Monday, April 21, 2014


வாழ்க்கையில் வரும்   

பிரச்னைகளை ஜெயிப்பவர்கள் யார்?


ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு மூன்றாம் இடம் கீர்த்தி ஸ்தானம் என்றும் தைரியஸ்தானம் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த தைரிய ஸ்தானத்தில் சுபர்கள் அமைந்துவிட்டால், அந்த ஜாதகர்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும், எந்த சவால்களை அவர்கள் சந்தித்தாலும் அவற்றிலிருந்து எப்படியும் விடுபட்டு வெற்றி வாகை சூடுவார்கள். லக்கினத்திற்கு 3-ஆம் இடத்தின் அதிபதி 4, 7, 10-ம் இடங்களான கேந்திரத்திலோ அல்லது 5, 7, 9-ம் இடங்களான திரிகோணத்திலோ இருந்தாலும், பிரச்னைகள் அனைத்தையும் தூசியாக தட்டிவிடுவார்கள். அதுவே, 3-ம் அதிபதி மறைந்தால், சிறு பிரச்னை வந்தாலும் அவர்களுக்கு அது பெரியதாக தோன்றும். அதுபோல, 3-ம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்தாலும், லக்கினாதிபதியோ அல்லது 5-ம் அதிபதியோ சேர்ந்து இருந்தாலும் இவர்களுக்கு வரும் பிரச்னைகளை மற்றவர்கள் தலையில் வைத்து சுலபமாக தப்பித்து விடுவார்கள். பொதுவாக 3-ம் இடம் பலமாக இருந்துவிட்டால், கடல் அளவு பிரச்னைகளும் இவர்களுக்கு கடுகளவுதான்.

No comments:

Blogger Gadgets