Friday, May 30, 2014

சராசரிவாழ்க்கைக்கு ஜாதகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்:

ஒரு ராசியில் பரல்களின் சராசரி அளவு என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.
மொத்த பரல்கள் 337 வகுத்தல் 12 ராசிகள் = 28

அப்படி எல்லாம் எல்லோருக்கும் இந்த சராசரி அளவே அமைந்து விடாது.

அதனால் லக்கினத்தில் இருந்து அடுத்தடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளுக்கும்
பரல்களின் குறைந்த அளவு எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்று
நமது முனிவர்கள் குறித்து வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அதைக் கீழே
கொடுத்துள்ளேன்.

1. லக்கினம் 25
2ஆம் வீடு - 22
3ஆம் வீடு 29
4ஆம் வீடு 24
5ஆம் வீடு 25
6ஆம் வீடு ............34
7ஆம் வீடு 19
8ஆம் வீடு 24
9ஆம் வீடு 29
10ஆம் வீடு ..........36
11ஆம் வீடு ...........54
12ஆம் வீடு 16

விளக்கம்: லக்கினத்தில் 25 பரல்கள் இருந்தால் போதும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக
இருக்கும் 2ஆம் வீட்டில் 22 பரல்கள் இருந்தாலே குடும்ப வாழ்க்கை அமையும்.
4ஆம் வீட்டில் 24 இருந்தாலே போதும் கல்வி கிடைக்கும். 28 பரல்கள் இல்லாமல்
போய்விட்டதே என்று மனம் நொடிந்து போகாமல் இருப்பதற்காக, ஆராய்ந்து
இதை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் சாத்தியமில்லை!
அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.
அவ்வாறு இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, கலாநிதிமாறன், ஜெயலலிதா அம்மையார்
போன்றவர்களுக்கு வேண்டுமென்றால் இருக்கலாம். எல்லோருக்கும் எப்படியிருக்கும்?
ஆகவே அதை வைத்து ஸீரியசாகி விடாதீர்கள் அங்கே 30 பரல்கள் இருந்தாலே போதும்.
அதே கதைதான் 11ஆம் வீட்டிற்கும். அங்கேயும் 30 பரல்கள் இருந்தாலே போதும்

உங்களுக்கு இந்தக் குறைந்த அளவு பரல்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.
இருந்தால் போதும். சந்தோஷமாக இருங்கள்!
---------------------------------------------------------------------



வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

இளமை, நடு வயது, முதுமை

இந்த மூன்று பிரிவில் எந்தப் பகுதி நமக்கு நன்றாக இருக்கும் என்று தெரிந்து
கொள்ள முடியுமா?

முடியும்!

1.மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் - இந்த நான்கு ராசிகளின் கூட்டல் தொகை
இளமைப் பருவம்
2.கடகம், சிம்மம், கன்னி, துலாம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
நடு வயதுக் காலம்.
3.விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
முதுமைக் காலம்.

இதில் எந்தப் பருவத்தில் கூட்டல்தொகை அதிகமாக உள்ளதோ அந்தப் பருவம்
தான் உங்கள் வாழ்வில் சிறப்பானதாக இருக்கும்

மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்

-------------------------------------------------------------
பாடம் 3

பதவி, பணம், புகழ், மகிழ்ச்சி எல்லாம் உண்டா என்பதற்கு 10ம் வீட்டைவிட
11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருக்க வேண்டும். ஆனால் 11ஆம் வீட்டை விட
12ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் இருக்க வேண்டும்.

ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால்
கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்

10th house >11th house <12th house! = நல்லது!
10th house >11th house >12th house = நல்லதல்ல
---------------------------------------------------------------
4.
லக்கினத்தில் 30 பரல்கள் இருந்து, லக்கினநாதன் 4th or 10th or 11th அதிபதி உடன்
சேர்ந்து இருந்தால் ஜாதகன் கலங்கரை விளக்கு போல (Light House) அனைவருக்கும்
உதவியாக இருப்பான்.
-----------------------------------------------------------------
5. கேந்திர ஸ்தானங்களில் தீய கிரகங்கள் இருந்து 9,10, 11ஆம் வீடுகளில் 21 அல்லது
அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் நன்மையல்ல! விதி அந்த ஜாதகனைத்
திருவோட்டோடு தெருவில் நிறுத்திவிடும்.
-----------------------------------------------------------------
6.
லக்கினம், 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அந்த ஜாதகனுக்கு உயர்ந்த செளகரியமான வாழ்க்கை அமையும்.
(Luxurious life) அது அவன் காலம் முடியும்வரை தொடர்ந்து இருக்கும்!

கிரகங்கள் குறிக்கும் தொழில்

கிரகங்கள் குறிக்கும் தொழில் - புதன்...
ஆசிரியர் , எழுத்தர் , கணக்கர் , ஜோதிடம் , தணிக்கை செய்பவர் , வழக்கறிஞர் , பத்திரிகை தொழில் , தரகு தொழில் , காகித காகிதம் குறிப்பேடுகள் பேனா போன்ற பொருட்கள் விற்பனை ,கணிதத்துறை ,நீதித்துறை ,அஞ்சல் துறை ,செய்தி துறை,தகவல் தொடர்பு துறை, அச்சுத்துறை ,தொலைபேசி ,தந்தி, பத்திரிக்கை , புத்தக வியாபாரம் , பேச்சாளர் ,சட்ட ஆலோசகர் ,தூதரகத்தில் பனி ஒற்றர் வேலை ,புலனாய்வுத்துறை .

கிரகங்கள் குறிக்கும் தொழில் - குரு..
நீதித்துறை , தெய்வப்பணி ,வழக்கறிஞர் , அமைச்சர் , வங்கி மேலாளர் , கௌரவமான தொழில் , உயர்ந்த தொழில் , நிர்வாக பொறுப்புள்ள உத்தியோகம் , நீதித்துறை ஆசிரியர் , ஆன்மீகதுறை , அறநிலையத்துறை , மதபோதகர் , யோகாசன பயிற்சியாளர் , வேதவிற்பன்னர் , தர்ம ஸ்தாபனத்தில் பணி ,ஜோதிடம் , பொருளாதார துறை ,உயிர் பாதுகாப்பு .

கிரகங்கள் குறிக்கும் தொழில் - சுக்கிரன்..
அழகு பொருட்கள் விற்பனை , ஆடம்பர பொருட்கள்விற்பனை ,சொகுசு பொருட்கள் விற்பனை , வாசனை பொருட்கள்விற்பனை ,கலை பொருட்கள் விற்பனை , சுவையான உணவுபொருட்கள் விற்பனை ,பொன் , வெள்ளி மற்றும் வைர வியாபாரம் , கால்நடை வளர்த்தல் , இயல் , இசை , நாடகம் போன்ற கலை தொழில்கள் ,கவிதை எழுதுதல் , பாட்டுபாடுதல் , நடிப்பு தொழில் , துணிமணி வியாபாரம் , கட்டில் மெத்தை வியாபாரம் , சங்கீத கருவி வியாபாரம் , அழகு நிலையம் வைத்தல் , சுற்றுலாதுறை , கேளிக்கை விடுதி வைத்தல் , வகனகளை கொண்டு தொழில் செய்தல் , மது வியாபாரம் , தாங்கும் விடுதி நடத்துதல் , ஓவியம் வரைதல் , சிற்பங்கள் செய்தல் , ஒப்பனை செய்தல் , அழகு போட்டியில் கலந்து கொள்ளுதல் இனிப்பு பண்டங்கள் மற்றும் பழரசம் தயாரித்தல் , வட்டி தொழில் , வங்கி பணி செய்தல் , தரகு தொழில் , நிதி நிறுவனங்களை நடத்துதல் , நிதி திரட்டுதல் , நிதி அமைச்சர் , தணிக்கையாளர் .

கிரகங்கள் குறிக்கும் தொழில் - சனி...
இரும்பு வியாபாரம் , எண்ணை வியாபாரம் , நிலகரி , சுரங்க தொழில் , கடினமான வேலைகள் , கழிவு பொருட்கள் விற்பனை செய்தல் , தோட்டி வேலை , ஆடு, மாடு , மற்றும் பன்றி வளர்த்தல் , தோல் வியாபாரம் செய்தல் , கருங்கல் மற்றும் மண் வியாபாரம் செய்தல் , மரம் வெட்டுதல் , மரம் விற்பனை செய்தல் , பழைய பொருட்கள் விற்பனை செய்தல் , மயானத்தில் வேலை செய்தல் , செருப்பு தைத்தல் , துப்புரவு பணி , முடிவெட்டும் பணி , கல் மற்றும் மண் சுமத்தல் , கட்டிடத்தில் பணி செய்தல் , தொழிற்சாலைகளில் எடுபிடி வேலை செய்தல் .

கிரகங்கள் குறிக்கும் தொழில் - ராகு..
ரசாயன பொருட்கள் விற்பனை , மின்னணுவியல் துறை , தொழுநோய் மருத்துவம் , பாம்பாட்டி , ஒற்றர் பணி , வெளிநாடு வர்த்தகம் , போதை பொருட்கள் விற்பனை , விஷமருந்து விற்பனை , சிறைச்சாலையில் பணி செய்தல் , மாந்திரிகம் , கள்ளக்கடத்தல் , புலன் ஆய்வுத்துறை , உளவுத்துறை , திருட்டுத்தொழில் , சினிமாத் தொழில் , அடிமைத்தொழில் , ஏமாற்றி பிழைத்தல் , பழைய பொருட்கள் விற்பனை , சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் , ஏவல் ,பில்லி , சூனியம் மற்றும் துஷ்ட சக்தி பிரயோகம் செய்தல் .

கிரகங்கள் குறிக்கும் தொழில் - கேது...
மருத்துவம் , ஜோதிடம் , ஆன்மிகம் , தையல்கடை வைத்தல் , கயிறு வியாபாரம் , மின் கம்பிகள் சம்பந்தமான தொழில் , நூற்பாலையில் பணி , மதபோதனை , துறவறம் கொள்ளுதல் , மந்திர சித்தி மூலம் சிகிச்சை அளித்தல்.

ஜோதிட பார்வையில் ராசியும் ஆலயங்களும்

                                                ராசியும் ஆலயங்களும் 

         ஒவ்வொரு  ராசிக்காரர்களும்  வழிபட வேண்டிய ஆலயங்கள் 


                      மேஷம்                   ---------           இராமேஸ்வரம்

                       ரிஷபம்             --------           திருப்பதி 

                       மிதுனம்                     ---------           பழனி 

                       கடகம்                         ---------           இராமேஸ்வரம் 

                       சிம்மம்                        ---------           ஸ்ரீவாஞ்சியம்  ( தஞ்சை ஜில்லா )

                       கன்னி                          ---------           திருக்கழுக்குன்றம் 

                       துலாம்                        ----------           திருத்தணி 

                       விருச்சிகம்              ----------            காஞ்சிபுரம் 

                       தனுசு                           ----------             மயிலாடுதுறை 

                        மகரம்                         ----------              சிதம்பரம் 

                        கும்பம்                        ----------              தேவிபட்டிணம் 
                                                                                          (ராமநாதபுரம்)

                         மீனம்                           ----------            வைதீஸ்வரன்கோவில் 


ஒவ்வொரு ராசிக்காரர்களும்  அவரவர்களுக்கு உரிய ஆலயங்களுக்கு

வாழ்வில் ஒரு முறையாவது  சென்று வந்தால்  அவர்கள்  வாழ்க்கை

மேம்படும் , சிறக்கும் என்பது  நம்பிக்கை.

ஏழரை சனி - ஒரு பார்வை

                                                  ஏழரை  சனி - ஒரு பார்வை

      ஒருவருடைய  ஜாதகத்தில்  சனி உச்சம் பெற்றுறிருந்தால்  71/2 சனி

பாதிப்பு ஏற்படாது .

     ஒருவரது  ஜாதகத்தில் சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும்

71/2 சனி கெடுதல் செய்யாது .

ஜனன காலத்தில் ஜன்ம லக்னத்திற்கு  3,6,10,11-ல் சனி அமர்ந்தாலும்  71/2 சனி

கெடுதல்  செய்யாது .

மகரம் அல்லது கும்ப  லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில்

இருந்தால் 71/2 சனியும் கெடுதல் செய்யாது , தவிர அவருக்கு சுகமான

வாழ்வு கிட்டும் .

சனி உச்சம் பெற்று துலா  ராசியில் இருந்தால் அது    கேந்திரம்  அல்லது

திரிகோணம்  என்று இருந்தால் அவருக்கு வெற்றி மேல் வெற்றி , சுக வாழ்வு ,

உயர்  பதவி ,உல்லாச வாழ்க்கை  என்ற அனைத்தும் கிட்டும்..

(கேந்திரம் என்பது 1,4,7,10 -ம் இடங்கள்

திரிகோணம் என்பது 1,5,9-ம் இடங்கள்)

மேஷத்தில் சனி நீசம் பெற்று,வக்கிரமும் பெற்று குரு பார்வை பெற்றால்

நீச  பங்க ராஜயோகம் -வாழ்வு சிறக்கும் என்கிறது ஜோதிடம்.

                                                 
                                                   பொதுவாக  சில

ஜாதகம்  வலுவாக இருந்து கோச்சாரப்படி  சனி பெயர்ச்சி  வலுவாக

இருந்தால்  உயர் பலன்கள் கிடைக்கும் .

ஜாதகம் வலுவாக இருந்து கோச்சாரப்படி  சனி பெயர்ச்சி  வலு இல்லாவிடில்

சுமாரான  பலன்  கிடைக்கும்.

ஜாதகத்தில் சனியும் கெட்டு  கோசாரத்தில்  சனியும் கெட்டு  இருந்தால்

கெடுதலான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் சனியும் கெட்டு  கோசாரத்தில்  சனி வலுவுடன் இருந்தால்

கெடு  பலன்கள்  இருக்காது ,சுமாரான பலன்கள் கிடைக்கும்.


                        சனி கோச்சாரப்படி  நன்மை தரும்   ஸ்தானங்கள்  

ஜன்ம ராசிக்கு 3,6,11-ல் சனி  சஞ்சரிக்கும்  காலம் நன்மையான காலம் .

சுகபோகங்களை  அள்ளி  தருவார் .

3-ம் இடத்தில சனி சஞ்சரிக்கும் காலம் கை விட்டுப்போன பொருள்

கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும் .பண வரவு  பெருகும் ,நூதன

பொருட்கள் ,வாகனங்கள் வாங்கலாம் .புதிய தொழில் அமையும்.

இல்லறம் இனிக்கும்.

6-ம் இடத்தில சனி சஞ்சரிக்கும் காலம் ,எதிரிகள் மறைவர் ,நோயிலிருந்து

விடுபடலாம் .கடன் தொல்லை தீரும் .தனம் பெருகும் .உத்தியோக உயர்வு

கிட்டும் .தூர தேச பயணம் வெற்றியாகும் .

11-ம் இடத்தில சனி சஞ்சரிக்கும் காலம் ,பாக்கியம் கூடும் ,திருமணம்

கைகூடும் .சகோதர உறவு நெருக்கம் ஏற்படும் .அவர்களால் பண உதவி

கிட்டும். தன  லாபம் ஏற்படும்.

நவ கிரகங்களில் சனியும் பரிகாரமும்

சனி என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் கிலிதான். ஆனால் சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். பொதுவாக  தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.

சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய்.  பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார். சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.

சனியின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.

ஆயுள் காரகனாக செயல்படும் சனி கலகங்கள், அவமதிப்பு, நோய், போலியான வாழ்வு, அடிமை நிலை, கடுகு, உளுந்து எள்ளு, கருப்பு தானியங்கள், இயந்திரங்கள், ஒழுங்கற்ற செயல்கள், விஞ்ஞான கல்வி, இரும்பு உலோகங்கள், அன்னிய நாட்டு மொழிகள், ஏவலாட்கள், எடுபிடி, திருட்டு, சோம்பல் முதலியவற்றிற்கும் காரகம் வகிக்கிறார். இது மட்டுமின்றி பாரிச வாய்வு, வாதநோய், எலும்பு வியாதிகள், பல் நோய், ஜலதோஷம், யானைகால் நோய், புற்றுநோய், ஆஸ்துமா, ஹிஸ்ப்ரியா சித்த சுவாதீனம், கை கால் ஊனம், சோர்வு மந்தமான நிலை இயற்கை சீற்றத்தால் உடல் பாதிப்பு ஏற்படும்.


சனி தான் நின்ற வீட்டிலிருந்து 3,7,10 ம் வீடுகளை பார்வை செய்கிறார். இதில் 10ம் பார்வை மிகவும் பலம் வாய்ந்தது.  7 ம் பார்வை பாதி பங்கு பலம் வாய்ந்தது. 3 ம் பார்வை மிகவும் குறைந்த பலத்தை உடையது. செவ்வாயின் பார்வையை  விட சனி பார்வை கொடியது. சனி சூரியனை பார்வை செய்தால் மிகவும் கஷ்டப்பட்டே உணவு உண்ண வேண்டும். பல சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சனி சுக்கிரனை பார்வை செய்தால் இல்வாழ்வில் நிம்மதி இருக்காது. சனி சந்திரனை பார்வை செய்தால் உடல் நிலையில் பாதிப்பு, தாய்க்கு தோஷம் உண்டாகும்.

மகரம்,கும்பம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம லக்னத்திலிருந்தால் எல்லா பாக்கியமும் கிடைக்கப் பெறும். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஒருவருக்கு சனி திசை 4 வது திசையாக வந்தால் மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை ஏற்படுத்தும். மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி நான்காவது திசையாக வரும். சனி ஜெனன ஜாதகத்தில் 3,6,10,11 ல் இருந்தால் கேந்திர திரிகோணங்களில் பலமாக இருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் ஏற்றமான வாழ்வு உண்டாகும்.

சூரியனுக்கு முன்பின் 15 டிகிரிக்குள் சனி அமையப் பெற்றால் அஸ்தங்கம் பெறுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனி 8 ல் அமைந்தால் வீடு, வாகனம், கால்நடை யோகம், அரசருக்கு சமமான வாழ்வு அமையப் பெறும். 10ல் அமைந்தால் ஒருவரை மிகவும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்கிறார்.

கோட்சார ரீதியாக வரக்கூடிய ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவற்றில் அசுப பலனையே அடைய நேரிடுகிறது.

சந்தை கூட்டத்தில் செருப்பை வீசினாலும் சனியன் பிடித்தவன் தலையில் சரியாக விழும் என்பது பழமொழி. ஒரு மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வந்தால் நாட்டில் பஞ்சம் வரப்போவதற்று அறிகுறியாகும். சனி பிணம் துணை தேடும் என்பார்கள். ஒருவர்சனிக்கிழமையில் இறந்துவிட்டால் அடுத்த சனிக்கிழமையில் மேலும் ஒரு இழப்பு நிகழும். சைவர்கள் சனிக்கிழமைகள் இறந்தவர்களை  கொண்டு செல்லும் போது ஒர தேங்காயையும், அசைவர்கள் ஒரு கோழியையும் கட்டிக் கொண்டு செல்வது பரிகாரமாகும்.

சனி தான் ஒரு ராசியில் நின்ற பலனைவிட பார்வை செய்யும் இடங்களுக்கு கொடிய பலன்களை உண்டாக்கும். புத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் புத்திர பாக்கியம் தாமதப்படும். களத்திர ஸ்தானத்தை பார்வை செய்தால் திருமணம் நடைபெற தாமதம் உண்டாகும்.

ஏழரை சனி,

ஒருவருடைய ஜெனன ராசிக்கு 12 ல் சனி வரும் போது ஏழரை சனி தொடங்குகிறது. ஒவ்வொரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வீதம் சந்திரனுக்கு 12,1,2,ல் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரை சனி என்று கூறப்படுகிறது. மாளிகையில் வசிக்கும் மன்னரைகூட மண்குடிசைக்கு தள்ளக்கூடிய வலிமை சனிக்கு உண்டு. சனி இறைவனையும் விட்டு வைப்பதில்லை என புராணங்கள் கூறுகின்றன. ஜென்ம ராசிக்கு 12 ல் சனி சஞ்சரிக்கும் போது விரைய சனியும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் போது ஜென்ம சனியும், 2 ல் சஞ்சரிக்கும் போது பாத சனியும் நடைபெறுகிறது. இதில் சிறு வயதில் ஏழரை சனி நடைபெற்றால் மங்கு சனி என்றும், மத்திம வயதில் இரண்டாவது சுற்றாக ஏழரை சனி நடைபெற்றால் பொங்கு சனி என்றும் கூறுவது உண்டு, 3 வது சுற்று மரண சனி ஆகும்.

பொங்கு சனி நடைபெறும் காலங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சனி சந்திரனுக்கு கோட்சார ரீதியாக 8ம் வீட்டில் சஞ்சரிப்பதனை அஷ்டம சனி என்றும், 4ம் வீட்டில் சஞ்சரிப்பதனை அர்த்தாஷ்டம சனி என்றும், 7 ல் சஞ்சரிப்பதனை கண்ட சனி என்றும் கூறுவார்கள். ஆக, சனி கோட்சார ரீதியாக சந்திரனுக்கு 1,2,4,7,8,10,12 ல் சஞ்சரிக்கின்றபோது சாதகமற்ற பலன்களை வழங்குகிறார்.

பொதுவாக சனி ஜெனன காலத்தில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சனியின் ராசியான மகரம், கும்பத்தில் பிறந்தவர்களுக்கும், சனி யோகாதிபதியாக விளங்கும், ரிஷபம், துலாமில் பிறந்தவர்களுக்கும், சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கும் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

சனி பகவான் ஜெனன காலத்தில் நீசம் பெற்றோ, பலஹீனமாக அமையப் பெற்றோ இருந்தாலும், பிறக்கும் போதே ஏழரைச் சனி, அஷ்டமச் சனியில் பிறந்தவர்களுக்கும் கோட்சார ரீதியாக ஏழரைச் சனி, அஷ்டம சனி வரும் காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும். ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடகாலம் தங்கும் சனி பகவான் ஜென்ம ராசிக்கு கோட்சாரத்தில் 3,6,11 ல் சஞ்சரிக்கின்ற போது அனுகூலமான பலன்களை வாரி வழங்குவார்.

சனியின் வக்ரகாலம், சனிபகவான் சூரியனுக்கு 251 டிகிரியில் இருக்கும்போது (9 வது ராசியில்) வக்ரம் பெற்று சூரியனுக்கு 109 வது டிகிரியில் வருகின்றபோது (5 வது ராசியில்)  வக்ர நிவர்த்தி அடைவார். சுமார் 140 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை  வக்ரம் பெறுவார்.

சனி ஓரையில் செய்யக்கூடியவை ,

இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் தொடங்க, நிலத்தில் உழவு செய்ய, மோட்டார் செட் வாங்க சனி ஓரை நல்லது. சனி ஓரையில் நல்ல காரியங்கள், சுபகாரியங்கள் ஆகியவை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
சனிபகவானுக்குரிய பரிகார ஸ்தலங்கள், திருநள்ளாறு, திருகொள்ளிகாடு.
திருநள்ளாறு,

இத்தலம் காரைக்கால் நகரிலிருந்து 6 கி.மீ. கும்பகோணத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல் ஆறு  என்று பெயர் பெற்று, அதுவே மருவி நள்ளாறு என அழைக்கப்படுகிறது.  இக்கோவிலுக்கு ஆதிபுரி, தர்ப்பாரணயம், நகவிகடங்கபுரம், நளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நளதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், அம்ச தீர்த்தம் ஆகியன இங்கு உள்ளன. அதில் நள தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோய்களும், பிரச்சினைகளும் விலகும்.

திருகொள்ளிகாடு,

மனிதனின் துன்பங்களுக்கு தன்னையே காரணமாக்குகின்றாரே என வருந்திய சனி பகவான் திருக்கொள்ளிகாடு எனும் திருத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள அக்னீஸ்வரர் என்னும் சிவனை வணங்கினார். நடுநிலைமையுடன் மக்களின் நன்மை, தீமை செயல்களை ஆராய்ந்து பலனிப்பவன் என சிவனால் புகழப்பட்டு அதே தளத்தில் பொங்கு சூரியன் வீற்றிருக்கிறார்.

சனிபகவானை வழிபாடு செய்யும் முறைகள்,

சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழு மலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டால் சனியால் துன்பம் ஏதும் ஏற்படாது. 


அனுமனையும் விநாயகரையும் வழிபடுவதாலும், சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.


சனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவும்.


சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் சருங்குவளை பூக்களால் அர்ச்சனை செய்யவும்.


ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும். ஹனுமனை வழிபடவும். அனுமன் துதிகளை  கூறவும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் நல்லது.


நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்யவும்.


'சனியின் பிஜ மந்திரமான, ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ர வர்த்தினே, சனைச்சாரய க்லிம் இம் சஹ ஸ்வாஹா, இதை 40 நாட்களில் 19000 தடவை ஜெபிக்கவும்.


கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை வைத்திருத்தல் நல்லது.


நீலக்கல் மோதிரம் அணிவதும் நல்லது.

திருமண வாழ்க்கை என்பது இதுதானா?


Photo Gallery

குரு பகவான் உங்களுக்கு யோகத்தை 
தருவாரா..?

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள்  ஆளுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில  பாவ கிரகங்களாகவும் உள்ளன. அதே சமயத்தில் ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கேற்ப இந்த அம்சங்கள் மாறுபடுவதுண்டு. ஒருவருக்கு
நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு தீமை செய்யும். 

இது அந்தந்த ஜாதக அமைப்பின்படி உள்ள அம்சமாகும். அந்த வகையில் சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய,  விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் உங்களுக்கு நன்மையைத் தருவாரா, குருவின் செயல்கள் என்ன, குரு பலம், குரு பார்வை, குரு யோகம்  உங்களுக்கு உள்ளதா என்பதைப் பார்க்கலாம். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பணம் எனப்படும் பொருட்செல்வம்,  இன்னொன்று புத்திரயோகம் எனப்படும் குழந்தை செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. 

இந்த இரண்டிற்கும் காரகம் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார். மேலும் ஞானம், அறிவு, கூர்ந்த மதிநுட்பம், நாடாளும்  யோகம், உயர்ந்த கௌரவ பதவிகள், நிதித்துறை, நீதித்துறை, தர்ம காரியங்கள், அறங்காவலர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, கவர்னர், பள்ளி, கல்லூரி  தாளாளர்கள், ஆசிரியர், விரிவுரையாளர், வங்கி, கஜானா, மதபோதகர், மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள், சொற்பொழிவாளர்கள், வேதம், உபதேசம்,  அஷ்டமாசித்து மற்றும் எண்ணிலடங்காவிஷயங்களை தன் கைக்குள் வைத்திருப்பவர் குருபகவான் ஆவார்.

குருவின் செயல்கள்


சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும்.  ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தின் - வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் குரு நின்ற இடம்  பாழ் என்ற சொற்றொடரும், அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு என்ற ஜோதிட வாக்கும் ஏற்பட்டன. 

லக்னத்தில் குரு: லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு  விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும். அதே நேரத்தில் லக்னத்தில் தனித்து இருந்தால் பல்வேறு வகையான சிக்கல்கள்  உண்டாகும். மிகப் பெரிய குழப்பவாதியாக ஜாதகரை உருவாக்குவார். சுயமுடிவு செய்யும் தன்மையை இழக்க வைப்பார்.

இரண்டில் குரு: லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.  திக்குவாய் கோளாறு ஏற்படலாம். குடும்பத்தில் ஏதாவது வாக்கு வாதங்கள் இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்கும். அல்லது வரவிற்கும் செலவிற்கும்  சரியாக இருக்கும்.

ஐந்தில் குரு: லக்னத்திற்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் குழந்தை பாக்ய தடை அல்லது காலம் கடந்து குழந்தைகள்  பிறப்பது, உடற்குறையுள்ள புத்திரர்கள், புத்திரர்களால் நிம்மதியற்ற தன்மை, புத்திரசோகம் என ஏற்படும்.

ஏழில் குரு: லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும்.  குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டி வரும். ஆனால், ஏழாம்  இடத்தில் இருந்து குரு லக்னத்தை பார்ப்பதால் அந்தஸ்து, கௌரவம், புகழ், அதிகாரம் போன்றவை ஜாதகருக்கு உண்டாகும்.

பத்தில் குரு: லக்னத்திற்கு பத்தாம் இடமான தொழில், உத்யோக ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால் வியாபாரம், தொழிலில் ஏதாவது  சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும், அடிக்கடி தொழிலை மாற்றுவார். பல தொழில்கள் செய்தாலும் எதிலும் பிடிப்பு இருக்காது. தொழில் செய்யும்  இடங்களில் வழக்குகள் மற்ற குறுக்கீடுகள் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றம், வழக்குகள் என  ஏற்படலாம். ஆனால், பத்தாம் இடத்தில் இருந்து குரு நான்காம் வீட்டைப் பார்ப்பதால் உடல் ஆரோக்யம், மண், மனை, வீடு, வாகன யோகம்  உண்டாகும்.

குருவும் - கேதுவும்


கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்ல
லாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம்,  மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.

குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து,  அதிகாரம்  கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர்  இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார். ஆன்மிக விஷயங்களில்  ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசை,  திரைப்படத் துறையில் யோகத்தை தருவார். சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வல்லமை குரு-கேதுவுக்கு உண்டு.

வியாழ வட்டம் 


ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த  ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப்  பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு  மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.

ஜல ராசி கிரகம்


ராசிகளுக்கென்று ஒவ்வொரு தத்துவம், காரகத்துவம் உண்டு. அந்த வகையில் ஜல ராசிகளில் குரு முக்கிய பங்கு வகிக்கிறார். காரணம், கடகம் என்ற  ஜல ராசியில் குரு உச்சம் பெறுகிறார். மீனம் என்ற ஜல ராசியில் குரு ஆட்சி பெறுகிறார். மகரம் என்ற ஜல ராசியில் குரு நீச்சம் பெறுகிறார். ஒருவர்  கடல் கடந்து அயல்நாடுகளுக்கு சர்வ சாதாரணமாக சென்றுவர குருவின் அருள் தேவை. வெளிநாடு சம்பந்தமான தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி,  வெளிநாட்டு தூதுவர், நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கும் அமைப்பு, கப்பல் வணிகம் ஆகியவை சிறக்க குருவின் கருணை வேண்டும்.

குரு - சந்திர யோகம்


யோகங்கள் பெரும்பாலும் சந்திரன் மூலம்தான் ஏற்படுகின்றன. சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு  இருந்தால் கெஜகேசரி யோகம். குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.   கல்வியில் பிரகாசிப்பார்கள். குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர  யோகம் உண்டாகிறது. இதன் மூலம் உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Golden Rule அனைத்தும் பிரபல பிரசன்ன ஆராய்ச்சியாளரிடம் இருந்து பெறப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் 95% உண்மையாகிறது
1. 1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு.
2. 2ல் சுக்கரன் கள்ளத் தொடர்பு கட்டாயம் இருக்கும்.
3. 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை.
4. 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு.
5. 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம்.
6. 4க்கு கேந்திரத்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை.
7. 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு.
8. செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு.
9. புதன்  உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினிடையே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம்.
10. சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு.
11. சந்திரன் சனி ராகு வெளிநாடு செல்லுதல், பயன கிரகங்கள்.
12. 7ல் குரு சாதுக்களின் சாபம்.
13. 10க்குடையவன் 3ல் சொந்த இடத்தில் தொழில் அமையாது.
14. குரு சந்திரன் ராகு உணவு விஷம்.
15. 10ல் நீச கிரகம் சொந்தப் பொருளை அனுபவிக்க இயலா நிலை.
16. செவ்வாய் சந்திரன் கேது திருமண வெறுப்பு.
17. சந்திரன் சுக்ரன் ராகு சனி அருவறுப்பு நோய்.
18. குரு புதன் சந்திரன் கேது பிரம்மச்சாரு, தாமதத்திருமணம்.
19. குரு கேது தாமதத் திருமணம்.
20. குரு சந்திரன் புதன் சூரியன் காதல் திருமணம்.
21. 2க்குரியவன் 9,11ல் இரண்டு திருமணம்.
22. செவ்வாய் சுக்கிரன்  சந்திரன் படி தாண்டும் திருட்டு உறவு.
23. 6க்குடையவன் திசையில் நொடிந்து போவார்கள், ஐபி கொடுத்தல்.
24. செவ்வாய் புதன் சந்திரன் கோழை.
25. 8ம் அதிபதி 8 ல் எங்குசென்றாலும் சொந்த ஊர் திரும்புதல்.
26. 6,8க்குடையவர்கள்12ல் மறைதல் அக்கா தங்கை உறவு பார்க்காது.
27. அஷ்டமச் சனி( உதயத்திற்க்கு 8ல் சனி) தன் பேராசைக்காக தன்னை வளர்த்தவருடன் போராடுதல், பேராசை அதிகமாகும் காலம்.
28. 2ல் செவ்வாய் கோபம் குடி கெடுக்கும் நிலை.
29: .சந்திராஷ்டம்ம்(தொந்தரவு).
30. 3ல் குரு தம்பியை ஏமாற்றும் நாடகதாரி, காதில் காற்றுடைப்பு.
31. 11ல் சூரியன் பழம் நழுவிபாலில் விழுதல்.
32. செவ்வாய் எங்கிருப்பினும் அதனின்று 10ம் வீடு கெடும்.
33. 3ல் சனி(அ) வக்கிரம்  தன் படிப்பை பாதியில் நிறுத்துதல் .
34. சூரியன் சந்திரன் குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவர் திருமணப் பிரிவுடன் இருப்பிர்.
35. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே, உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும்.
36. குரு சந்திரன் நல்ல செல்ல வளம் பெயர் தந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் மனக்கசப்பே உடன் பிறந்த சகோதரர் வாழ்க்கையைக் கெடுக்கும் புத்திர தோஷத்தைக் காட்டும்.
37. 10 ல் செவ்வாய் சொந்தத் தொழில செய்வதைக்காட்டும்.
38. 5ல் செவ்வாய் தகப்பன் காலத்திற்குப் பின் யோகம் தருகிறது.
39. 6ஆம் இடத்தில்  ராகு வாழாத பெண்கள் உள்ள நிலை.
40. 6ஆம் அதிபதி நீச்சம் திருடிய பொருள் தங்காது.
41. 7ஆம் அதிபதி நீச்சம் மனைவி தங்காது, மனைவியின் பொருள் தங்காது (அ) எதிராளி (அ) பார்ட்னர் இருக்கமாட்டார்.
42. 8ம் அதிபதி நீச்சம் ஆயுள் தொந்தரவு.
43. குருவிற்கு 5,7,9 ல் கிரகம் இல்லை அற்ப ஆயுள், நோயாளி.
44. 7மிடம் திருடனின் நிலையை குறிக்கும்.
45. 7ம் அதிபதி திருடனைக் குறிக்கும்.
46. செவ்வாய் சனி ராகு பெரிய விபத்தைக் தரும் நிலையை காட்டுகிறது.
47. சுக்ரன் அஸ்தமனம் திருமணத் தாமதம். மனைவி தங்காமை, கண்கோளாறு, உடம்பின் முக்கிய சுரப்பகள் இயங்காத நிலை.
48. 1,7 க்குடையவர்கள் 6,8,12 இருப்பின் விரைவில் பிரிவு.
49. சனி சந்திரன் ஆஸ்துமா, புணர்பு யோகம் (திருமணத்தைத் தாமதப்படுத்த பொருளாதாரம் பாதித்தால் திருமணம் எளிதில், விரைவில் முடிந்து விடுகிறது) பந்தல் வரை போய் திருமணம் நின்றுபோனது புணர்பு யோகத்தினால்.
50. புதன் சந்திரன் சனி இழுவைச் சனி.
51. சந்திரன் புதன் டென்சன் பேர்வழி, மன அழுத்தம்.
52. 8ல் குரு வரட்டுப் பிடிவாதம்.
53. 4,8 க்குடையவர் சேர்க்கை வண்டி வாகன மிருகாதி விபத்துக்கள்.
54. 3ல் செவ்வாய் குருட்டுத் தைரியம்.
55. 5ல் சனி உதயத்தில் சனி நீசமான தெய்வம் (கருப்பராயன், முனியம்மாள், பாவாடைத் தாய், பிரகார தெய்வங்களை குறிக்கும்).
56. லக்னம், சனி 3 பாகைக்குள் அற்பாயுள்.
57. மாந்தி சனி 3 பாகைக்குள் அற்பாயுள்.
58. குரு சனி இளமையில் தொழில், நரம்பு சம்பந்தமான நோய்கள்.
59. 5ல் கேது பூர்விகம் போராடி கிடைக்கும்.
60. 8ல் செவ்வாய் சனி மாங்கல்ய தோஷம் 100 சதவீதம்
61. 10ல் சந்திரன் நீச்சம் கடன் அடையாது.
62. 7க்குடையவர் 10ல் நீச்சம் கடன் அடையாது.
63. 4ல் சனி, 4ம் அதிபதி நீசம், 4ல் நீசம் நம்பி மோசம் போதல், நம்பிக்கை இழத்தல்.
64. 8ம் ஆதிபதி  7ல் முதுகு வலி.
65. குரு புதன் அதிக நண்பர்கள்.
66. 11ல் புதன், 5ல் புதன் ஜோதிடர்.
67. 9ல் பாம்பு 10ல் பாம்பு மாந்தீரீகர்.
68. சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை பல மனைவிகள், பணத்தட்டுப்பாடு.
69. சந்திரன் புதன் சுக்ரன் கட்டுப்பாடற்ற மனம்.
70. செவ்வாய் புதன் குடிகாரன்.
71. நீச்ச சந்திரன் செவ்வாய் தவறான பழக்கம்.
72. 3ல் சுக்ரன் சந்தேகப் புத்தி, மறைமுக உறவு.
73. சந்திரன் கேது மன நிலைதடுமாற்றம்.
74. சந்திரன் புதன் சுக்கிரன் அருவருக்கத்தக்க நோய்.
75. உதய லக்கன ராகு பெருத்த உடல், மச்சம் முகத்தில் உண்டு.
76. 10ல் வக்ர கிரகம், 10ம் அதிபதி வக்ரம் தொழிலில் தனித்து இயங்கா நிலையை தருகிறது.
77. சனி நீச்சம் தொழிலில் தனித்து இயங்கா நிலை.

Monday, May 19, 2014

திருமண ரகசியங்கள்


நிச்சயமாக திருமணம் நடக்கும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி


ஆண் ஜாதகம்


1, ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது

7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது
இல்லாமல் இருக்க வேண்டும்.
2, ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல்
சுக்கிரன் நின்றிருக்க, சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க
வேண்டும்.


3, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் அடுத்தடுத்த ராசிகளiல் நின்றால்

திருமணம் நிச்சயம் நடைபெறும்.
4, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக
நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


5, 7-ஆம் பாவ அதிபதி லக்னத்திற்கு கேந்திரத்தில் ( 1-4-7-10 )

நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


6, 7-ஆம் பாவ அதிபதி குருவாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ (

1-4-7-10 ) அல்லது திரிகோணத்திலோ ( 1,5,9 ) நின்றிருந்தால் திருமணம்
நிச்சயம் நடைபெறும்.


7, 7-ஆம் பாவ அதிபதி செவ்வாயாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ

அல்லது 6-ஆம் வீட்டிலோ அல்லது 10-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால்
திருமணம் நிச்சயம் நடைபெறும்.


8, 7-ஆம் பாவ அதிபதிபதி சனியாக அமைந்து, லக்னத்திற்கு கேந்திரத்திலோ

அல்லது 4-ஆம் வீட்டிலோ அல்லது 11-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால்
திருமணம் நிச்சயம் நடைபெறும்.


9, 7-ஆம் பாவ அதிபதியும், லக்னாதிபதியும் இணைந்து எந்த

பாவத்திலிருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


10, 7-ஆம் பாவ அதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் சம சப்தமாக

இருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


11, 7- ஆம் பாவாதிபதியும், லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்று

நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.


மேற்கண்ட விதிகளில் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்

நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.




பெண் ஜாதகம்


1, பெண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது

7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது
இல்லாமல் இருக்க வேண்டும்.


2, பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-

இல் செவ்வாய் நின்றிருக்க, செவ்வாய்க்கு திரிகோணத்தில் கேது இல்லாமல்
இருக்க வேண்டும்.


மேற்கண்ட விதிகளiல் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்

நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.



திருமணம் எளிதில் கைகூடாத  ஜாதகம்


1, 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 6,8-இல் லகனாதிபதி நின்றால் திருமணம்

எளiதில் கைகூடாது. திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியிடையே கருத்து
வேறுபாடு உண்டாகும்.


2, 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 4,10-இ னாதிபதி நின்றாலும் திருமணம்

எளiதில் கைகூடாது.


3, 7-க்குடையவன் 3,6,9,12-ஆம் பாவங்களiல் நின்றால் திருமணம் ஆவது

கடினமாகும்.


4, 7-க்குடையவன் 2,5,8,11-ஆம் பாவங்களiல் பல சிரமங்களுக்குப் பின்

திருமணம் நடைபெறும்.


திருமணத்தடை


1, ஆண் பெண் இருவருடைய ஜாதகங்களiல் களத்திர பாவம் என்பது ஏழாம்

பாவமாகும்.
2, ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரனாகும். பெண்களுக்கு
களத்திரகாரகன் செவ்வாய் ஆகும்.
3, ஒருவருக்கு திருமணமே நடக்காமல் நிரந்தரமாக தடைபடுவதற்கு
காரணமான ஜோதிட விதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
திருமணத்தடை ஆண் ஜாதகம்
1, லக்னாதிபதி நின்ற ராசிக்கு 4,6,8,10-இல் ஏழாம் வீட்டு அதிபதி நிற்பது.
2, குரு நின்ற ராசிக்கு 4,6,8,10-இல் சுக்கிரன் நிற்பது.
3, ஏழாம் வீட்டு அதிபதி நின்ற ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது
நிற்பது.
4, சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது நிற்பது.
5, 7-ஆம் வீட்டில் ராகு அல்லது கேது நின்றால் திருமணத்தில் தடை ஏற்படும்.
6, 7-க்குடையவனோடு ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் திருமணத்தில்
தடை ஏற்படும்.
7, அதிர்ஷ்ட வசமாக அவருக்கு திருமணம் நடந்தாலும், அவர் எத்தனை
திருமணம் செய்து கொண்டாலும் அத்தனை திருமணங்களும் தோல்வியில்
முடியும்.
8, மேற்கண்ட விதிகளiல் நான்கிற்கு மூன்று விதிகள் பொருந்தி வருமாயின்
அந்த பெண் நபருக்கு எளiதில் திருமணம் கைகூடாது.
திருமணத்தடை பெண் ஜாதகம்
1, லக்னாதிபதி நின்ற ராசிக்கு 4,6,8,10-இல் ஏழாம் வீட்டு அதிபதி நிற்பது.
2, சுக்கிரன் நின்ற ராசிக்கு 4,6,8,10-இல் செவ்வாய் நிற்பது.
3, ஏழாம் வீட்டு அதிபதி நின்ற ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது
நிற்பது.
4, செவ்வாய் நின்ற ராசிக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது நிற்பது.
5, மேற்கண்ட விதிகளiல் நான்கிற்கு மூன்று விதிகள் பொருந்தி வருமாயின்
அந்த பெண் நபருக்கு எளiதில் திருமணம் கைகூடாது.
6, அதிர்ஷ்ட வசமாக அவருக்கு திருமணம் நடந்தாலும், அவர் எத்தனை
திருமணம் செய்து கொண்டாலும் அத்தனை திருமணங்களும் தோல்வியில்
முடியும்.
தசா புத்திரீதியாக திருமணம் நடைபெறும் காலம்
1, லக்னாதிபதியின் தசா, புத்திகள்.
2, 7-க்குடையவனின் தசா புத்திகள்.
3, 7-இல் நின்ற கிரகத்தின தசா புத்திகள்.
4, 7-க்குடையவனின் சாரம் பெற்ற கிரகங்களiன் தசா புத்திகள்.
5, 7-இல் நின்ற கிரகத்தின் சாரம் பெற்ற கிரகங்களiன் தசா புத்திகள்.
6, லக்னத்தில் நின்ற கிரகத்தின் தசா புத்திகள்.
7, லக்னாதிபதியின் சாரம் பெற்ற கிரகங்களiன் தசா புத்திகள்.
8, லக்னத்தில் நின்ற கிரகத்தின் சாரம் பெற்ற கிரகங்களின் தசா புத்திகள்.
9, குரு நின்ற ராசிக்குக் 7-குடையவனின் தசா புத்திகள்.
10, குரு நின்ற ராசிக்குக் 7-குடையவனின் தசா புத்திகள்.
11, 7-க்குயைவனோடு இணைந்த கிரகங்களiன் தசா புத்திகள்.
12, சுக்கிரனோடு இணைந்த கிரகங்களiன் தசா புத்திகள்.
13, பெண் ஜாதகத்தில் செவ்வாய்யோடு இணைந்த கிரகங்களiன் தசா
புத்திகள்.
14, சுக்கிரனுக்கு 7-க்குடையவனின் தசா புத்திகள்.
15, சுக்கிரனுக்கு 7-இல் நின்ற கிரகங்களiன் தசா புத்திகள்.
திருமணம் எப்போது
ஆண் ஜாதகம்
1, ஆணுடைய பிறப்பு ஜாதகத்தில உள்ள சுக்கிரனுக்கு 1,5,9-இல் அல்லது
3,7,11-இல் அல்லது 2,12-இல் கோட்சார குரு சஞ்சரிக்கும் காலத்தில்
திருமணம் நடைபெறும்.
பெண் ஜாதகம்
2, பெண்ணுடைய பிறப்பு ஜாதகத்தில் உள்ள செவ்வாய்க்கு 1,5,9-இல் அல்லது3,7,11-இல் அல்லது 2,12-இல் கோட்சார குரு சஞ்சரிக்கும் காலத்தில்
திருமணம் நடைபெறும்.


உறவில் திருமணமா அல்லது அன்னியத்தில் திருமணமா?


உறவில் திருமணம்


1, பிறந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ஆம் பாவ அதிபதி 2,6,10-மற்றும்3,7,11-ஆம் பாவங்களுடன் தொடர்பு கொண்டால்( சேர்க்கை அல்லது பார்வை )
உறவில் திருமணம் நடக்கும்.
2, 7-இல் புதன், சனி சுக்கிரன், ஆகிய கிரகங்கள் இணைந்து நிற்பது அல்லது
இம் மூன்றும் கிரகங்களும் 7-ஆம் வீட்டை பார்ப்பது அல்லது இம் மூன்று
கிரகங்களும 7-க்குடையனைப் பார்ப்பது உறவில் திருமணம் நடக்கும்.
3, 7-க்குடையவன் 2,6,10-அல்லது 3,7,11-ஆம் வீடுகளiல் தனித்து நின்று
1,5,9,4,8,12-க்குடையவர்களiன் தொடர்பு இல்லாமல் இருப்பது.
4, 7-க்குடையவன் 2,6,10,3,7,11-ஆம் வீடுகளiல் நின்று 2,6,10,3,7,11-ஆம்
வீட்டு அதிபதிகளுடன் மட்டும் தொடர்பு கொண்டு நிற்பது.
5, 7-ஆம் பாவத்தின் 2,6,10,3,10,11-க்குடையவர்கள் இணைந்து நிற்பது.
6, 7-ஆம் பாவத்திற்கு 1,5,9,4,8,12-க்குடையவர்களiன் தொடர்பு இல்லாமல்
இருப்பது.



அன்னியத்தில் திருமணம்


1, பிறந்த ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ஆம் பாவ அதிபதி 1,5,9-மற்றும்
4,8,12-ஆம் பாவங்களுடன் தொடர்பு கொண்டால் ( சேர்க்கை அல்லது பார்வை
) அன்னியத்தில் திருமணம் நடக்கும்.
2, 7-இல் சூரியன், செவ்வாய், சந்திரன், குரு ஆகிய கிரகங்கள் இணைந்து
நிற்பது அன்னியத்தில் திருமணம் நடக்கும்.
3, 7-ஆம் பாவத்திற்கு 2,6,10,3,7,11-க்குடையவர்களiன் தொடர்பு இல்லாமல்
இருப்பது.
4, 7-க்குடையவன் 1,5,9,4,8,12-ஆம் பாவங்களiல் நின்று 2,6,10,3,7,11-ஆம்
அதிபதிகளுடன் தொடர்பு இல்லாமல் இருப்பது.
5, 7-க்குடையவன் 1,5,9,4,8,12-ஆம் பாவங்களiல் நின்று 1,5,9,4,8,12-ஆம்
வீட்டு அதிபதிகளுடன் மட்டும் தொடர்பு கொண்டு நிற்பது.
6, 1,5,9,4,8,12-க்குடையவர்கள் எல்லோரும் 1,5,9,4,8,12-பாவங்களiல் நிற்பது.
7, 1,5,9,4,8,12-ஆம் பாவாதிபதிகள் எல்லோரும் இணைந்து ஆம் பாவத்தில்
இருப்பது.


தாய் வழி திருமணம்
7-ஆம் பாவ அதிபதி 2,6,10-ஆம் பாவங்களுடன் தொடர்பு பெற்றால்
திருமணம் தாய் வழியில் நடக்கும்.
தந்தை வழி திருமணம்
7-ஆம் பாவ அதிபதி 3,7,11-ஆம் பாவங்களுடன் தொடர்பு பெற்றால்திருமணம் தந்தை வழி திருமணம் நடக்கும்.
அத்தை மகளை திருமணம் செய்பவர்
1, 7ஆம் பாவத்தில் 3-க்குடையவன் நின்றால் அத்தை மகள் மனைவியாக
அமைவாள்.
2, 7-ஆம் பாவத்தில் 11-க்குடையவன் நின்றாலும் அத்தை மகள் மனைவியாக
அமைவாள்.
தாய்மாமன் மகளை திருமணம் செய்பவர்
1, 7-ஆம் பாவத்தில் 6-க்குடையவன் நின்றால் தாய்மாமன் மகள் மனைவியாக
அமைவாள்.
2, 7-ஆம் பாவத்தில் 10-க்குடையவன் நின்றால் தாய்மாமன் மகள்
மனைவியாக அமைவாள்.
அக்கா மகளை திருமணம் செய்ப்பவர்
1, 7ஆம் பாவத்தில் 3-க்குடையவன் நின்றால் ஜாதகன் தன் மூத்த
சகோதரியின் மகளை மணப்பான்.
அக்காள் தங்கை இருவரையும் திருமணம் செய்பவர்
1, 7-ஆம் பாவத்தில் 5,7-க்குடையவர்கள் சேர்க்கைப் பெற்று நின்றால் ஜாதகன்
அக்காள் தங்கை இருவரையும் மணப்பான்.
2, 7-ஆம் பாவத்தில் 7,9-க்குடையவர்கள் சேர்க்கைப் பெற்று நின்றால் ஜாதகன்
தன் மனைவியின் தங்கையையும் மணப்பான்.
மனைவியின் தோழியை திருமணம் செய்பவர்
1, 7-க்குடையவன் 3,11-இல் நின்றால் ஜாதகன் தன் சகோதரியின் தோழியை
மணப்பான்.
அன்னிய ஜாதி அல்லது அன்னிய மதத்தை திருமணம் செய்பவர்
1, 7-இல் ராகு நின்றால் அன்னிய ஜாதி அல்லது அன்னிய மதத்தைச் சேர்ந்த
பெண்னை மணக்க நேரிடலாம்.
எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்பவர்
1, 7-க்குடையவனும் லக்னாதிபதியும் சம சப்தமாக நின்றால் ஜாதகதர் தன்
வீடடிற்கு எதிர் வீடடில் வசிக்கும் பெண்ணை மணக்கும் வாய்ப்பு உண்டு.
கணவன் / மனைவி அமைவது உள்ளுரிலா அல்லது வெளியூரிலா
உள்ளுரில் அமையும் கணவன் / மனைவி
1, 7-க்குடையவனும் லக்னாதிபதியும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் தாரம்
உள்ளூரிலேயே அமையும்.
2, 7-ஆம் பாவ அதிபதி நின்ற ஸ்திர ராசியானால் தாரம் உள்ளூரிலே அல்லது
தன் ஊருக்கு மிகவும் அருகிலுள்ள ஊரிலோ அமையும்.
வெளயூரில் அமையும் கணவன் மனைவி
7-ஆம் பாவ அதிபதி நின்ற ராசி சர ராசியானால் தாரம் வெளiயூரில் அதாவது
வெகு தொலைவில் உள்ள ஊரில் அமையும்.
கொஞ்சம் தொலைவில் அமையும் கணவன் மனைவி
1, 7-ஆம் பாவ அதிபதி நின்ற ராசி உபய ராசியானால் கொஞ்சம் தொலைவில்
உள்ள ஊரில் அமையும்.
இரண்டாம் தாரமாகச் செல்லும் பெண்கள் 
1, பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது
இருந்தால் அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி விவாஹுரத்தான ஆணை
திருமணம் செய்து கொள்ள நேரிடும்.
2, அவ்வாறு செய்த கொண்டால் அந்தப் பெண்ணைப் பொருத்தவரை ஒரே ஒரு
திருமணம் தான்.
3, அவளுடைய கணவனுக்குத்தான் இவள் இரண்டாம் தாரம் அவ்வாறு
அமையாமல் அவளுடைய கணவனுக்கு அவள் முதல் தாரமாக இருந்தால்
பிரிவினை ஏற்பட்டு இன்னொருவனை மணக்க நேரிடும்.
4, இதனால் அந்தப் பெண் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள
வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
5, பெண்கள் ஜாதகத்தில் 7-க்குடையவனுக்கு 1,5,9-இல் அல்லது 2-இல் கேது
நின்றாலும் மேற்கண்ட பலன்கள் நடக்க வாய்ப்புண்டு.
மனைவி அவள் வீட்டிற்கு ஒரே பெண்ணா
ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,7,2,12-இல் எந்த கிரகமும்
இல்லையென்றால் மனைவி அவள் வீட்டிற்கு ஒரே பெண்ணாக இருப்பாள்.
2, பெரும்பாலும் உடன் பிறந்தாவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
3, திருமணத்திற்குப் பின் ஜாதகருக்கு மனைவி வீட்டாருடன் எந்த வித
தொடர்பும் இருக்காது.
4, ஆண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,7,2,12-இல் எந்த
கிரகமும் இல்லையென்றால் மனைவி அவள் வீட்டிற்கு ஒரே பெண்ணாக
இருப்பாள்.
5, திருமணத்திற்குப் பின் ஜாதகருக்கு வாழ்க்கைத் துணைவரின் வீட்டாருடன்
எந்த வித தொடர்பும் இருக்காது.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1,7,2,12-இல் எந்த கிரகமும்
இல்லையென்றால் கணவன் அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருப்பான்.
2, பெரும்பாலும் உடன் பிறந்தாவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
3
, திருமணத்திற்குப் பின் ஜாதகிக்கு கணவன் வீட்டாருடன் எந்த வித
தொடர்பும் இருக்காது.
4, பெண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,7,2,12-இல் எந்த
கிரகமும் இல்லையென்றால் கணவன் அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக
இருப்பான்.
5, திருமணத்திற்குப் பின் ஜாதகருக்கு வாழ்க்கைத் துணைவரின் வீட்டாருடன்
எந்த வித தொடர்பும் இருக்காது.


கணவன் / மனைவி குடும்பம் சிறியதா பெரியதா என்பதை
கண்டறிதல்

ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,7,2,12-ஆம் இடங்களiல்
அமர்ந்துள்ள கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு மேல் இருந்தால் மனைவியின்
குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்
2, 4-க்கு குறைவாக இருந்தால் மனைவியின் குடும்பம் சிறிய குடும்பமாகும்.
3, ஆண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,7,2,12-ஆம்
இடங்களiல் அமர்ந்துள்ள கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு மேல் இருந்தால்
மனைவியின் குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்.
4, 4-க்கு குறைவாக இருந்தால் மனைவியின் குடும்பம் சிறிய குடும்பமாகும்.


பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1,7,2,12-ஆம் இடங்களiல்
அமர்ந்துள்ள கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு மேல் இருந்தால் மனைவியின்குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்.
2, 4-க்கு குறைவாக இருந்தால் மனைவியின் குடும்பம் சிறிய குடும்பமாகும்.
3, பெண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,7,2,12-ஆம்
இடங்களiல் அமர்ந்துள்ள கிரகங்களiன் எண்ணிக்கை 4-க்கு மேல் இருந்தால்
மனைவியின் குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்.
4,,4-க்கு குறைவாக இருந்தால் மனைவியின் குடும்பம் சிறிய குடும்பமாகும்.
கணவன் / மனைவியின் வீடு அமைந்த வீதியைக் கண்டறிதல்
ஆண் ஜாதகம்
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது ஏழுக்குடையவன் நின்ற ராசியைக்
கொண்டு மனைவியின் வீடு அமைந்திருக்கும் வீதியைபற்றி அறியலாம்.
பெண் ஜாதகம்
பெண் ஜாதகத்தில் செவ்வாய் அல்லது ஏழுக்குடையவன் நின்ற ராசியைக்
கொண்டு மனைவியின் வீடு அமைந்திருக்கும் வீதியைபற்றி அறியலாம்.
1, மேசம் - கிழ மேல் வீதி, வடக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
2, ரிசபம் - தென் வடல் வீதி, கிழக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
3, மிதுனம் - கிழ மேல் வீதி, தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
4, கடகம் - தென் வடல் வீதி, மேற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
5, சிம்மம் - கிழ மேல் வீதி, வடக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
6, கன்னி - தென் வடல் வீதி, கிழக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
7, துலாம் - கிழ மேல் வீதி, தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
8, விருச்சிகம் - தென் வடல் வீதி, மேற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
9, தனுசு - கிழ மேல் வீதி, வடக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
10, மகரம் - தென் வடல் வீதி, கிழக்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
11, கும்பம் - கிழ மேல் வீதி, தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு
12, மீனம் - தென் வடல் வீதி, மேற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு


கணவன் அல்லது மனைவியுடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையை
தோராயமாக கண்டறியும் முறை ஒன்றை பர்ப்போம்

ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் ராசிக் கடடத்தில் சுக்கிரனுடன் ஒரே ராசியில் சேர்க்கைப்
பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர் மனைவியுடன்
பிறந்தவர்களாவர்.
2, ஆண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் ஏழுக்குடையவனுடன் ஒரே ராசியல்
சேர்க்கைப் பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர்
மனைவியுடன் பிறந்தவர்கள் ஆவர்.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் செவ்வாய்யுடன் ஒரே ராசியில்
சேர்க்கைப் பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர் கணவனுடன்
பிறந்தவர்களாவர்.
2, பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் ஏழுக்குடையவனுடன் ஒரே ராசியல்
சேர்க்கைப் பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர் கணவனுடன்
பிறந்தவர்கள் ஆவர்.
கணவன் / மனைவி அமையும் திசையை கண்டறிதல்
ஆண் ஜாதகம்
ஆண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சுக்கிரன் அல்லது ஏழுக்குடையவன் நின்ற
ராசியைக் கொண்டு மனைவி அமையும் திசையை அறியலாம்.
பெண் ஜாதகம்
பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் செவ்வாய் அல்லது ஏழுக்குடையவன்
நின்ற ராசியைக் கொண்டு மனைவி அமையும் திசையை அறியலாம்.
ராசி கணவன் / மனைவி அமையும் திசை
மேஷம்  கிழக்கு
ரிஷபம் கிழக்கு
மிதுனம் தென் கிழக்கு
கடகம் தெற்கு
சிம்மம் தெற்கு
கன்னி தென் மேற்கு
துலாம் மேற்கு
விருச்சிகம் மேற்கு
தனுசு வட மேற்கு
மகரம் வடக்கு
கும்பம் வடக்கு
மீனம் வட கிழக்கு
உங்கள் கணவன் மனைவியின் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்து
கொள்ளலாம்

ஆண் அல்லது பெண் ஜாதகங்களில்
1, 7-ஆம் வீட்டின் அதிபதியின் மூன்று நட்சத்திரங்கள்
2, 7-ஆம் வீட்டில் உள்ள கிரகங்களiன் மூன்று நட்சத்திரங்கள்
3, 7-ஆம் வீட்டை பார்த்த கிரகங்களiன் மூன்று நட்சத்திரங்கள்
4, 7-ஆம் வீட்டதிபதியுடன் இணைந்த கிரகங்களiன் மூன்று நட்சத்திரங்கள்
5, 7-ஆம் வீட்டை அதிபதியைப் பார்த்த கிரகங்களiன் மூன்று நட்சத்திரங்கள்
6, 7-ஆம் வீட்டு அதிபதி எந்த ராசியில் இருக்கின்றானோ அந்த ராசியின்
அதிபதியின் மூன்று நட்சத்திரங்கள்
7, இவர்களiல் ஏதாவது ஒரு கிரகத்தின் நட்சத்திரமே வரப்போகும் கணவன்
அல்லது மனைவியின் ஜென்ம நட்சத்திரமாக அமையும்.
கணவன் / மனைவிக்கு ஆயுள் பலத்தை கண்டறிதல்
ஆண் ஜாதகம்
1, ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1,5,9-அல்லது 2-இல் ராகு
நின்றால் மனைவிக்கு ஆயுள் குறைவு.
2, ஆண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,5,9-அல்லது 2-இல்
ராகு நின்றால் மனைவிக்கு ஆயுள் குறைவு.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1,5,9-அல்லது 2-இல் ராகு
நின்றால் கணவனுக்கு ஆயுள் குறைவு.
2, பெண் ஜாதகத்தில் 7-க்குடையவன் நின்ற ராசிக்கு 1,5,9-அல்லது 2-இல்
ராகு நின்றால் கணவனுக்கு ஆயுள் குறைவு.
சேர்ந்து வாழ்ந்தால் ஏற்படும் மரணங்கள்
1, மேற்கண்ட தோசமுடைய ஜாதகர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரே
வீட்டில் தொடர்ந்து 6-வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்தால் விரைவில்
வாழ்க்கை துணைக்கு மரணம் ஏற்படும்.
2, அவ்வாறு இல்லாமல் இருவரும் ஒரே இடத்தில் வசிக்காமல் அவ்வப்பொழுது
சிறிது காலம் மட்டும் சேர்ந்து இருந்து விட்டு பிறகு தொழில், வியாபாரம்,
உத்தியோகம் நிமித்தமாக வெவ்வேறு ஊர்களiல் வசிக்க நேரிட்டால் வாழ்க்கைத்
துணையின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படாது.
3, நீண்ட காலம் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
4, கணவன், மனைவி இருவரும் தொடர்ந்து இருவரும் தொடர்ந்து 6-
வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்தால் துணைவருக்கு ஆயுள்
பங்கம் ஏற்படுவதைக் தடுக்க முடியாது. துணைவருக்கு திடீர் மரணம்
ஏற்படலாம்.
மனைவி  உத்யோகம் பார்ப்பவரா ஆண் ஜாதகத்தில் பார்க்கவும்
1, 4,8,10,11-அதிபதிகள் 4,8,10,11-இல் இருப்பது.
2, குரு சந்திரன் இணைந்து கேந்திரம் திரிகோணம் பெறுவது அல்லது 2-இல்
இருப்பது.
3, சுக்கிரன் சந்திரன் இணைந்து அல்லது சுக்கிரன் புதன் இணைந்து கேந்திர
திரிகோணம் பெறுமானால் மனைவி உத்தியோகம் பார்க்கும் நிலை.
4, செவ்வாய் 4,8,12-ம் வீட்டோடு தொடர்பு கொள்வது.
5, 7-ஆம் அதிபதி 2-ல் இருப்பது அல்லது 2-ஆம் இடத்தைப் பார்ப்பது
6, 4,11-ஆம் அதிபதிகள் ஆட்சி, உச்சம் பெறுவது
7, 7,10-ஆம் அதிபதிகள் சம்பந்தம் பெறுவது.
8, சுக்கிரன், சனி சம்பந்தம் அதாவது சேர்க்கை பார்வை பெறுவது உத்யோகம்
பார்க்கும் மனைவி அமையும்.
9, 7-க்குடையவன் 4,8,12-ஆம் இடங்களiல் நின்றால் உத்தியோக பார்க்கும்
பெண் மனைவியாக அமைவாள்.
10, 7-குடையவனோடு 4,8,12-க்குடையவர்கள் சேர்க்கைப் பெற்றாலும்
உத்யோகம் பார்க்கும் பெண் மனைவியாக அமைவாள்.
 
Blogger Gadgets