Thursday, April 24, 2014


பங்கு சந்தையும் ஜோதிடமும்



ஜோதிடம் மூலம் பங்கு சந்தையை காண்போம். பிறப்பு ஜாதகத்தில் 2,6,10,11 ஆம் வீடுகளுடன் 5 ஆம் பாவ உபநட்சத்திரம் என்ற நட்சத்திரம் தொடர்பு கொண்டு மேலும் 10ஆம் பாவ உபநட்சத்திரம் 5ஆம் பாவத்தை குறிகாட்டினால் அவர்கள் பங்கு சந்தை மூலம் பலன் அடைவார்கள். ராசியில் துலா ராசி , கிரகத்தில் குரு மற்றும் புதன் பங்கு சந்தையை குறிக்கும். 2,5,10,11 ஆம் பாவங்கள் தசா புக்தி காலத்தில் ஜாதகர் நல்ல பலனை அடைவார்.

ஓர் சில நிறுவனங்களில் முதலீடு செய்து பயனடைய முடியுமா என்பதை பிரசன்ன முறையில் நிர்ணையம் செய்வதே சிறந்தது. பிரசன்ன ஜாதகத்தில் 6 ஆம் பாவ உப நட்சத்திரம் 2,6,11 குறிகாட்டினால் முதலீடு வளரும் என்பதையும்,5,8,12 யை குறிகாட்டினால் முதலீடு நஷ்டமடையும் என அறியலாம். பங்கு சந்தையில் பல வகையான றுவனங்கள் பங்கு கொள்கிறது. பெட்ரோல், தொலை தொடர்பு எனநிறுவனங்களின் தொழில் பிரிவுகள் வேறுபடுகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பான முன்னேற்றம் பெறும் வியாபார பிரிவு( sector) சந்திரனை கொண்டு முடிவு செய்யலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திராதிபதி வியாபார பிரிவை நிர்ணையம் செய்கிறார். கிரகங்கள் குறிக்கும் வியாபார பிரிவுகள் சிலவற்றை காணலாம்.

கிரகம்-----------------------------------தொழில் பிரிவு
சூரியன் / செவ்வாய் 
----------------மருந்து பொருட்கள்
குரு / புதன்
-----------------------------வங்கி
சுக்கிரன் / புதன்
------------------------கம்யூட்டர்
புதன்
--------------------------------------தொலை தொடர்பு
கேது / சந்திரன்
------------------------எரிவாயு
சந்திரன் 
--------------------------------- சிமெண்ட்
செவ்வாய் / சுக்கிரன்
-----------------ஆட்டோ மொபைல்
சனி/சந்திரன்/யுரைனெஸ்
---------பெட்ரோலியம்
சனி / நெட்டியூன்
----------------------மது
சனி/செவ்வாய்
------------------------உரம்

இது போன்ற கிரகத்தின் தன்மையை கொண்டு வியாபார பிரிவில் முதலீடு செய்யலாம். மேலும் பங்கு சந்தை இயற்கை சீற்றங்களையும் , அரசியல் மாற்றத்தையும் பொருத்து மாறுபடும்.

No comments:

Blogger Gadgets