Monday, March 31, 2014

சச யோகம்


ஜெனன ஜாதகத்தில் யோகங்கள் சிறப்பாக அமைந்தால் தான் வாழ்வு மிக சிறப்பாக இருக்கும். நவ கிரகங்கள் ஆயுள் காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் சிறப்பாக அமைந்தால் ராஜ போக வாழ்வு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் மகரம் கும்பத்தில் அமைந்து ஆட்சி பெற்றோ, சனி துலாத்தில் அமைந்து உச்சம் பெற்று இருந்து சனி அமைந்த வீடு லக்கின கேந்திரமாகவே, சந்திர கேந்திரமாகவோ இருந்தால் சச யோகம் உண்டாகிறது. சச யோகம் ஆனது பஞ்சமகா புருஷ யோகத்தின் ஒரு பிரிவு ஆகும். ஆயுள் காரகனான சனியால் இந்த யோகம் உண்டாகுவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார். அது மட்டுமின்றி சமுதாயத்தில் கௌரவம் மிக்க பதவிகளை அடையும் யோகம் உண்டாகும். குறிப்பாக சச யோகம் உண்டானால் அரசனுக்கு ஒப்பான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என பண்டை கால நூல்கள் கூறுகிறது.

     பலரை வழி நடத்து உன்னத அமைப்பு, நல்ல அறிவாற்றல் மக்கள் செல்வாக்கு உண்டாகும். குறிப்பாக சக யோகம் உண்டாகிவருக்கு சனி மகா திசை நடைமுறையில் வந்தால் அவர்கள் வாழ்வை மிக சிறப்பாக இருக்கும். அது போல சுக்கிரன் லக்கினமான ரிஷபம், துலாத்தில் பிறந்தவர்களுக்கும், புதன் லக்கினமான மிதுனம், கன்னியில் பிறந்து சந்திர கேந்திரத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் சனி லக்னமான மகரம் கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சசயோகம் உண்டாகி சனி திசை வந்தால் வாழ்வில் மிகப் பெரிய ஏற்றம் உண்டாகும்.  சனிக்கு பகை கிரகமான சூரியன், செவ்வாய் லக்கினத்தில் (சிம்மம், மேஷம், விருச்சிகம்) பிறந்தவர்களுக்கு சனியால் உண்டாகும் யோகம், சனி திசை பலா பலன்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூறு முடியாது.

No comments:

Blogger Gadgets