ஜோதிட பழமொழிகள்
- பத்தில் குரு பதவிக்கு இடர்.
- இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே.
- பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்.
- நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை.
- சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
- வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்.
- கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்.
- ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க.
- குரு பார்க்க கோடி நன்மை.
- கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்.
- மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்.
- பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
- மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்.
- துலா கேது தொல்லை தீர்க்கும்.
- சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்.
- சுவாதி சுக்ரன் ஓயா மழை.
- மறைந்த புதன் நிறைந்த கல்வி.
- சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
- சித்திரை அப்பன் தெருவிலே.
- பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்.
- விதி போகும் வழியே மதி போகும்.
- அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்.
- குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
- சனி பார்த்த இடம் பாழ்.
- சனி நீராடு.
- விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.
- ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு.
- பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்.
- எட்டில் சனி நீண்ட ஆயுள்.
- சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை.
- அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.
- குரு நின்ற இடம் பாழ்.
- சனி பார்க்கும் இடம் பாழ்.
Blogger Gadgets
No comments:
Post a Comment