரகும்ப ராசீ
நாதம் திலதைல மிச்ரிதான்ன தீபப்ரியம் தயா
ஸுதா ஸாகரம் நிர்பயம்
கால தண்ட பரிபீடித ஜாநும் காமிதார்த்த
பலத காம தேநும் கால சக்ர பேத சித்ரபாநும் கல்பித
சாயா தேவீ ஸுநும் (திவா)
சூரியதேவனின் குமாரர் தைரியமுள்ளவர். சம்சாரம் என்னும் சாகரத்தில் மூழ்கியோர்க்கு பயங்கரமானவர் - கடுமையான பலனைத் தருபவர். சிவபெருமானது கடாட்சத்திற்கு பாத்ரமான பக்தர்களுக்கு அதிகமான - சுபமான பலனைத் தருபவர். மைபோலும் கருமை நிறம் கொண்ட காகத்தை வாகனமாகக் கொண்டவர். கருமை நிறத்துடன் கூடிய வஸ்திரத்தாலும், புஷ்பத்தாலும் அலங்காரம் செய்யப்பட்டவர். மாலிநீ மந்திரத்தால் துதிக்கின்ற குருகுஹனுக்கு இன்பம் அளிப்பவர். மகரம், கும்பம், ராசிகளுக்கு அதிபதியானவர். எள் அன்னத்திலும், நல்லெண்ணை தீபத்திலும் அத்யந்த பிரேமை மிக்கவர். கருணையில் கடலைப் போன்றவர். பயமற்றவர் யம தண்டத்தினால் வருந்தும் முழங்காலைப் பெற்றவர். நாம் விரும்பியதை அளிக்கும் காமதேனு! காலச் சக்ரத்தைப் பிளக்கும் சூரியன் சாயாதேவியிடம் பிறந்தவர். இப்பேர்ப்பட்ட சனிபகவானை எப்பொழுதும் தியானம் செய்கிறேன். சனி பகவானின் அருளையும், கருணை உள்ளத்தையும் சுந்தர கிருதிகளால் பாடிய தீக்ஷதர் அப்பெருமானை எள் அன்னத்தை நிவேதித்து, நல்லெண்ணை விளக்கேற்றி ஆராதிக்க வேண்டும் என்று கூறுகிறார். சனி பகவானுக்கு, நல்லெண்ணை விளக்கேற்றி, எள் அன்னத்தால் நிவேதிப்பதால், அப்பெருமான் நமது கோசார தோஷங்கள், தசாபுத்தி தோஷங்கள், மற்றுமுள்ள இன்னல்கள் அனைத்தையும் விலகச் செய்து, நமக்கு நல்ல பல பலன்களை அளிப்பார் என்பது திண்ணம்


பித்ரு தோஷம் எப்படி உண்டாகிறது? 


ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது கொலை அல்லது தற்கொலை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.அப்படி செயற்கையான முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஐத் தாண்டும்போது அது பித்ரு தோஷமாக வடிவெடுத்து,நமது பிறக்கும் நேரத்தில் ராகு கேதுக்கள் திரிகோணங்களில் அமர்ந்துவிடுகின்றன.ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணியம் ஆகும்.அதே ஐந்தாமிடம் தான் அவர்களுடைய சிந்தனைஸ்தானம், புத்திரஸ்தானம், குல தெய்வஸ்தானம், மன உறுதி ஸ்தானம் ஆகும்.இங்கே ராகு அல்லது கேது இருக்க ஒரு ஆணோ பெண்ணோ பிறந்துவிட்டால்,அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும்.(1.திருமணம் நடைபெறாது. 2.குழந்தை பிறக்காது 3.எத்தனை கோயில்களுக்குச் சென்று அன்னதானம், ஆடை தானம், பசு தானம், ருத்ராட்ச தானம், தண்ணீர் தானம், விளக்கு தானம், கும்பாபிஷேகம் செய்தாலும் பலன் கிடைக்காது 4.பூர்வீகச் சொத்துப் பிரச்னையாகவே இருக்கும் 5.ஏதாவது ஒரு தீராத நோய் இருந்து தொல்லை செய்து கொண்டே இருக்கும் 6.குடும்பத்தில் வெள்ளிக்கிழமைகளில் திடீரென சண்டை வந்து கொண்டே இருக்கும்) என்ன அறப்பணிகள் செய்தாலும்,அதற்குரிய புண்ணியப்பலன்கள் அவர்களை சிறிதுகூட வந்து சேராது. ஏனெனில், இரண்டே இரண்டு காரணங்கள் அப்படி புண்ணியத்தை உரியவர்களுக்குக் கிடைக்காமல் செய்துவிடுகின்றன. இப்படி யாருக்கெல்லாம் நடக்கிறதோ அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது. எனது 12 வருட ஜோதிட ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்த ஜோதிட ரகசியம் இது.இப்படிப்பட்டவர்களின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 3,5,9 ஆம் இடங்களில் ராகு அல்லது கேது இருக்கும்.  

தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்டுள்ள முன்னோர்களுக்கு உரிய சாந்திப்பரிகாரமான பித்ரு தோஷ நிவாரணம் செய்யாமல் இருப்பது!இதனால் பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.

சரி எப்படி பித்ரு தோஷம் உருவாகிறது? 


ஒருவரின் அப்பாவின் அத்தைக்கு அவரது ஜாதகப்படி ஆயுள் 61 வயது என்று வைத்துக்கொள்வோம் ஆனால், அவர் தீராத வயிற்று வலியால் தனது 27 வயதில் தற்கொலை செய்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம்;அப்படி அவர் தற்கொலை செய்து விட்டதால், அவர் எந்த இடத்தில் தற்கொலை செய்தாரோ அந்த இடத்தில் அவருடைய 27 ஆம் வயதில் இருந்து 61 ஆம் வயதுவரை ( அவருக்கு முறைப்படி ஆயுள் முடியும் வரை) அவரது ஆத்மா தரையிலிருந்து 20 சதுர அடிகளுக்கு சுற்றிக்கொண்டே இருக்கும்.தற்கொலை செய்துவிட்டதால், அவருக்கு நம்மைப் போலவே தினமும் பசிக்கும் தாகம் எடுக்கும் ஆனால் அவரால் சாப்பிட முடியாது நீர் அருந்த முடியாது.சாப்பிடாமலும், தாகத்தோடும் 52 வருடங்களுக்கு ஒரு ஆத்மா தவியாய் தவித்தால் என்னாகும்?

அந்த அத்தையின் 61 ஆம் வயதில் அவரது உயிரானது எமலோகத்துக்குச் செல்லும்.அங்கே இவரது பாவ புண்ணியக்கணக்கு பார்த்தால், இவர் 52 வருடங்களாக எந்த பாவமும் புண்ணியமும் செய்யாமலிருப்பது தெரியவரும்.உடனே, இவரை கொதிக்கும் அறையில் அல்லது குளிர்ந்த அறையில் காக்க வைத்து விடுவார்கள். இந்த அறையில் இவரைப் போலவே நமது முன்னோர்களில் ஐந்து தலைமுறை வரை யாரெல்லாம் தற்கொலை மற்றும் கொலை செய்யப்பட்டார்களோ அவர்களும் இருப்பார்கள்.அவர்களின் ஒட்டு மொத்தசாபமும் ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும்.அப்படி இருப்பது போல ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே ஒருவர் மட்டும் பித்ரு தோஷத்துடன் பிறப்பார்.அதாவது, அந்த அப்பாவின் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களின் குழந்தைகளில் யாராவது ஒருவருக்கு பித்ருதோஷம் இருந்தே தீரும்.

பித்ரு தோஷத்தைத் தீர்க்கக் கூடிய திலா ஹோமம் செய்ய வேண்டும். காசி, கயா, ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கொடுமுடி, ராமேஸ்வரம், விஜயாபதி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் மற்றும் சில நகரங்களில் முறையாக புரோகிதம் செய்பவர்களைக் கொண்டு செய்ய வேண்டும்.அவ்வாறு திலா ஹோமம் செய்தபின்னர், வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், வேறு எவர் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக அவரவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அப்படி சென்ற பின்னர், ஓராண்டு வரையிலும் அசைவம் சாப்பிடக் கூடாது ஒவ்வொரு அமாவாசைக்கும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 9 பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்ய வேண்டும், இப்படி 12 அமாவாசைகளுக்குத் தொடர்ந்து செய்தால்தான் பித்ருதோஷ நிவாரணம் முழுமையடையும். அது வரையிலும் அசைவம் சாப்பிடக் கூடாது.இப்படிச் செய்து முடிப்பத ன் மூலமாக, தற்கொலை செய்த நமது முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி கிடைக்கும்.யார் பித்ரு தோஷ நிவாரணம் முறையாக செய்து முடிக்கிறார்களோ,அவர்களுக்கு நீண்டகால பிரச்னைகள் தீர்ந்துவிடும் அல்லது நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறும். 

Tuesday, July 1, 2014

காதலை தீர்மானிக்கும் 5 கிரகங்கள்

குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா, சொதப்புமா என்பதை தீர்மானிக்கின்றன.

குரு:

ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.

சுக்கிரன்: 

இவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

செவ்வாய்: 

இவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

புதன்:

ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.

சந்திரன்:

மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.

காமத்தை நிர்ணயிக்கும் வீடுகள்

ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12-ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

அதிரடி காதலர்கள்

மூன்றாம் இடம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12-ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய திசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.

உஷார் லவ்வர்.. உஷார்!

நான்காம் இடம்: இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

காதல் இனிக்குமா?

ஏழாம் இடம்: இந்த இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும். ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும்.

ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம். குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.

காதல் சொதப்பும்!

12-ம் இடம்: இந்த இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.

விவகாரமான சனி-சந்திரன்

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது. பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரனும், ஏழாம் அதிபதியும் பலம் குறைந்து நீச்சமாக இருப்பது, ஏழாம் வீட்டில் ராகு-சனி, சுக்கிரன்-கேது இருப்பது. நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் சனியும், சனி வீட்டில் சுக்கிரனும் இருப்பது ஆகியவை இருந்தால் பெண்கள் மீதே அவர்களுக்கு நாட்டம் ஏற்படலாம்.

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகள்தான் யோக, அவயோகத்துக்கு காரணமாக இருக்கிறது. நன்மை, தீமை இரண்டுக்குமே கிரகங்கள்தான் காரணம். ஒருவருக்கு கிடைக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையுமே ‘பிராப்தம்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதனால்தான் திருமண பொருத்தத்தின்போது ஜாதக பொருத்தம் மிக அவசியம் என்று கூறுகிறார்கள். இதில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புகள் எல்லாம் இருந்தபோதிலும், சில நேரம் கைகூடாமல் போகலாம். அதற்கு வேறு கிரக சேர்க்கைகள் காரணமாக இருக்கும். மேலும் காதல், காமம் போன்ற விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நீச்ச கிரக, பாவ கிரக, திசா புக்தி அந்தரங்களில் தொடர்புகள் ஏற்படுகின்றன. ராசிநாதன், லக்னாதிபதி பலமாக இருந்தால், எந்த சூழ்நிலையிலும் அவர் சஞ்சலம், சபலம் அடையமாட்டார் என்று அடித்து சொல்லலாம். இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.

மிதுனம் செல்வம்

சுக்கிரன் - செவ்வாய் 

ஆகாத கூட்டணி ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.

சுக்கிரனும், செவ்வாயும்

கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்.. காதலுக்கு உகந்த இடம் எது?

பள்ளியில் தொடங்கி, கல்லூரி, பணி புரியும் இடம் என எல்லா இடங்களிலும் காதல் மலர்கிறது. இளம் வயது என்பது பக்குவம் இல்லாத வயது என்பதால் அப்போது மலரும் ஈர்ப்பை காதலாக கருத முடியாது. கல்லூரி காலம் என்பது குழப்பமான பருவம் என்பதால், அந்த காதலும் பெரும்பாலும் சக்ஸஸ் அடைவதில்லை. ஓரளவு பக்குவம் வந்த பிறகு மலரும் காதல்தான் அன்யோன்யமாக, நீடித்திருப்பதாக அமைகிறது. இதுவும் ஜாதகம் மற்றும் அந்தந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்ததே. பள்ளி, கல்லூரி பருவத்தில் லக்னாதிபதி, 5-ம் எண் அதிபதி ஆகியோர் வலுவாக இருந்தால் காதல் போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லாது. கிரகங்களின் அனுக்கிரகத்தால் நீங்கள் பொறுப்பு உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அமைந்தால் காதலின்பால் நாட்டம் ஏற்பட்டு வழிதவறி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

செவ்வாயும் ராகு கேதுவும் தோஷமா? சந்தோஷமா?

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகு-கேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12-ல் இருந்தால் தோஷம். ராகு-கேது லக்னம், 2, 7, 8-ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8-ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8-ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள். ஜோடிகள் இடையே காதல் சுகம் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இலைமறை காய்மறையாக ‘தோஷ ஜாதகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

ராகு-கேது விஷயத்திலும் அதே அணுகுமுறைதான். லக்னத்துக்கு 7, 8ல் ராகு-கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், ‘தோஷம்‘ என்று சொல்லி சம தோஷ ஜாதகத்தை சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.

கள்ளக்காதல் ரகசியம்

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8-ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.
Blogger Gadgets