Tuesday, June 24, 2014


கௌரி யோகம்


ஒரு ஜாதகத்தில் இருக்கவேண்டிய யோகத்தில் சிறப்பானது கௌரி யோகம்.
கௌரி யோகமானது ஒரு ஜாதகத்தில் எப்படி அமையப்பெற்று ஜாதகரை சிற
ப்படைய செய்கிறது என்பதை பற்றி ந்ம் முன்னோர்களின் கூற்றுப்படி ஆராய்
ந்தறியும் போது லக்னத்திற்க்கு பத்துக்குடையவன் நவாம்சத்தில் நின்ற வீட்டதிபதி ஜென்ம லக்னத்திற்க்கு பத்தில் உச்சம் பெற்றிருக்குமேயானால் கௌரி  யோகமானது சித்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் இப்படி அமையப்பெற்ற ஜாதகர்கள் உலகில் உள்ள ஜனங்களை காக்கின்றவராகவும்
சகல சௌபாக்கியங்களையும் அடையப்பட்டவராகவும், நல்ல குழ்ந்தைகளை
பெற்றவராகவும்,உலகில் அவருக்கு ஜன சமுத்திரத்தில் நன் மதிப்பை பெற்றவராகவும் எல்லோராலும் போற்றப்படுகின்ற வாழ்த்துவதற்குறிய  தகுதி
யை அடைந்தவராகவும் சிறப்பிக்கப்படுகின்றார் என்று அறியப்படுகின்றது.


         இதனையே நமது பழந்தமிழ் நூல்களில் எடுத்துரைக்கும் போது கேந்திரத்திலோ, திரிகோனத்திலோ தனக்குரிய ஆட்சி அல்லது உச்ச வீட்டில் இருக்கும் சந்திரனைகுரு  பார்த்தால் கௌரியோகமென்று கூறுவதும் உண்டு.
இவ்வாறு அமையும் போது எந்த ஒரு ஜாதகத்திலும் ஒரு ஜாதகர் யோகத்தை
அனுபவிக்க வேண்டுமானால் குருவும்,சூரியன்,சந்திரன் நன்னிலையில் இருக்க வேண்டும். பொதுவாக இராஜ கேந்திரங்கள் என்று சொல்லப்படுகின்ற
மேஷம்,கடகம்,துலாம்,மகரம், அதிமுக்கியமாக  ஜோதிட சாஸ்த்திரத்தில்
இடம் பெறுகின்றன். இந்நான்கு கேந்திரத்திலும் உச்சமடைகின்ற கிரகங்களான  சூரியன், குரு,சனி,செவ்வாய் ஆகிய் நால்வரும் ஜோதிட சாஸ்திரத்தில்
அதி உன்னத  இடத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றனர்.இவற்றுள் ஒருவரேனும் சாதகசக்கரத்தில் நீச்சமோ,அஸ்த்தங்கமோ, அல்லது 6,8,12 லோ இருப்பார்களேயானால் என்னதான் ஜாதகத்தை யோகம் என்று சொன்னாலும் ஜாதகர்
யோகத்தை அனுபவிக்க முடியாது.மேலும் பஞ்சமகா புருஷ யோகமென்று
சொல்லப்படுகின்ற ருசக  யோகம்,பத்ர யோகம், ஹம்ஸயோகம், மாளவியா
யோகம், சச யோகம், போன்ற யோகங்களும், இந்த சூரிய சந்திரனுக்கு
மற்ற கிரகங்களால் கொடுக்கப்படக்கூடிய யோகமாகும். இவையல்லாது இந்த  
யோகங்கள் அனைத்தும்  காலபுருஷத்துவத்தின்ப்டி அமைவதால் தான்
சித்தியளிக்கிறது. இப்படி ஆராயும் போது, ல்க்னம் தன்நிலை இழக்காது இருக்க  வேண்டும். சூரியனும்,சந்திரனும், நன்றாக் இருக்க வேண்டும். 5,9, க்கு
உடையவர்கள் நன்றாக இருக்கவேண்டும். அதை விட்டால்  குரு எந்த விதத்திலும்
6,8,12 லோ, நீச்சமோ அடையாமல் இருக்குமானால் ஜாதகர் யோகத்தை
அனுபவிக்க முடியும்.


        இவ்வாறு யோகத்தை ஒரு ஜாதகர் அடைவது பல வழிகள் உள்ளன.
அறிவு, செல்வம், தியாகம், கடமை இந்த நான்கு நிலைகளிலிருந்து நானூறு
ஆயிரம் விதிமுறைகளை ஜோதிட சாஸ்த்திரத்தில் குறித்திருக்கிறார்கள்.
அவற்றை எல்லாம் மனிதன் மனதில் கொள்ள முடியாது. என்றாலும் இந்த 
நான்கு வழிகளில்தான் மனிதன் நிலைகளை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.


       ஒருமனிதன் தன்னை பிரபலப்படுத்துவதும், தாழ்மை படுத்துவதும்
இந்த நான்கு நிலைகளுக்குட்பட்டுத்தான் என்பது நமக்கு புலனாகிறது. இதில்
கௌரியோகத்தை நம் முன்னோர்களின் கூற்றுப்படி லக்னத்திற்க்கு பத்துக்குடையவர்  நவாம்சத்தில் நின்றவீட்டதிபதி ,ஜனன  ஜாதகத்தில் பத்தில்
உச்சம் பெற்றிருந்தால் கௌரி யோகம் என்று கூறியிருந்தாலும் இதனை
ஆய்வு செய்து பார்க்கும்போது சூரியனுக்கு திரிகோணாதிபதி ஜென்ம லக்னத்திற்க்கு பத்தில் நிற்க, அந்த வீடானது சூரியனுடைய  உச்சவீடாக  இருந்தால் நன்கு பிரகாசமான  வாழ்க்கையும், மக்களை ஈர்க்கும் சக்தியை பெற்று புகழடைகிறார்கள். குருவின் உச்சவீடானால் செல்வ செழிப்பு பெற்று
வாழ்ந்தாலும் சாஸ்த்திர சம்பிரதாயங்களில், நிதி, மற்றும் நீதித்துறைகளிலும்
முதலிடம் பெற்று முதன்மையான் இட்த்தை பெற்று திகழ்கிறார்கள். சனியின்
உச்சவீடானால் தனக்காக இல்லாமல் மற்றவர்களூக்காக் வாழ்ந்து தன்னை அர்ப்பணீத்து தியாகி என்ற மறியாதையுடனும், செவ்வாயின் உச்சவீடானால்
தான் கொண்ட உத்தியோகத்துறையில் முதன்மையான் இடத்தையோ, அல்லது தலைமையை அலங்கரிக்ககூடியவர்களாக் இருக்கிறார்கள் இவ்வாறு
கொளரி யோகம் சித்திக்கின்றது

No comments:

Blogger Gadgets