Friday, March 14, 2014

ஜாதகத்தில் பெண்களின் அழகு நிலை :

                                                                                      இலக்கினத்துடன் செவ்வாய் ,சூரியன்,கேது சம்பந்தபட்டால் சிவப்பு நிறமானவர் .புதன் சம்பந்தபட்டால் சற்று கருப்பானவர் .குரு சம்பந்தபட்டால் பொன் நிறம் ஆனவர் .சுக்கிரன் ,சந்திரன் சம்பந்தபட்டால் வெளுப்பான நிறமாக பார்ப்பவரை மயங்க வைக்கும் அழகுடையவர் .சனி,ராகு சம்பந்தபட்டால் கருப்பு நிறமாகும் .சனி,கேது சம்பந்தபட்டால் அழகற்றவர்.புதன் சுக்கிரன் இணைந்து சம்பந்தபட்டால் பருமன் ஆனவர் .

குரு லக்கினத்தில் இருப்பது அழகான நீண்ட கருங்கூந்தலை உடையவர் .சனி அந்நிலையில் இருப்பது கருமை நிறமான ,அடர்த்தியான அனால் குட்டையான கூந்தலை தரும் .ராகு லக்கினத்தில் இருப்பது அழகு இல்லாத பெரிய தலையை தரும் .செவ்வாய் லக்கினத்தில் இருப்பது அழகற்ற குட்டையான கூந்தலையும் ,சுக்கிரன் இருப்பது அழகான கூந்தலையும் தரும் . லக்கினம் ,லக்கினாதிபதி பாவிகள் சம்பந்தம் ஏற்பட்டால் குட்டையான கூந்தலையும் வழுக்கையான தலையையும் உடையவர்கள்.

No comments:

Blogger Gadgets