Sunday, April 13, 2014


ஜோதிட பழமொழிகள்


  1. பத்தில் குரு பதவிக்கு இடர்.
  2. இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே.
  3. பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்.
  4. நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை.
  5. சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
  6. வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்.
  7. கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்.
  8. ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க.
  9. குரு பார்க்க கோடி நன்மை.
  10. கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்.
  11. மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்.
  12. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
  13. மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்.
  14. துலா கேது தொல்லை தீர்க்கும்.
  15. சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்.
  16. சுவாதி சுக்ரன் ஓயா மழை.
  17. மறைந்த புதன் நிறைந்த கல்வி.
  18. சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
  19. சித்திரை அப்பன் தெருவிலே.
  20. பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்.
  21. விதி போகும் வழியே மதி போகும்.
  22. அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்.
  23. குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
  24. சனி பார்த்த இடம் பாழ்.
  25. சனி நீராடு.
  26. விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
  27. ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு.
  28. பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்.
  29. எட்டில் சனி நீண்ட ஆயுள்.
  30. சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை.
  31. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.
  32. குரு நின்ற இடம் பாழ்.
  33. சனி பார்க்கும் இடம் பாழ்.

No comments:

Blogger Gadgets