Monday, April 21, 2014

மருத்துவ சிகிச்சைக்கு உகந்த ஓரைகள்



நாடி ஜோதிடத்தில் குரு, சுக்கிர சேர்க்கைக்கு சஞ்சீவினி யோகம் என்று பெயர். ஒருவருடைய ஜாதகத்தில் சஞ்சீவினி யோகம் இருந்தால், அவருக்கு என்ன வியாதி வந்தாலும் எப்படியாவது குணமாகிவிடுவார். நாடி ஜோதிட விதிகளின் படி குருவுக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12ல் சுக்கிரன் இருந்தால் அது சஞ்சீவினி யோகமாகும். இது போன்ற கிரக அமைப்பு வருடத்தில் 8 மாதங்கள் வரைக்கும் இருக்கும். இந்த காலங்களில் மருந்து சாப்பிட நோய்கள் விரைவில் குணமாகும். மற்ற 4 மாதங்களில் மருந்துகள் அதிக பலன் தராது. இந்த கிரக சேர்க்கைக்குரிய பலன்களை வாராதிபதியும் ஓராதிபதியும் இணையும் நேரங்களிலும் அடையலாம். இதன்படி வியாழக்கிமை சுக்கிர ஓரையில் அல்லது வெள்ளிக்கிழமை குரு ஓரையில் மருந்து சாப்பிட, நாள் பட்ட வியாதிகள் விரைவில் குணமாகும்.

No comments:

Blogger Gadgets