Tuesday, April 29, 2014

இளம் வயதிலேயே பெரும் செல்வத்தை சம்பாதிக்கக் கூடிய ஜாதகம்

              ஒரு சிலர் தனது ஓய்வு  காலம் வரை சம்பாதித்து விட்டு பின்னரே தனக்கென ஒரு வீடு வாசல் என்று வாழ்க்கையில் செட்டில் ஆகிறார்கள் ஆனால் வெகு சிலரே சிறிய வயதிலேயே மிகப் பெரும் செல்வாக்கினையும் செல்வத்தினையும் சம்பாதிக்கின்றனர். இது அவரவர்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய பூர்வ  புண்ணிய பலத்திலாலேயே நிகழ்கிறது என்றால்
 மிகையல்ல. இவ்வாறு சம்பாதிக்கும் வாய்ப்பு உங்கள் ஜாதகத்தில் உண்டா ? என்பதை
பின்வரும் ஜோதிட பாடல் வழியாக அறிந்து கொள்ளலாம். இவர்கள் சம்பாதிக்கும் 
செல்வமானது தங்களது காலத்திற்கு  பின்னும் நிலைத்து நிற்கக்கூடிய பெரும்
 தனவந்தர்களாக    இருப்பார். வல்லான் வகுத்ததே வழி என்பர். இந்த கலியுகத்தில் தனம் படைத்தவனே வாழ்கையில் வெற்றி பெற்றவனாக கருதப்படுகின்றான் என்றால் பொருளாதாரத்தின் புண்ணியத்தை புரிந்து கொள்ளலாம்.

பொன்னவன் வெள்ளி பார்க்கில் புண்ணியன் இவர்கள் எல்லாம்,
பண்ணு கேந்திரத் திரிகோணம் பதியவே அநேகம் உள்ள,
வண்ண வாகனங்களுக்கு வரிசை மன்னவனாம் ராசா,
என்னலாம் இன்ன யோகம் இளமையில் விளங்குவானே.

              குரு, வெள்ளி ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி ஆகிய மூவரும் கேந்திர திரிகோண தானங்களில் அமர இளமயிலே பலவகையான வாகனங்களுக்கு அதிபதியாக 
அரசனைப்போல விளங்குவான்  என்று  கூறலாம்.

No comments:

Blogger Gadgets