Raagu

விஞ்ஞானத்தில் ராகுகேது 

ராகு கேது வெறும் நிழல் கிரகங்கள் தான். வான் வெளியில் இவர்களுக்கென்று நிலையான ஓர் இடமில்லை. சந்திரன் பூமியை சுற்றிவர சரியாக ஒருமாதம் ஆகிறது. பூமி சூரியனை சுற்றி வரும் பாதையும், சந்திரன் சூரியனை சுற்றி வரும் பாதையும் ஆகாயத்தில் ஒரே திசையாக உள்ளது. சூரிய வீதியும், சந்திர வீதியும் ஆகாயத்தில் சந்திக்கும் நிலை வடக்கிலும், தெற்கிலும் ஏற்படுகின்றன. வடக்கில் சந்திக்கும் நிலை ராகு என்றும், தெற்கில் சந்திக்கும் நிலை கேது என்றும் கூறப்படுகிறது. இதை தான் ராகு&கேது என்று நம் ஆன்றோர்கள் கணக்கிட்டார்கள். மேல் நாட்டு ஜோதிடர்கள் ராகு கேதுவை கணக்கில் எடுப்பதில்லை. 


புராணத்தில் ராகுகேது 

கசியபரின் இரண்டாம் மனைவி திதியின் புதல்வி சிம்ஹிகையும், 5ம் மனைவி தனுவின் மகன் விப்ரசித்துவும் சகோதர சகோதரிகளாக இருந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிறந்தவன் தான் ஸ்வர்பானு என்ற அசுரபுத்திரன்.

இதற்கிடையில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்பொழுதும் தீராத பகை இருந்து கொண்டே இருந்தது. அசுர குருவான சுக்கிரன் போரில் மடிந்த அசுரர்களை உயி மந்திரத்தின் மூலம் உயிர்பித்துக் கொண்டேயிருந்தார். இதனால் அசுரர்களின் இனம் பெருகி கொண்டே இருந்தது. இதை கண்ட தேவர்கள் அச்சமடைய தொடங்கினர். தேவர்களுக்கு இப்படிப்பட்ட மந்திரங்கள் எதுவும் தெரியாததால் அனைவரும் ஒன்று கூடி யோசித்து இறவாமல் இருப்பதற்கு ஒருவழியை தேடி கண்டுபிடித்தார்கள். 

திருபாற்கடலை கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதை உண்டால் இறப்பு ஏற்படாது என அறிந்தனர். அமுதத்தை கடைந்தெடுக்கவும் அசுரர்களின் துணை தேவைப்பட்டதால் அசுர அரசனாகிய மகாபலி சக்கரவர்த்தியை இனங்க வைத்தனர். அசுரர்களும் தலைவனுக்கு கட்டுப்பட்டு அப்பணியில் ஈடுபட்டனர். மந்தரமலையை மத்தாகவும் கசியபருக்கு சத்துரு என்ற மனைவியின் மூலம் பிறந்த வாசுகி என்ற பாம்பரசனை கயிராகவும் பயன்படுத்தி கடைந்தனர். வாசுகி நிலைகுலைந்து கக்கிய விஷத்தை கடலில் கலக்காமல் இருக்க அதை சிவபெருமான் விழுங்கி நீலகண்டரானார். மீண்டும் பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து, காமதேன, வெள்ளை குதிரை, வெள்ளை யானை, ஐராவதம், கற்பக விருச்சம், தேவதைகள், அகவிகை, மகாலஷ்மி முதலியோர் வெளிபட்டனர். கடைசியில் தன் வந்தினி என்பவன் அமுத கலசத்துடன் வெளிவந்தான். அசுரர்கள் அமுதத்தை பிடுங்கிகொண்டு ஓடி ஒருவருக்கொருவர் பங்கிட்டு கொள்வதில் சண்டையிட்டனர். இந்த தருணத்தில் திருமால் மோகினி வடிவமெடுத்து அசுரர்களிடம் சல்லாபமாக பேசி அமிழ்தத்தை கைப்பற்றி தேவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கினார். தேவர்களின் சூழ்ச்சியை அறிந்த ஸ்வர்பானு தேவ குமாரன் போல வேடமிட்டு அமர்தத்தை வாங்கி உண்டான். இதை உணர்ந்த திருமால் கோபத்தால் கையிலிருந்த அகப்பையால் அவன் தலையை கொய்தார். அமுதத்தை உண்டதினால் ஸ்வர்பானுவுக்கு மரணம் நேரவில்லை. தலை அப்படியே இருக்க அதற்கு கீழே கருநாக உடலாகமாறியது. இது ராகு என பெயர் ஏற்பட்டது. அசுர உடல் அப்படியே இருக்க ஐந்துதலையுடைய நாகம் தலையாக மாறியது. இது கேது என பெயர் பெற்றது. இதனால் தேவ ராகவும் இல்லாமல் அசுர ராகவும் இல்லாமல் அவதிபட்டு பிரம்மனிடம சென்று வேண்டிய பின் ராகு&கேது தேவ மற்றும் அசுர குலத்திற்கு சமமாகவும், கேது மோட்சத்தை தருபவராகவும் மாறினார்கள்.

ராகு

ராகுபகவான் அசுர தலையையும், பாம்பு உடலையும் கொண்டவர். பெரும் பலசாலி சூரியனையே பலமிழக்க செய்பவர். அசுர ஸ்திரியின் கர்பத்தில் உதித்தவர். அதிகார ஆற்றலை அடைவதற்கு துணைபுரிவர். உலகியல் விஷயங்களில் அதில் ஆர்வம் உடையவர். உள்ளத்தை தெளிய வைப்பார். பயணங்களுக்கு காரகனாவார். அங்கும் இங்கும் சுற்ற வைப்பார். நீல நிறத்திற்கு காரணகர்த்தா. தென்மேற்கு திசையை ஆள்பவர். பஞ்ச பூதங்களில் வானம் இவரின் ஆதிக்கமாகும். புளிப்பு சுவையை விரும்புபவர். அதிர்ஷ்டம், பெண்கள் மூலம் உண்டாகும் சுகபோக வாழ்க்கை, செல்வம் செல்வாக்கு அனைத்தையும் அள்ளி தருவார். விதவை இவரது சின்னம். நீச பாஷைகளுக்கு உரியவர். அசிங்கமான வார்த்தைகளை பேச வைப்பவர் குருர சுபாவம் கொண்டவர். தந்தை வழி பாட்டன் வகையை குறிப்பவர். படபடப்பு கொண்டவர். கோமேதகம் இவரது ரத்தினம் செப்பிடு வித்தைக்கு சொந்தகாரர். சர்பம் இவருடைய ஆதிக்கம் மந்த புத்தி உடையவர்.

அதி நவீன நூதன பொருட்கள், ராடர் வான வீதியில் பறக்கும், விமானம், ஹெலிகாப்டர் இவற்றிக்கெல்லாம் காரணகர்த்தா, துப்பறியும் குணம் கொண்டவர். விரக்தி மனப்பான்மையையும் ஏற்படுத்துவார். கட்டம் போட்ட துணிகளை விரும்புகிறவர். 

எண்கணிதத்தில் 4&ம் எண்ணுக்கு சொந்தகாரர். அதிலும் குறிப்பாக சொல்லப்படுவது 13 ம் எண்ணாகும். 4ம் எண்ணுக்குரியவர்கள் எதிலும் தனித்தன்மை பெற்றவர்களாக இருப்பார்கள். சட்ட திட்டங்களுக்கு உட்படுவதை இவர்கள் விரும்புவதில்லை. எதிலும் மாறுபட்ட நோக்குடையவர்களால் இருப்பார்கள். 

விமானப்படை 

ஆகாயவிமானத்திற்கு ராகு காரகனாவார். அதனால் தானோ என்னவோ அவற்றில் பணிபுரிபவர்களுக்கு நீல நிறத்தில் ஆடை கொடுக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் ரஷ்யா 1957 ம் ஆண்டு சட்ருக் என்ற விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்தது இதன் கூட்டுதொகையை பாருங்கள்
1957 = 22 2+2=-4
பாம்பு கடித்தவுடன் உடல் நீலநிறமாக மாறிவிடுகிறது. பாம்புக்கு ராகு காரகனல்லவா விஷகடிகள், தற்கொலை எண்ணம் போன்றவைகள் ராகுவால் ஏற்படுகின்றன. நீல நிறத்தில் இருக்கும் மயில் துத்தத்தை தற்கொலை எண்ணம் உடையவர்கள் தின்று உயிர் விடுவதை எத்தனையோ கேள்வி பட்டிருக்கிறோமல்லவா?


இரசாயண பொருட்கள் 

இரசாயணத்திற்கு ராகு காரகத்துவம் வகுப்பதால் தான் துணி துவைக்கும் சோப்பு துணியின் வாசனைக்காக கம்பர்ட், துணியின் வெள்ளை நிறம் பளிச்சென தெரிய ஆலா போன்றவைகள் அனைத்தும் நீல நிறத்திலே தயாரிக்கப்படுகின்றன. 

அமெரிக்கா

ராகுவின் ஆதிக்கம் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா. எப்படி என பார்ப்போம். அமெரிக்காவின் மிகப்பெரும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி ஒரு விதவைப் பெண் அமெரிக்காவின் தேசிய சின்னமான கழுகுவின் இறக்கைகள் 13 உள்ளன. அமெரிக்கா சுதந்திரம் வாங்க காரணமாக இருந்தவரும் முதல் ஜனாதிபதிபதியுமான ஜார்ஜ வாஷிங்டன் பிறந்த தேதி பிப்ரவரி 13. அது போல பெண் மூலம் சுகத்தை கொடுப்பவர் ராகு. அமெரிக்காவில் யோகமும் போகமும் கொழிக்கிறது. கலாச்சாரம் என்ற பெயரில் யாரும் வேண்டுமானாலும் வாழலாம். இன்பத்தை அனுபவிக்கலாம். உலகில் தலைசிறந்த வர்ஜினியா புகையிலை விளைவது இங்குதான். பாஸ்டர் தேனீர் விருந்து நடந்ததும் இங்குதான். மது மாது என பல வகையில் சுக போகங்களை மக்கள் தடையின்றி அனுபவிப்பதும் இங்குதான். 

ராகு புலனாய்வு செய்வதில் கில்லாடி, உளவுத்துறையான சி.ஐ.ஏ. இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு அமெரிக்காவில் தீவிர வாதம் பரவாமல் தடுக்கிறது. முதன் முதலில் அணுகுண்டை பயன்படுத்தியதும் அமெரிக்கா தான். நாடுகளிலே வல்லரசாக திகழ்ந்து உளவுத்துறை, அதிகாரம், மற்றவர்களின் சூழச்சிகளையும், ரகசியங்களையும் கண்டு பிடிக்கும் ஆற்றல் போன்றவற்றில் அமெரிக்காவிற்கு நிகர் உண்டா. எப்படி வேலை செய்கிறார் ராகு பார்த்தீர்களா?

நோய்

புற்று நோய்க்கு காரணகர்த்தா ராகு. அது போல கதிரியத்திற்கும் காரகன் ராகு. முள்ளை முள்ளாள் எடுப்பது போல புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சை தானே பயன்படுத்தப்படுகிறது. அவர் நோய்க்கு அவரே மருத்துவமும் செய்கிறார். ராகுவின் லீலையே லீலைதானே.

No comments:

Blogger Gadgets