Sunday, March 9, 2014

ஜோதிடப்பழமொழிகள் 



மகத்துப் பெண் முகத்துக்கு ஆகாது

மகத்தில் பிறந்த பெண் வெளிப்படையாக , நேரடியாக

பேசுபவராக இருப்பார். முகமும் கடுமையான

குணம் கொண்டவராக தெரியும்


ஆண் மூலம் அரசாளும்

ஆனி  மாதம் பிறந்த ஆண் குழந்தை

அவன் குடும்பத்தை ஆளுவான்.


உத்திரத்தில் ஒரு பிள்ளையும்

ஊர் ஓரத்து தோப்பும் நன்மை தரும்.

உத்திரத்தில் பிறந்த மகன்

தகப்பனாருக்கு உதவுவான்.


சுக்ர திசை சுழட்டி அடிக்கும்.

சுக்ரன் ஒரு சில லக்னத்த்ற்க்கு நல்லவனாகவும்

ஒரு சில லக்னத்திற்க்கு கெட்டவனாகவும் இருப்பார்.

இதன் படி பலன்கள் அமையும்.


சிம்மத்தில் ராகு சிம்மாசனத்தில் அமர வைப்பார்.

நல்ல பதவி/ நல்ல தொழில் அளிப்பார்,


கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்

கெட்ட கிரகஙகள் ஆறு  எட்டு  பன்னிரண்டு

ஆகிய இடங்களில் மறைந்தால் ராஜயோகத்தினை

அளிக்கும்.


அந்தணன் தனித்து இருந்தால்

அவதிகள் அதிகம் உண்டு

ராசியில் குரு தனித்து இருந்தால்

அவதிகள் அதிகம் உண்டு


கேட்டை கோட்டை கட்டும்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு

கண்டிப்பாக சொந்த வீடு/ ந்ண்பர்கள் குழாம்/

ரசிகர்கள் உண்டு.


இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே

இரவில் கூட செயலைச் செய்யலாம். ஆனால்

ராகு காலத்தில் மட்டும் செய்யக்கூடாது.


அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்

அவிட்ட நட்சத்திரக்காரர் பணம் சம்பாதிக்கும்

வழி வகைகளை நன்கு அறிந்தவராக இருப்பார்.


விதி போகும் வழியே மதி போகும்.

லக்னம் எப்படியோ அப்படியே மதி போகும்

No comments:

Blogger Gadgets