Monday, April 21, 2014

ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகங்கள்

ஒன்பது கிரகங்கள், ஒருவரின் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள பயன்படுகிறது என்பது உங்களுக்கே தெரியும். 

சூரியன் என்று சொல்லப்படுகிற கிரகம் ஒருவரின் ஆத்ம நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ள பயன்படும் கிரகமாகும். எனவே சூரியன் "ஆத்மகாரகன்" என்று சொல்வார்கள் இதே சூரியனை "பிதுர்காரகன்" சொல்வார்கள். ஒருவருடைய தந்தையாரைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினால் நாம் சூரியனின் நிலையை வைத்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கடுத்து ஒன்பதாம் வீட்டு கிரகத்தின் அடிப்படையை வைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சந்திரன் என்று சொல்லப்படும் கிரகம் ஒருவருடைய மனோ நிலையைப் பற்றி தெரிந்துகொள்ள உதவும் கிரகமாகும். இந்த கிரகத்தை "மனோகாரகன்" என்றும் "மதுர்காரகன்" என்றும் அழைப்பார்கள். ஒருவருடைய எண்ணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினாலும் சந்திரனின் பலத்தை வைத்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நான்காம் வீட்டு அதிபரின் நிலையைக் கொண்டும் தாயாரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் என்று சொல்லப்படும் கிரகம் "பூமிகாரகன்" என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு சொந்தமாக வீடு அமையுமா என்பதைப் பற்றியும் சகோதரர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும் செவ்வாய் பயன்படுகிறது. மேலும் வீட்டை பற்றியும், நிலங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள நான்காம் வீட்டு அதிபரின் நிலையைக் கொண்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.

புதன் என்று சொல்லப்படும் கிரகம் "கல்விகாரகன்" என்றும், "மாதுலகாரகன்" என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு கல்வி எப்படி அமையும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் புதனைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பக் கல்வி என்றால் இரண்டாம் இடத்தை வைத்தும், உயர்கல்வி என்றால் நான்காம் இடத்தை வைத்தும் பலனைத் தெரிந்து கொள்ள வேண்டும். புதனைக் கொண்டு தாய்மாமன் நிலையையும் தெரிந்து கொள்ளலாம்.

'வியாழன்' என்று அழைக்கப்படும் குருவைக்கொண்டு குழந்தைச் செல்வத்தைப் பற்றியும், பணத்தையும் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ஒருவருக்கு சமயோசித அறிவு நன்றாக இருக்க வேண்டுமென்றால் குருவலிமைப் பெற்றிருக்க வேண்டும். குரு என்பது அறிவைக் குறிக்கக் கூடிய கிரகம். புதன் கல்வியைக் குறிக்கக்கூடிய கிரகம். இரண்டும் சிறப்பாக இருந்தால்தான் அறிவாளியாக, மேதையாக ஒருவர் வாழ முடியும், ஒருவர் செல்வந்தராக வாழ்வதற்கு குரு பலம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் வீடு பலம் பெற்றிருக்க வேண்டும். குழந்தைப் பாக்யம் வேண்டுமென்றால் ஐந்தாம் வீடு பலம் பெற்றிருக்க வேண்டும். குருவும் பலம் பெற்றிருக்க வேண்டும்.

சுக்கிரன் என்று சொல்லப்படும் கிரகம், ஒருவருக்கு வரக்கூடிய மனைவி அல்லது கணவன் எப்படி இருப்பார்? இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சுக்கிரனின் நிலையைத்தான் பார்க்க வேண்டும். சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டும் போதாது. ஏழாம் வீடும் சிறப்பாக இருக்க வேண்டும். அதே போல சுக்கிரனை வைத்துக் கொண்டு ஒருவருக்கு எப்படிப்பட்ட வாகனம் அமையும் என்பதையும் முடிவு செய்துவிடலாம். மேலும் வாகன யோகம் சிறப்பாக அமையுமா என்பதைத் தெரிந்து கொள்ள, சந்திரனைப் பார்ப்பதோடு, நான்காம் வீட்டையும் பார்க்க வேண்டும். மேலும் அழகான வாகனம் அமையுமா, அழகான மனைவி அல்லது கணவன் அமையுமா அல்லது அழகான வீடு அமையுமா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் சுக்கிரனைத்தான் பார்க்க வேண்டும்.

சனி என்று சொல்லப்படும் கிரகம் ஆயுளைப் பற்றியும், ஜீவனைப் பற்றியும் குறிக்கின்றது. சனியை 'ஆயுள்காரகன்' என்றும் குறிப்பிடுவார்கள். ஒருவருக்கு ஆயுள் பலமாக இருக்க வேண்டுமென்றால், சனி பலமாக இருக்க வேண்டும். ஆயுளைக் குறிக்கக்கூடிய எட்டாம் வீடும் பலமாக இருக்க வேண்டும். அடுத்த ஜீவனம் என்றால் தொழில் அல்லது வேலை என்று பொருள்.  ஒருவருக்கு எப்படிப்பட்ட தொழில் அமையும். என்பதைத் தெரிந்து கொள்ள சனி பயன்படுகிறது. மேலும் தொழிலைப் பற்றித் துல்லியமாக அறிய பத்தாம் வீட்டின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்களா என்பதையும் சனியைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய தந்தை வழியைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் , ராகுவின் நிலையைக் கொண்டும், தாய் வழி பாட்டனாரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கேதுவின் நிலையைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம். மேலும் ராகுவை 'போககாரகன்' என்றும், கேதுவை ' ஞானகாரகன்' என்றும் சொல்வார்கள், ஒருவரை போகத்தில் ஆழ்த்துவது, தீய பழக்க வழக்கங்களில் ஆழ்த்துவது, சூதாட்டம் போன்ற காரியங்களில் ஈடுபடுத்துவது, கடத்தல், நிச சம்பந்தமான வேலைகளில் ஈடுபடுத்துவது, நாற்றம் அடிக்கும் தொழிலில் ஈடுபடுத்துவது (திரைப்படம், லெதர், கருவாடு, மீன் ...) தொழிலில் இறங்குகிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கேது ஞான மார்க்கத்தில் ஈடுபடுத்தும், ஆன்மீக வழியில் இறங்குவது மருத்துவம் சம்பந்தப்பட்ட தொழில், ஜோதிடம், ஆன்மீக சம்பந்தப்பட்ட தொழில் ஆகியவற்றில் ஈடுபடுகின்ற பலருடைய ஜாதகத்தில் கேது பத்தாமிடத்தோடு சம்பந்தம் பெற்றிருக்கும்

No comments:

Blogger Gadgets