Tuesday, June 3, 2014

பெற்றோரின் ஜாதக ரீதியாக மருமகன் – மருமகள் அமைவார்களா?


ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால்அவர்கள் களத்திரஸ்தானத்தில் அல்லது குடும்பஸ்தானத்தில் குறைஇருக்கலாம் – அதனால் தடைப்படலாம்.
ஜாதகத்தில் தோஷம் இருக்கலாம்அதனாலும்தடைப்படலாம்சரிஆண் அல்லது பெண்ணின்ஜாதகத்தில் திருமண தடை இருந்தாலும்,அவர்களுடைய பெற்றோரின் ஜாதகத்தில்,லக்கினத்திற்கு 11-ம் ஸ்தானத்தை பார்த்தால்மருமகன் –மருமகள்வீட்டில் காலடி எடுத்து வைப்பார்களாஎன்பதை கண்கூடாக கணித்து விடலாம்.

தாயாருடைய ஜாதகத்திலோ அல்லது தந்தையின்ஜாதகத்திலோ லக்கினத்திற்கு 11-ம் இடம் சுபிக்ஷமாகஅதாவது லக்கினாதிபதியோ 2,4,5,7,9,10,11-க்குடையவனோ அமர்ந்திருந்துபாவ கிரகங்கள் பார்வைபடாமல் இருந்தால் விரைவில் பாத பூஜை நடக்கும்.அதாவது மருமகளோமருமகனோ இல்லத்தில் காலடிஎடுத்து வைப்பார்கள்.

லக்கினத்திற்கு 11-ம் இடத்தில் பாபி எனப்படும் இராகுஅல்லது கேது இருந்தாலும்அந்த வீட்டுக்குரிய கிரகம்நல்ல ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால்மகன் அல்லதுமகளுக்கு திருமணம் நிச்சயம் நடக்கும்.

அப்படி இல்லாமல்லக்கினத்திற்கு 11-ல் 12-க்குரியவன், 8-க்குரியவன், 6-க்குரியவன் சுபர் பார்வை இல்லாமல்இருந்தால்திருமண தடை நீண்டுக்கொண்டே போகும்.அதனால்திருமண வரன் சீக்கிரம் அமையுமா எனதெரிந்துக்கொள்ள பெற்றோரின் ஜாதகத்தில் 11-ம்இல்லத்தை வைத்தும் அறிந்துக்கொள்ளலாம்.

சரி. 11-க்குரியவன் 6,8,12-க்குரியவனாகவோ அல்லது 11-க்குரியவன்நீச்சஸ்தானத்தில் இருந்தால்  அந்தவீட்டுக்குரியவன் கேந்திரம் – திரிகோணம் ஏறினால்மருமகளோ – மருமகனோ நல்லமுறையில் இல்லத்தில்காலடி எடுத்து வைப்பார்கள்.

அதனால் பிள்ளைகளின் ஜாதகத்தில் திருமண தடைஇருந்தாலும்பெற்றோரின் ஜாதகப்படி கிரகங்கள்சாதகமாக இருந்தால் பிள்ளைகளுக்கு திருமண யோகம்எளிதில் அமையும் எனலாம்!

No comments:

Blogger Gadgets