Tuesday, June 24, 2014

திருமண பொருத்தம்

       மானிடனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உலகில் உயிர் வாழும் வரையில் நீக்கமற நிறைந்து இருக்க்வேண்டியது வாழ்க்கையை சீறும் சிறப்போடும் வழிநடத்திச்செல்ல உரிமையுள்ள மணவி, ஜீவனம் செய்வதற்க்கு தொழில், இவற்றை அனுபவிக்க ஆயுள் இவை  இன்றியமையாததாக   ஒரு  ஜாதகருக்கு அமையும்.
      
        ஜாதகங்களில் 7ஆம் இடமே விவாகம் சம்பந்தமாகவும், கணவன்,  மணைவி இவர்களின் அன்னியோண்யம், ஒற்றுமையை உணர்த்தக்கூடிய ஸ்தானமகும்.ஏனென்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப வாழ்க்கையை நடத்த பெண்கள்தான் பிரதாணமடைகின்றனர்.

         இல்லாள்  அகத்திலிருக்க  இல்லாதாது தொன்றுமில்லை. என்பதற்கேற்ப பெண்களே கிரகலட்சுமியாகவும்,தர்மபத்தினியாகவும்,விளங்குகின்றனர்.இப்படி பட்ட பெண்கள் அமைவது என்பது அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படை யிலும் ,கர்மவினைப்படியும், விதிப்படியும்தான் அமையும் என்றாலும், அவ்விதியின் பலனை முன்கூட்டியே நிர்ணியிக்கும் ஆற்றல்  ஜோதிடபெருமக்களுக்கே உண்டு. அவர்கள்தான் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்தரிந்து விவாகத்தின் நிலைதனை நிலை நிறுத்த ஆண்டவ்ன் பொறுப்பை அவர்களிடம் கொடுத்திருக்கிறான்.

        ஜாதகம்  பார்க்காமல் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்பவர்கள் சிலர் மேன்மையும் ஜாதகம் பார்த்து விவாகம் செய்து கொள் பவர்கள் சிலர் சுகமென்பதையே அறியாது ஒற்றுமையின்றி தவிப்பதும் நாம் கண்கூடாக பார்க்கமுடிகிறது. இவற்றின் காரணம் தான் என்ன ?

        ஜாதகத்தை ஆராய்ந்து விவாகத்தை நிர்ணயிப்பது நம்மீது குற்றமா? அல்லது இது நல்ல இடம் என்னவானாலும் பரவாயில்லை இந்த  பெண்ணைத் தான் மனைவியாக்கவேண்டும் எனப் பணத்தாசை பிடித்த பெற்றோர்களின் குற்றமா? ஆனால் தீய பலன்கள் நடந்தேறினால் விதி என்ற் சொல்லை      பயண்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்து அந்த் தம்பதிகளூக்கு ஏதேனும் வாழ்க்கையில் தீங்கு நடந்தால் அந்த பாவம் நம்மைத்தான் சேரும் . அது மகாபாவம்சரி, செவ்வாய் தோஷத்த்தை மட்டும் முன்நிறுத்தி பேசுவதும் மற்ற கிரகங்களால் தாரதோஷ ம் ஏற்படாதாது போல் சிலர் கிரகங்களை ஆய்வு செய்கின்றனர். செவ்வாய்  மட்டுமின்றி மற்றகிரகங்களுக்கும் தாரநாசம் செய்யும் ஆற்றல் உண்டு.
            
         பொதுவாக திருமண பொருத்தம் பார்க்கும்போது ஆயுள், ஒற்றுமை, யோகம், இவைகளை பொருத்தமாக  உடைய ஜாதகங்களையே சேர்த்து விவாகம் செய்தால் அந்தம்பதிகளின் வாழ்க்கையில் நல்ல பலன்களை அடைய காரணமாகிறது. அதற்க்குத்தான் திருமணபொருத்தம் பார்க்கபடுகின்றது.திருமணம் என்றவுடன் ஆண்,பெண் இரு ஜாதகங்களையும் நம் முன்னோர்களின் கூற்றுப்படி அல்லது அவர்களின் வழிப்படி நட்சத்திர பொருத்தத்தையே பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு பொருத்தம் பார்த்து விவாகம் செய்து கொண்டவ்ர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையில் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது இதன் காரணமென்ன? .நட்சத்திர பொருத்த்த்தை விட கிரக  பொருத்தமே தம்பதிகளின் நல்வாழ்விற்க்கு வழிகாட்டகூடியதாக இருக்கும் . 

       நம் ஜோதிட சாஸ்திரத்தின் விதிப்படி பொருத்தங்கள் பார்த்து இணைத்து வைத்தாலும் கிரகங்கள் பலரை பலவிதமான நிலைக்கு கொண்டு சென்று கஷ்டப்படுத்துவது ஏன் என்றால் ஜாதக  ஆய்வில் நாம்செய்யும் தவறுதான்.
  
       திருமணபொருத்தத்தில் அதிஉன்னத நிலையை அடைவது லக்கினமே. லக்னம்தான் ஒருவனை திருமணம் செய்யத் தகுதி உடையவனாக , குடும்பத்தை காப்பாற்றும் ஆற்றல் உடையவனாக , சமுகத்தில் மரியாதை பெறக்கூடிய கர்ம மேன்மை கொண்டவனாக  என்பதையெல்லாம் விளக்கும் ஓர் அற்புத பொக்கிசமாகும். அதனால் லக்னத்தை முதலில் ஆய்வு செய்து இந்த பெண்ணிற்க்கு இந்த மணமகன் பொருத்தமாணவன். இவனுக்கு திருமணம்  செய்துவைத்தால் கணவன் மணைவிகுள் ஒற்றுமையும் எல்லாவிதமான யோகங்களும் ஆயுள் பலமும் பெறுகிறது. எனவே இவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற் முடிவுக்கு வரவேண்டும்.இல்லையேல் அதனை விலக்கி வேறொரு  பொருத்தம் பார்க்கவேண்டும்.

           1)ஒரு பெண்ணின் ஜாதகத்தில், ஜாதகரின் லக்னாதிபதியோ அல்லது லக்னாதிபதி நின்ற சாரநாதன்  6,8,12,ஆமிடங்களில்,நின்றாலும், ஜாதகரின் ஜாதகத்தில் பெண்ணின் லக்னாதிபதியோ, லக்னாதிபதி நின்றசாரநாதன் 6,8,12 ஆமிடங்களில் நின்றாலும் இருவருக்கும் ஒற்றுமை இருக்காது.

    2)பெண்ணின் ஜாதகத்தில் பையனின் 6,12 க்குடையவர்கள் நின்றாலும், பையனின் ஜாதகதில் பெண்ணின் 6,12 க்குடையவர்கள் நின்றாலும் ஒற்றுமை இருக்காது

     3)பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் சனியிருந்து ஆணின் ஜாதகத்தில்  7ல் செவ்வாய் நின்றாலும், பெண்ணின் ஜாதகத்தில் சனியிருக்கும் வீட்டில் ஆணின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தாலும், 6,8,12 ஆம் இடங்களில் இவர்கள் சேர்க்கை இருப்பினும், இவர்களது  தசா, புத்தி காலங்களில் வேதனையை கொடுத்துவிடுகிறது.

     4) ஆணின் ஜனன கால தசாநாதன்,பெண்ணின் ஜாதகத்தில் 6,8,12, குடை யவர்களாகவோ, பெண்ணின் ஜனன கால தசாநாதன் ஆணின் ஜாதகத்தில் 6,8,12 க்குடையவராகவோ இருப்பின் இல்வாழ்க்கை பிரிவினையை கொடுத்துவிடுகின்றது . ஜாதகத்தில் லக்னரீதியாக  பொருத்தம் பார்ப்பதில் சில அணுகுமுறையை நாம் மாற்றி அமைக்கவேண்டும்.

    5)ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் இருவருடைய லக்னாதிபதியோ, இராசியதிபதியோ ,அதேபோன்று சப்தமதிபதிகளும் சஷ்டாஷ்டமம் கூடாது. 

     6) இருவருடைய ஜாதகங்களிலும் லக்னாதிபதியோ,சப்தமஸ்தானதிபதியோ ஜென்ம நட்சத்திரதிபதியோ 4,10, எனும் கேந்திரம் பெற்றால்,இருவருக்குள்ளும் நேசம் குறைந்து இருக்கும்.சலிப்புத்தன்மை குடிகொள்ளும்.

   7) இருவருடைய இராசி, லக்னம், 6,8,12, அமைதல் கூடாது.

   8)பெண்ணின் ஜாதகத்தில் 7 ல்நிற்கக்கூடிய கிரகத்தின் நட்சத்திரத்தில் பிறந்த வரனை இணைத்தாலும், ஆணின் ஜாதகத்திலும் 7ல் நிற்க கூடிய கிரகத்தின் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை இணைத்தாலும், ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் பிரியாது வாழ்வர்.

    9) 7ல் நிற்க்க்கூடிய கிரகம் நின்ற சாரநாதனின் லக்னத்தில் பிறந்தவர்களாக  இருந்தாலும்,1,3,5,7,9,11,ல் நிற்க்கக்கூடிய கிரகத்தின் நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகர்களையும் வாழ்வில் இணைத்தால் பிரியமாகவும்,சந்தோஷமாகவும், வாழ்வதை அனுபவத்தில் பார்க்கமுடிகிறது.

     10)  இராசிகளும், லக்னமுமும்,ஒருவருக்கொருவர் சப்தம ஸ்தானமாக அமைந்தால் அதில் எந்த மாறுபடும் இல்லை.

      11) ஆணின் லக்னாதிபதி பெண்ணின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 மிடங்களில் இருந்தாலும், அல்லது பெண்ணின் லக்னாதிபதி ஆணின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆம் இடத்தில் இருந்தாலும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

      12)பெண்ணின் ஜென்ம இரசியானது ஆணின் ஜென்ம லக்னமாகவோ , ஆணின் ஜென்ம இராசியானது பெண்ணின் ஜென்ம லக்னமாகவோ அமைந்தால் ஒருவருக்கொருவர் ஆழமான அன்புடன் வாழ்வதை பார்க்கலாம்.

      13)ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீட்டில் பெண்ணின் லக்னமாகவோ, இராசியாகவோ அமைவது நேசித்த வாழ்வுக்கு வழிபிறக்கும்.

      14) இருவருடைய ஜாதகத்திலும் நடப்புதசாநாதனும், வருங்கால தசா நாதனும் 6,8,12 க்குடையவர்களாயின் பிரிவிணையை கொடுத்துவிடும்.

     15) ஜென்ம லக்னத்திலோ,இரண்டாம் இடத்திலோ சனியிருந்து, பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் எவ்வளவு செல்வந்தர்களாக  இருந்தாலும் கஷ்டத்தை கொடுத்துவிடுகிறது. பொருத்தத்தில் இது அவசியம்.

     16)பெண்ணின் ஜாதகத்தில் 4 ல் சூரியன்,செவ்வாய்,புதன்,சந்திரன் நிற்க   ஆணின் ஜாதகத்தில் சனியோ,கேதுவோ இருப்பின் கணவன் நல்லறம் தேடி பற்றற்று துறவறம் பூணுகிறான்.

    17) பெண்ணின் ஜாதகத்தில் 10ல் சனியிருந்து ஆணின் ஜாதகத்தில் அதே இராசியில் புதன் கேது இருப்பின் கணவனை ஆண்மையற்றவனாக்கி இருவரையும் பிரித்துவிடுகிறது.

   18) பெண்ணின் ஜாதகத்தில் 5ல் சனி,செவ்வாய் நிற்க ஆண் ஜாதகத்தில் அதேவீட்டில் சூரியனும், புதனும் நிற்க குழந்தை பிறந்து இறந்துகொண்டே இருக்கும். இதை இணைப்பது பாவமாகும்.

   19) 5,11,மிடங்களில் குரு,சுக்கிரன் நிற்க பிறந்த ஜாதகர்கள் வாழ்வில் சட்டத்திற்கு  புறம்பான  முறையில் இரண்டுதாரம் அமைய இருபாலருக்குக்மே வழி செய்துவிடுகிறது.

   20)இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன், சந்திரன் இனைவு நல்ல இணக்கத்தையும் அன்பையும் கொடுக்கும்.

   21) பெண்ணின் ஜாதகத்தில் ஏழுக்குடையவர் குரு,புதன், சுக்கிரன்,சந்திரன் இவர்களுள்  யாரெனும் 4,7,10,5 ஆகிய ஸ்தானங்களில்   அல்லது, உச்ச ஸ்தான வீட்டில்  அல்லது தன் சொந்த வீட்டிலிருந்தால் சகல சொளபாக்கியங்களுடன் வாழ்வார்கள்.

   22) களத்திர காரகன் சுக்கிரன் இருவருடைய ஜாதகத்திலும் அதாவது பெண்னின் ஜாதகத்தில் நிற்க்கும் சுக்கிரன் ஆணின் ஜாதகத்தில் 1,5,9,11 மிடங்களில் இருந்தாலும்,ஆணின் ஜாதகத்தில் நிற்க்கும் சுக்கிரன் பெண்ணின் ஜாதகத்தில் 1,5,9,11 மிடங்களில் இருப்பின் அன்புடன் வாழ்வார்கள்.

  23)  எந்த இராசி எந்த ல்க்னமாயினும்,துலாஇராசியில் சுக்கிரன், ராகு,சனி செவ்வாய் இவர்களின்  காமத்தை ,கர்ப்பத்தை தடை  செய்யும். திருப்தியற்ற வாழ்க்கையை கொடுத்துவிடும்.

 24) ஒவ்வொரு ஜாதகத்திலும் துலாத்தில் 2 பாகை முதல் 5 பாகை வரை   எந்த கிரகம் நிற்க்கிறது என்பதை இருபாலருக்கும் பார்த்து அதற்க்கு ஏற்றார் போல் திருமணப்பொருத்தம் பார்க்கவேண்டும்.

  25) பெண்ணின் பிறந்த  ஜென்ம நட்சத்திரநாதன் ஆணின் ஜாதகத்தில் நீச்சமாகியிருந்தாலும், ஆணின் ஜென்ம நட்சத்திரநாதன் பெண்ணின் ஜாதகத்தில் நீச்சமாகியிருந்தாலும், தசவித பொருத்தம் இருந்தாலும் ,கிரக பொருத்தம் இருந்தாலும், இணைக்க கூடாது.

No comments:

Blogger Gadgets